என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Automobile"

    • நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம் உடன் வருகிறது.
    • கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது

    பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான போர்ஷே தனது ஐந்தாவது தலைமுறை மின்சார சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.

     இந்த கிராஸ் (Cross) இ-பைக் சைக்கிள் மொத்தம் நான்கு வகைகளில் வருகிறது.

    ஆரம்ப நிலை மாடலான, கிராஸ் ( £4,994), கிராஸ் பெர்பார்மன்ஸ் (£7,471), கிராஸ் பெர்பார்மன்ஸ் EXC மற்றும் பிரீமியம் மாடலான ஸ்போர்ட் ( £8309) விலையுடன் முறையே அறிமுகமாகியுள்ளன.

    4 கிராஸ் மாடல்களும் மிகவும் ஒத்தவையாகவே உள்ளன. அனைத்தும் ஒரே மாதிரியான ஷிமானோ (SHIMANO) EP801 மோட்டாரைக் கொண்டுள்ளன. 62lb அடி முறுக்குவிசை, நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம், 12-ஸ்பீட் கியர்ஷிஃப்ட், சைக்கிளின் முன்னாள் மற்றும் பின்னால் சூப்பர்-ப்ரைட் விளக்குகள் மற்றும் இலகுரக கார்பன் வீல் செட்கள் இடம்பெற்றுள்ளன.

    கிராஸ் அடிப்படை மாடலில் டிரெயில் டிஸ்க் பிரேக்குகள், ஒரு சிறிய 504Wh பேட்டரி மற்றும் ஒரு டெலஸ்கோபிக் சீட் போஸ்ட் ஆகியவை உள்ளன. கிராஸ் பெர்பார்மென்ஸ் மாடலில் நான்கு-பிஸ்டன் மகுரா டிஸ்க் பிரேக்குகள், கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது

    பிரீமியம் மாடலான ஸ்போர்ட் வேரியண்டில் கிராஸ் பெர்பார்மென்ஸ் அம்சங்களுடன் சேர்ந்து, 21.6 கிலோகிராமே எடை கொண்ட அல்ட்ரா-லைட் கார்பன் பிரேம் இடம்பெற்றுள்ளது.

    இந்த பிரீமியம் ஸ்போர்ட் வேரியண்டில் உள்ள அதிக முறுக்கு-எதிர்ப்பு கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் 120 மில்லிமீட்டர் டிராவலுடன் கூடிய சூப்பர் ஃபேன்ஸி சஸ்பென்ஷன் ஃபோர்க் உள்ளது. பயணிக்கும்போது கை மற்றும் கால் வலியை குறைக்கும் வடிவமைப்புடன் ஸ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது. 

    • முன்னதாக EMotorad ,Cars24, Khatabook உள்ளிட்ட நிறுவனங்களில் டோனி முதலீடு செய்திருந்தார்
    • வாடகை வாகன சர்வீஸ்களை தனித்துவமான வகையில் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வழங்கும் குறிக்கோளுடன் இயங்குவருகிறது

    இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகிறார். முன்னதாக EMotorad ,Cars24, Khatabook உள்ளிட்ட நிறுவனங்களில் டோனி முதலீடு செய்த நிலையில் தற்போது ஸ்டார்ட்டப் நிறுவனம் ஒன்றில் அதிகளவில் டோனி முதிலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஷ்டார்டப் ஆக தொடங்கப்பட்டு இயங்கி வரும் மின்சார வாகன நிறுவனம் புளூமார்ட்[BluSmart]. வளர்ந்து வரும் இந்நிறுவனம் ஓலா ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் அளிக்கும் வாடகை வாகன சர்வீஸ்களை தனித்துவமான வகையில் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வழங்கும் குறிக்கோளுடன் இயங்குவருகிறது. தற்போதைக்கு டெல்லி,குருகிராம், நொய்டா, பெங்களூரு ஆகிய நகரங்களில் எலெக்ட்ரிக் கார் வாடகை சேவைகளை வழங்கிவரும் புளூமார்ட் இந்த வருட இறுதிக்குள் மும்பையில் தனது சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

     

    இந்த வருடத்துன் தொடக்கத்தில் துபாயிலும் தனது சேவையை புளூமார்ட் அறிமுகப்படுத்தியிருந்தது. ப்ரீ சீரிஸ்  நிதியுதவி சுற்று மூலம் புளூஸ்மார்ட் சுமார் 250 மில்லியன் டாலர்கள் முதலீடுகளை தற்போதுவரை ஈர்த்துள்ளது.

    மேலும் ரூ.550 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறது. பெரு நிறுவனங்களில் அல்லாமல் வளர்ந்து வரும் நிறுவனங்களில் டோனி தொடர்ந்து முதலீடு செய்து வருவது கவனிக்கத்தக்கது. வளர்ந்து வரும் சந்தையில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புளூஸ்மார்டின் மின்சார வாகன சேவை பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • சவூதி அரேபியாவில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.
    • குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண் தங்கியிருக்கும் பகுதியில் வசிக்கின்றனர்.

    பணத்துக்காக தனது மனைவியை நண்பர்கள் பாலியல் வன்புணர்வு செய்ய கணவன் அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் குலாதியைச் சேர்ந்த நபரை அந்த பெண் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர்.

    பெண்ணின் கணவர் வளைகுடா நாடான சவூதி அரேபியாவில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை தான் வீட்டிற்கு வருவார்.

    இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களில் கணவரின் இரண்டு நண்பர்கள் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் நண்பர்கள் இருவருடன் வீட்டுக்கு வந்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்ததாக அவரது புகாரில் கூறியுள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண் தங்கியிருக்கும் பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் தன்னை வன்கொடுமை செய்யும்போது அதை வீடியோ பதிவாக தனது கணவர் சவூதி அரேபியாவில் தனது மொபைல் போனில் பார்ப்பார் என்றும் புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

    அவர் என்னை விவாகரத்து செய்வதாக மிரட்டியதால், எனது குழந்தைகளுக்காக நான் அமைதியாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கணவர் சவூதியில் இருந்து திரும்பி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கொடுமை பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.

    எனவே அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் புலந்த்ஷாஹர் மூத்த போலீஸ் சூப்பிரண்டு ஷ்லோக் குமாரைச் சந்தித்து தங்களின் துயரத்தை விவரித்தனர். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் BHARAT MOBILITY EXPO வாகன கண்காட்சி நடைபெற்றது.
    • இந்த வாகன கண்காட்சியில் தமிழ்நாட்டில் இருந்து பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

    இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் EV தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், டெல்லியில் நடைபெற்றுவரும் BHARAT MOBILITY EXPO 2025 வாகன கண்காட்சியை கண்டு வியந்தேன். இந்த வாகன கண்காட்சியில், தமிழ்நாட்டில் இருந்து பல நிறுவனங்கள் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது உற்சாகம் அளிக்கிறது

    ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், அசோக் லைலேண்ட், பி.எம்.டபுள்யூ., டி.வி.எஸ். உட்பட பல வாகன நிறுவனங்களை பார்வையிட்டேன்.

    இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் மின்சார வாகனத்தின் (EV) தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது

    வின்ஃபாஸ்ட் கார் நிறுவனத்தில் ஆலையை தூத்துக்குடிக்கு கொண்டு வந்தது நமது தலைவரின் விரைவான முடிவெடுக்கும் திறமையால் சாத்தியமானது. மேலும் இந்த முதலீட்டை தென் தமிழகத்திற்கு கொண்டு வந்ததில் நானும் தனிப்பட்ட முறையில் எப்போதும் பெருமைப்படுவேன்

    நேற்று அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட VF6 மற்றும் VF7 ஆகியவை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தூத்துக்குடி ஆலையில் இருந்து உற்பத்தி செய்து வெளிவரலாம் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை ஏப்ரல் மாதம் முதல் மாற்றப்போவதாக அறிவித்துள்ளது. #Toyota



    டொயோட்டா இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. உதிரி பாகங்களின் விலை அதிகரித்து வருவதே கார் விலையை உயர்த்துவதற்கான காரணமாக டொயோட்டா தெரிவித்துள்ளது. புதிய விலை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது. 

    உற்பத்தியில் விலை குறைக்க நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. உதிரி பாகங்களின் கட்டணம் தொடர்ந்து அதிகமாகி வருவதால் விலை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனினும், தொடர்ந்து விலையை குறைக்கும் முயற்சிகளை டொயோட்டா மேற்கொள்ளும் என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் ராஜா தெரிவித்திருக்கிறார். 

    எந்தெந்த கார்களின் விலை எவ்வளவு அதிகரிக்கப்படுகிறது என்பது பற்றி டொயோட்டா சார்பில் இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை. புதிய விலையை விற்பனையின் போது அமலாக்கிக் கொள்ள டொயோட்டா முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.



    சமீபத்தில் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்டாவின் புதிய மாடலை அறிமுகம் செய்தது. புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் வேரியண்ட் இந்தியாவில் ரூ.15.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எட்டு பேர் அமரக்கூடிய காரும் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ஜி பிளஸ் வேரியண்ட் இன்னோவா க்ரிஸடா மாடல்களில் பேஸ் வேரியண்ட் ஆகும். ஜி பிளஸ் வேரியண்ட் தனியார் மற்றும் போக்குவரத்து பயன்பாடு என இருவிதங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ஜி வேரியண்ட் போக்குவரத்து பயன்பாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

    புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 343 என்.எம். டார்க் செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் வேரியண்ட் மூலம் இன்னோவா பேஸ் வேரியண்ட் விலை ரூ.38,000 வரை குறைந்திருக்கிறது.
    நாம் பயணம் செய்யும் கார்களுக்கு மேற்கொள்ளப்படும் கிராஷ் டெஸ்ட் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #CrashTest



    நாம் வெளியூர்களுக்கு பயனிக்கும் நேரத்தை சவுகரியமாக்கியதில் கார்களின் பங்கு மிக அதிகம். கார்கள் பாதுகாப்பு கொண்டவைதான் என்பதை யாராவது சான்று அளித்தால்தான் நம்பிக்கை வரும். அதற்குத்தான் ‘கிராஷ் டெஸ்ட்’ எனப்படும் மோதல் சோதனை நடத்தப்படுகிறது. 

    கார்கள் விபத்தை சந்திக்க நேர்ந்தால் அதில் பயனம் செய்வோர் எந்த அளவுக்கு பாதுகாப்பாக உள்ளனர் என்பதை இந்த கிராஷ் டெஸ்ட் உறுதி செய்கின்றன. சோதனைகளின் முடிவில் இவற்றுக்கு நட்சத்திர குறியீடு அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கார்களைத் தேர்வு செய்யலாம். இதுபோன்ற கிராஷ் டெஸ்ட்களை நடத்துவதற்கு சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனங்கள் உள்ளன. 

    கார்களில் பயணிகளுக்குப் பதிலாக மனித உருவிலான பொம்மைகள் (டம்மி) பயன்படுத்தப்படும். மனித உருவில் மட்டுமின்றி மனிதனின் சதைப் பகுதி, எலும்பு, உடலின் பிற பாகங்கள், தலைப் பகுதி என அனைத்தும் அசல் மனித உறுப்புகளைப் போலவே இருக்கும். இதனால் வாகன சோதனையின்போது இந்த பொம்மைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை அளவிட்டு அதன் அடிப்படையில் வாகனத்தின் பத்திரத்தன்மை உறுதி செய்யப்படும்.

    சோதனை நடத்துவதற்காக கார்கள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இயக்கப்படும். பெரும்பாலும் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் கார்கள் இயக்கப்பட்டு மோதல் சோதனைக்கு உள்ளாக்கப்படும். பொதுவாக முன்பக்கத்தில் சோதனை நடத்தப்படும். மிகவும் உறுதியான கான்கிரீட் சுவர்மீது நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் கார் வந்து மோதினால் அது எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பது சோதிக்கப்படும். 



    இத்தகைய மோதலின் போது காரினுள் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் சோதிக்கப்படும். வழக்கமான கார்களுக்கு ஒரு விதமாகவும், எஸ்.யு.வி. கார்களுக்கு ஒரு விதமாகவும் இந்த சோதனை நடத்தப்படும். அதாவது கார்களின் உயரத்துக்கேற்ப முன்புற மோதல் நிகழ்வு பொருள் மாறுபடும்.

    பக்கவாட்டில் மோதல் ஏற்பட்டால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும். அது எந்த அளவுக்கு வாகனம் தாக்குப்பிடிக்கிறது என்பதை சோதிக்க ஓவர்லாப் சோதனை நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து கார் உருண்டு விபத்தை சந்திக்க நேர்ந்தால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதும் சோதிக்கப்படுகிறது. காரின் கதவுகள், மேல் பகுதியை இணைக்கும் தூண்கள் எந்த அளவுக்கு ஸ்திரமாக உள்ளன என்பது இதில் தெரியவரும்.

    வழக்கமான சாலைகளில் காணப்படும் பொருள்கள் நிறைந்த பகுதியில் மோதல் நிகழ்ந்தால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதும் சோதிக்கப்படும். விபத்து ஏற்படும்போது தலையில் எந்த அளவுக்கு காயம் ஏற்படுகிறது என்பது கவனத்தில் கொள்ளப்படும். அடுத்து மார்பு பகுதியில் எந்த அளவுக்கு விபத்தின் பாதிப்பு இருக்கிறது என்பது சோதிக்கப்படும். கால் மற்றும் தொடைப் பகுதியில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் ஆராயப்படும்.

    ஃபோக்ஸ்வேகன் போலோ, டொயோட்டா எடியோஸ், டாடா ஜெஸ்ட் ஆகிய கார்களே இத்தகைய சோதனையில் நட்சத்திரக் குறியீட்டைப்பெற்றிருக்கின்றன. இனிவரும் காலங்களில் பாதுகாப்பான வாகனம் என்பதற்கான சான்று பெற்றால் மட்டுமே அவற்றை சாலைகளில் இயக்க அனுமதிக்கப்படும் என்ற விதிமுறைகள் படிப்படியாக கட்டாயமாக்கப்படலாம். கிராஷ் டெஸ்ட் சோதனையில் வெற்றி பெற்ற கார்களில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்ற நிலை உருவாகிவிடும்.
    இந்தியாவில் தற்சமயம் விற்பனையாகும் கார்களில் ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும் பாதுகாப்பான கார்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். #Car
    சாலை போக்குவரத்தின் முக்கிய அம்சமாக கார் மாறிவிட்டது. தனி நபர் போக்குவரத்திலும் காரின் பங்களிப்பு அவசியமான ஒன்றாகி இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் தங்களது குடும்பத்துடன் பயணிக்க கார் ஏதுவானதாக இருக்கிறது. எளிய மாத தவணைத் திட்டம், குறைந்த விலை உள்ளிட்டவை பலரின் கார் வாங்கும் கனவை நனவாக்கி இருக்கிறது.

    தற்சமயம் நெடுஞ்சாலைப் பயணம் சவாலானதாக மாறி வருகிறது. வாகன பெருக்கத்தால், பலரது கவனமும் பாதுகாப்பான கார்களை நோக்கி திரும்பி இருக்கிறது. இப்போது ஆரம்ப நிலை கார்களிலேயே ‘குறைந்தபட்சம் 2 ஏர் பேக்குகள் கட்டாயம்’ இருக்க வேண்டும் என அரசு கொள்கை வகுத்துள்ளது.

    கார் தயாரிப்பு நிறுவனங்களும் பாதுகாப்பான வாகனங்களை தயாரிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. கார்களின் பாதுகாப்பு தன்மை குறித்து சர்வதேச கிராஷ் டெஸ்ட் நிறுவனம் (என்.சி.ஏ.பி.) சோதித்து சான்றளித்து வருகிறது. கிராஷ் டெஸ்ட் என்பது குறிப்பிட்ட காரை தானியங்கி முறையில் வேகமாக இயக்கி தடுப்பு ஒன்றின் மீது மோதச்செய்வார்கள்.



    அந்தக்காரில் மனிதர்கள், குழந்தைகள் போன்ற, சென்சார்கள் பொருத்தப்பட்ட பொம்மை உருவம் இருக்கும். விபத்து சோதனைக்குப்பின் காரின் பாகங்கள் ஆராயப்படும். அதில் பயணம் செய்த மனித பொம்மைகளுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பரிசோதிக்கப்படும். இதன் அடிப்படையில் அந்த காரின் பாதுகாப்பு தன்மை குறித்து சான்று அளிக்கப்படும்.

    அந்த வகையில் இந்தியாவில் தற்போது விற்பனையாகும் கார்களில் கிராஷ் டெஸ்ட் சோதனையில் அதிகபட்ச சான்றுகள் பெற்ற கார்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பற்றிய விவரத்தை பார்க்கலாம்.

    ஃபோக்ஸ்வேகன் போலோ:


    ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் போலோ இந்தியாவில் முதலில் தயாரிக்கப்பட்ட போது, ஏர் பேக் இல்லாமல் வந்தது. கிராஷ் டெஸ்ட் சோதனையின் அடிப்படை அம்சங்கள் எதையும் அது பூர்த்தி செய்யவில்லை. பின்னர் இதில் முன்புறத்தில் 2 ஏர் பேக்குடன் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அப்போது, பெரியவர்களின் பாதுகாப்புக்கு 17 மதிப்பெண்ணுக்கு 12.54 மதிப்பெண் எடுத்து 3 நட்சத்திரமும், குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 29.91 மதிப்பெண் எடுத்து மூன்று நட்சத்திரமும் பெற்றது. பின்னர் இந்த காரில் ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டது. இதன் விலை ரூ. 5.42 லட்சத்தில் துவங்குகிறது.



    டொயோடா இடியோஸ் லிவா:

    டொயோடா நிறுவனத்தின் லிவா ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இது கிராஷ் டெஸ்ட் சோதனையில் நான்கு நட்சத்திரக் குறியீட்டைப் பெற்றுள்ளது. பெரியவர்களின் பாதுகாப்புக்கு 16 மதிப்பெண்ணுக்கு 13 மதிப்பெண்களை எடுத்து நான்கு நட்சத்திரங்களை பெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 20.02 மதிப்பெண் எடுத்து இது இரண்டு நட்சத்திரத்தை மட்டுமே பெற்றுள்ளது. பின்னர், கிராஷ் டெஸ்ட் சோதனையின் அடிப்படையில் சில பாதுகாப்பு அம்சங்களை இந்நிறுவனம் தனது கார்களில் சேர்த்துள்ளது. அதில் ஏ.பி.எஸ்., இ.பி.டி., ஐசோபிக்ஸ் முக்கியமானவையாகும். முன்பகுதியில் இரண்டு ஏர் பேக்குகள் மற்றும் சீட் பெல்ட் பிரீடென்சனர் வசதியையும் சேர்த்துள்ளது.

    டாடா செஸ்ட்:

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பு செஸ்ட். காம்பாக்ட் செடான் பிரிவில் வந்திருக்கும் இந்த கார் 2016-ல் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அப்போது இதற்கு பூஜ்ஜியம் நட்சத்திரம் தான் கிடைத்தது. பிறகு டாடா நிறுவனம் தேவையான மாற்றங்களைச் செய்து மீண்டும் சோதனைக்கு அனுப்பியது. அப்போது இது பெரியவர்கள் பாதுகாப்பில் 17 மதிப்பெண்ணுக்கு 11.15 மதிப்பெண் எடுத்து நான்கு நட்சத்திரங்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 15.52 மதிப்பெண் எடுத்து 2 நட்சத்திரங்களையும் பெற்றது. இந்த கார் முன்புறத்தில் 2 ஏர் பேக்குடன் வந்துள்ளது. டிரைவருக்கு சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஏ.பி.எஸ்., இ.பி.டி. வசதிகள் மற்றும் கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் வசதியுடன் வந்துள்ளது. இதன் விலை ரூ. 5.48 லட்சத்தில் தொடங்குகிறது.



    டாடா நெக்சான்:

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாடல்களில் எஸ்.யு.வி. மாடல் இது. டாடா நெக்சான் கிராஷ் டெஸ்டில் நான்கு நட்சத்திரங்களை பெற்றுள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பில் 17 மதிப்பெண்ணுக்கு 13.56 மதிப்பெண்களைப் பெற்று 4 நட்சத்திரங்களைப் பெற்ற இந்த கார், குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்களை எடுத்து 3 நட்சத்திரங்களை மட்டுமே பெற்றுள்ளது.

    இந்த காரின் மேற்கூடு (ஷெல்) ஸ்திரமாக இருப்பதாகவும், இந்தக் காரில் பயணம் செய்த மனித பொம்மைகளின் கழுத்து, தலைப்பகுதி மற்றும் கால்கள் சேதமின்றி இருந்ததாகவும், சோதனை நடத்திய என்.சி.ஏ.பி. அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மாடலில் அனைத்து நெக்சான் கார்களும் 2 ஏர் பேக்குகளைக் கொண்டதாக வந்துள்ளது. இதன் பேஸ் மாடல் கார் விலை ரூ. 5.99 லட்சத்தில் தொடங்குகிறது.

    மாருதி விடாரா பிரெஸ்ஸா:

    மாருதி சுசுகி நிறுவனத்தின் காம்பாக்ட் எஸ்.யு.வி. விடாரா பிரெஸ்ஸா. இந்த கார் கிராஷ் டெஸ்ட் சோதனையில் பெரியவர்கள் பாதுகாப்பில் 17 மதிப்பெண்ணுக்கு 12.51 மதிப்பெண் எடுத்து நான்கு நட்சத்திரங்களை வென்றுள்ளது. விடாரா பிரீஸாவின் அனைத்து மாடலிலும் 2 ஏர் பேக்குகள், ஏ.பி.எஸ்., இ.பி.டி., முன்புற சீட் பெல்ட் பிரீடென்சனர்ஸ் வசதிகளோடும், டிரைவருக்கு சீட் பெல்ட் ரிமைண்டருடனும் வந்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்புக்கு இதில் ஐசோபிக்ஸ் வசதியும் உள்ளது.
    பண்டிகை காலத்தில் புதிதாக கார் வாங்க நினைப்போர், வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களை தொடர்ந்து பார்ப்போம். #automobile
    வாழ்க்கையின் மகிழ்ச்சியான சமயங்களில் புதிய கார் வாங்கும் நிகழ்வும் ஒன்று. பொதுவாக கார் வாங்கும் சமயங்களில் பல காகிதங்களில் கையெழுத்து போடுவதிலேயே பலரும் கவனமாக இருந்துவிடுவர். விற்பனையகத்திலிருந்து காரை வெளியே எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ...

    நீங்கள் விரும்பிய நிறத்தில் காரை தேர்வு செய்த பிறகு அதை பதிவு எண்ணுக்கு அனுப்பும் முன்பு சில சோதனைகளை நீங்கள் செய்வது அவசியம். அப்போதுதான் அந்த காரில் பிரச்சனை இருந்தால் நீங்கள் வேறொன்றை மாற்ற முடியும். பதிவு செய்த பிறகு மாற்ற முடியாது.

    டெலிவரிக்கு முன்பாக நீங்கள் அனைத்து அம்சங்களையும் பார்த்து சம்மதம் தெரிவிக்காமல் உங்கள் பெயரில் இன்வாய்ஸ் தயாரிக்கக் கூடாது என்று விற்பனையாளரிடம் கண்டிப்பாக தெரிவித்துவிடுங்கள். காரை பகல் நேரத்தில் சென்று பார்த்து சோதனை செய்யுங்கள்.



    காரின் உள்புறமும், வெளிப்புறமும் எவ்வித சேதமும் இல்லாமல் இருக்கிறதா என்பதை கவனமாக பார்க்க வேண்டும்.

    பொதுவாக கார் உற்பத்தி ஆலையிலிருந்து போக்குவரத்து மூலம் கார் விற்பனையகத்துக்கு வரும். இதனால் காரில் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.

    சில விற்பனையகங்களில் காட்சி (டெமோ) கார் என வைத்திருப்பர். புதிதாக டெலிவரி எடுக்கும் முன்புவரை சில விற்பனையாளர்கள் அதை டெமோ காராக பயன்படுத்தி இருக்கலாம். ஸ்பீடோமீட்டர் வயர் இணைப்பை துண்டித்துவிட்டு பயன்படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே அதை கவனமாகப் பார்க்க வேண்டும்.



    சில கார்களில் உற்பத்தி சார்ந்த குறைபாடு இருக்கும். அவற்றை உன்னிப்பாக கவனித்தால் கண்டுபிடித்துவிட முடியும். புதிய கார்கள் பல சமயங்களில் விற்பனையகங்களில் நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். வெயில், மழை இவற்றில் காய்ந்திருக்கும். இவற்றையெல்லாம் கட்டாயம் பார்க்க வேண்டும்.

    முதலில் காரின் வெளிப்புறத்தை உன்னிப்பாக கவனியுங்கள். பம்ப்பரில் தொடங்கி பக்கவாட்டு பகுதி முழுவதுமாக பாருங்கள். காரில் ஏதேனும் கீறல், அடிபட்டிருந்தால், நசுங்கியிருப்பது தெரியும். முனைப் பகுதிகளில் ரீ-பெயிண்ட் செய்திருக்கிறார்களா என்று கவனியுங்கள்.

    வெளிப்புறத்தை கவனமாக பார்த்த பிறகு உள்புறமும் கவனியுங்கள். டேஷ் போர்டு, டோர் பேட் ஆகியவை அனைத்தும் சரியாக பொருந்தும்படி உள்ளதா என்று கவனியுங்கள். டேஷ்போர்டு பகுதியில் உள்ள பெட்டிகளை திறந்து, மூடி சரியாக செயல்படுகிறதா என்று பாருங்கள். சீட்களில் ஏதேனும் கறை உள்ளதா என்று கவனியுங்கள். கீழ்ப்பகுதியில் உள்ள மேட்டை எடுத்து ஏதேனும் நீர் கசிவு இருக்கிறதா என்று பாருங்கள். முன்புற கண்ணாடி, ஜன்னல்கள் சரியாக உள்ளனவா அதில் விரிசல்கள் உள்ளதா என்று பார்க்கவும். சீட் பெல்ட் சரியாக உள்ளதா, டிரைவர் சீட் சரியாக நகர்கிறதா என்பதை கவனிக்கவும்.



    பிறகு முன்புற பானட்டைத் திறந்து பேட்டரி வயர்கள் சரியாக உள்ளனவா, அதில் துரு பிடித்திருக்கிறதா, பேட்டரி லீக் உள்ளதா என்று பார்க்கவும். பேட்டரிக்கான உத்தரவாத அட்டையை கண்டிப்பாக வாங்கவும். என்ஜின் ஸ்டார்ட் ஆன சமயத்தில் காரினுள் சத்தம் எந்த அளவு உள்ளது என்பதை பார்க்கவும். வினோதமான சத்தம் வந்தால் அதை கவனிக்கவும். ஆக்சிலரேட்டரை அழுத்தினாலும் என்ஜின் அதிர்வு அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. என்ஜின் இயங்கிக் கொண்டிருக்கும்போது பின்பகுதியில் சைலன்சரை பார்க்கவும். புகை வெளியாகிறதா என்று பார்க்கவும். புதிய கார் கருப்பு புகையை வெளியிடாது.

    முகப்பு விளக்கு, பின்புற விளக்கு, இன்டிகேட்டர் ஆகியன செயல்படுகிறதா என்பதை பார்க்கவும். டயரின் காற்று அழுத்தத்தை சோதித்த பிறகு அந்த காரை சிறிது தூரம் ஓட்டிப் பாருங்கள். அப்போதுதான் காரின் சஸ்பென்ஷன் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளது என்பது தெரியும். கார் டயரின் உற்பத்தி நாளையும் பார்த்துக் கொள்ளவும். கூடுதலாக தரப்பட்டுள்ள ஸ்டெப்னி டயர் மற்றும் ஜாக்கி போன்றவற்றையும் பார்வையிட வேண்டும்.  #automobile
    இந்தியாவில் கார் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நீங்கள் வாங்கும் காரில் இ.எஸ்.சி. தொழில்நுட்பம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. #Car
    மகிழுந்து எனப்படும் கார் ஆடம்பரம் அற்ற அத்தியாவசிய தேவைகளின் பட்டியலில் நுழைந்து விட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கார் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கார் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை போன்றே, புதிய கார்களில் வழங்கப்படும் அம்சங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப கார் பயன்படுத்துவோருக்கு பயன்தரும், பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு புதிய வசதிகள் புதிய கார்களில் சேர்க்கப்படுகின்றன. அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் அல்லது புதிதாக வாங்க இருக்கும் காரில் இ.எஸ்.சி. எனப்படும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் சிஸ்டம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

    சில கார்களில் இந்த தொழில்நுட்பம் முன்னேறிய வகையில் உள்ளது. அதாவது வாகனம் கட்டுப்பாட்டை இழக்கும்போது அது இன்ஜின் செயல்பாட்டைக் குறைக்கும். மீண்டும் வாகனம் கட்டுக்குள் வந்தால் மட்டுமே அது செயல்பட அனுமதிக்கும். வாகனம் கட்டுப்பாடு இழந்து செல்வதைத் தடுக்க இ.எஸ்.சி. உதவும்.


    புகைப்படம் நன்றி: MBWorld

    அமெரிக்காவில் இத்தகைய தொழில்நுட்பம் பின்பற்றப்பட்ட பிறகு நெடுஞ்சாலைகளில் பெருமளவிலான விபத்துகள் குறைந்துவிட்டதாக அந்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை காப்பீடு அமைப்புகள் கூறியுள்ளன.

    மூன்றில் ஒரு பங்கு விபத்துகள் இதனால் குறைவதாக சுட்டிக்காட்டியுள்ளன. ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இதே கருத்தைத் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் தங்கள் நாடுகளில் தயாராகும் கார்களில் இத்தகைய தொழில்நுட்பம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளன.

    1983-ம் ஆண்டு முதல் முதலில் கார்களில் ஆன்டி ஸ்கிட் எனும் தொழில்நுட்பத்தை டொயோடா நிறுவனம் அறிமுகம் செய்தது. இதையடுத்து 1987-ல் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் மற்றும் பி.எம்.டபிள்யூ. நிறுவனங்கள் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தை தங்களது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தின. ஆனால் இவை அனைத்துமே ஸ்டீரிங்குடன் தொடர்பு கொண்டவையாக இருக்கவில்லை.



    1990-ம் ஆண்டில் மிட்சுபிஷி நிறுவனம் முதல் முறையாக ஒருங்கிணைந்த கண்ட்ரோல் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. இதற்கு டி.சி.எல். என பெயரிடப்பட்டது. இதன் மேம்பட்ட நுட்பமாக ஆக்டிவ் ஸ்கிட் அண்ட் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (ஏ.எஸ்.டி.சி.) புழக்கத்திற்கு வந்தது.

    திருப்பத்தில் காரின் ஆக்ஸிலரேட்டரை டிரைவர் வேகமாக மிதித்தாலும், இதில் உள்ள சென்சார் (உணர் கருவி) காரின் வேகத்தைக் குறைத்துவிடும். ஆனால் படிப்படியாக இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 1992-ம் ஆண்டில் புதிய நுட்பத்தைக் கண்டுபிடித்தது.

    1987-ம் ஆண்டிலிருந்து 1992-ம் ஆண்டு வரையான காலத்தில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எலெக்ட்ரானிக் ஸ்டெபிலைசேஷன் கண்ட்ரோல் புரோகிராம் உருவாக்கப்பட்டது.

    Pic 3

    1995-ம் ஆண்டில் பி.எம்.டபிள்யூ., மெர்சிடஸ் பென்ஸ் மற்றும் டொயோடா ஆகிய நிறுவனங்கள் முதல் முறையாக தங்கள் வாகனங்களில் இ.எஸ்.சி. எனப்படும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தன. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு அனேகமாக அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தை தங்களது கார்களில் வைக்கத் தொடங்கின.

    பொதுவாக கார் ஓடும்போது பின் சக்கரங்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதை இது கண்காணிக்கும். காரின் பாதை மாறாமல் இருக்கிறதா என்பதை இது தொடர்ந்து கண்காணிக்கும். ஸ்டீரிங் கட்டுப்பாடு இழக்கும் போது தான் இ.எஸ்.சி. செயல்பட தொடங்கும். உடனடியாக வாகனத்தின் வேகத்தைக் குறைத்து இன்ஜின் செயல்பாட்டை நிறுத்தும்.

    கார் கட்டுப்பாட்டை இழக்கிறது என்பதை டிரைவர் உணர்வதற்கு முன்பாகவே இ.எஸ்.சி. உணர்ந்துவிடும். எத்தகைய தளத்திலும் அதாவது வழுக்கும் தரையாக இருந்தாலும் சரி இது செயல்படும். #Car
    இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான கார்களில் ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் கார்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். #cars



    ஒரு காலத்தில் பணக்காரர்கள் தங்களின் அந்தஸ்தை பறைசாற்ற மட்டுமே பயன்படுத்திய கார்கள் இன்று நவீன போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. நடுத்தர பிரிவினரும், மாதாந்திர சம்பளதாரர்களும் வாங்கும் வகையில் கார்கள் இன்று உற்பத்தியாகின்றன.

    டாடா நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ காரை தயாரிக்கத் தொடங்கி, அதுவும் ரூ. 2 லட்சம் வரை சென்றுவிட்டது. தற்போது நானோ கார் உற்பத்தியும் நின்று போய்விட்டது. ஆனால் மாருதி நிறுவனம் உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் ரூ. 5 லட்சத்திற்குள் வசதியான கார்களை தயாரித்து அளிக்கின்றன.

    அவரவர் வசதி, தேவை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு கார்களை வாங்கி பயன்படுத்தலாம். இன்னும் சில கார்கள் ரூ.5 லட்சம் விலையில் உள்ளன. புதிய கார்களும் இதே விலைப் பிரிவில் அறிமுகமாக உள்ளன. 



    ரெனால்ட் க்விட்

    பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் சென்னை ஒரகடத்தில் ஆலை அமைத்துள்ளது.இந்நிறுவனத்தின் குறைந்த விலை கார் க்விட். இது ரூ. 2.78 லட்சம் விலையில் கிடைக்கிறது. குறைந்த விலை பிரிவு கார்களில் இது மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இதில் பிரீமியம் மாடல் விலை ரூ. 4.71 லட்சமாகும். இது 799 சி.சி. திறன் கொண்டது. இது சோதனை ஓட்டத்தில் 25 கி.மீ. தூரம் ஓடியது. இதில் பெட்ரோல் மாடல் மட்டுமே கிடைக்கிறது. 

    மாருதி ஆல்டோ 800

    மாருதி ஆல்டோ 800, இந்த கார் மாருதி நிறுவனம் நீண்ட காலமாக தயாரித்து வந்த மாருதி 800 மாடலுக்கு மாற்றாக வந்தது. இதன் விலை ரூ 2.72 லட்சமாகும். ஒரு டீசன்ட்டான கார் வாங்க விரும்புவோர், குறைந்த பட்ஜெட்டில் வேண்டுமாயின் இந்தக் கார் நிச்சயம் அவர்களுக்கு போதுமானதாக இருக்கும். பேஸ் மாடல் விலை ரூ. 2.72 லட்சமாகும், டாப் என்ட் மாடல் விலை ரூ. 4.01 லட்சம் வரை கிடைக்கிறது.



    டாடா டியாகோ

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே தனது பிரபல மாடலான இண்டிகா கார் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் டியாகோ மாடலைத்தான் டாடா பெரிதும் நம்பியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 3.48 லட்சமாகும். இது 1047 சி.சி. திறன் கொண்டது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் இது கிடைக்கிறது.

    மாருதி வேகன் ஆர்

    மாருதி வேகன் ஆர் மாடலின் பேஸ் மாடல் விலை ரூ. 4.37 லட்சமாகும். இது 998 சி.சி. திறன் கொண்டது. இது சோதனை ஓட்டத்தில் லிட்டருக்கு 26 கி.மீ. தூரம் ஓடியதாக நிறுவனம் தெரிவிக்கிறது. இதிலும் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி.யில் (நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) இயங்கும் மாடல்கள் வந்துள்ளன. இதில் பிரீமியம் மாடல் விலை ரூ. 5.49 லட்சமாகும். 



    மாருதி இக்னிஸ்

    இந்நிறுவனத்தின் பிரபல கார்களில் இதுவும் ஒன்று. இதன் ஆரம்ப விலை ரூ. 4.79 லட்சமாகும். இது 1197 சி.சி. திறன் கொண்டது. இது சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. டீசல் மாடல் கார் உற்பத்தியை சமீபத்தில்தான் இந்நிறுவனம் முற்றிலுமாக நிறுத்தியது. இப்போதைக்கு பெட்ரோல் மாடல் மட்டுமே கிடைக்கிறது. 

    டட்சன் கோ

    சிறிய ரகக் கார்களில் மக்களால் பெரிதும் விரும்பப்படுவது. டட்சன் கோ காரின் ஆரம்ப விலை ரூ. 3.50 லட்சமாகும். இதில் 799 சி.சி. என்ஜின் உள்ளது. இதில் இன்னொரு மாடல் 999 சி.சி.யிலும் வெளி வந்துள்ளது. 

    மாருதி ஸ்விப்ட்

    இது 1197 சி.சி. திறன் கொண்டது. ஐந்து பேர் சவுகரியமாக அமர்ந்து செல்லும் வகையில் இட வசதி கொண்டது. பெட்ரோல், டீசல் ஆகிய இரு மாடல்களிலும் இவை வெளி வந்துள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ. 4.99 லட்சமாகும். சோதனை ஓட்டத்தில் இது லிட்டருக்கு 28 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. 
    உலகின் பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி ரூ.6,822 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Audi



    ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி மீது ரூ.6,822 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    ஆடி நிறுவன கார்களில் 6 மற்றும் 8-சிலின்டர் டீசல் இன்ஜின்களில் அதிக மாசு ஏற்படுத்தியதால் ஆடி நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை எதிர்க்கும் திட்டமில்லை என்றும் அபராதத்தை ஏற்றுக் கொள்வதாக ஆடி அறிவித்துள்ளது.

    கார் எமிஷன் முறைகேடு செய்ததில் உடந்தையாக இருந்ததாக ஆடி தலைமை அதிகாரிகளில் ஒருவரான ரூப்பெர்ட் ஸ்டேட்லர் மீது ஃபோக்ஸ்வேகன் நடவடிக்கை எடுத்தது. விற்பனை பிரிவு அதிகாரியான பிராம் ஸ்காட் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார்.



    முன்னதாக ஜூன் மாதத்தில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மீது ரூ.85,10,99,78,047 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்திலும் ஃபோக்ஸ்வேகன் தனது கார்களில் முறைகேடு செய்து சாலைகளில் மாசு அதிகரிக்க காரணமாக இருந்தது கண்டறியப்பட்டது. 

    அதிக மாசு ஏற்படுத்தும் நான்கு சிலின்டர் இன்ஜின்களை உற்பத்தி செய்து அவற்றை விற்றதற்காக ஃபோக்ஸ்வேகன் மீது அபராதம் விதிக்கப்பட்டது. 
    இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பேட்டரி வாகனங்களை வாங்க பலரும் முன்வருகின்றனர். #BatteryBike
    பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக பேட்டரியில் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்வதுதான் ஒரே தீர்வு என்கிற ரீதியில் அரசு, பேட்டரி வாகனங்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளது.

    சுற்றுப் புறச்சூழலை பாதுகாக்கவும் இத்தகைய வாகனங்கள் பெருமளவு உதவும் என்பதால் அரசு இதற்கு மானியமும் வழங்குகிறது. நடுத்தர மக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களும், இப்போது பேட்டரியில் வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ரூ.10 செலவில், 70 கி.மீ. தூரம் ஓடுகின்றன என்றபோது, இத்தகைய பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் பற்றி அறிவது அவசியமாகிறது.

    எதிர்காலத்தில் பேட்டரி வாகனங்கள்தான் என்ற நிலை உருவாகும் சூழல் வெகு தூரத்தில் இல்லை. எனவே இப்போது சந்தைக்கு வந்துள்ள பேட்டரி இரு சக்கர வாகனங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். தொழில்நுட்ப ரீதியில் இவை எவ்வாறு சிறப்பாக செயல்படுகின்றன என்பதை தெரிந்துகொள்வதன் மூலம் சிறந்த பேட்டரி வாகனத்தை வாங்க முடியும்.


    ஏதெர் 450

    பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் புதிய தயாரிப்புதான் இந்த பேட்டரி ஸ்கூட்டர். இந்த நிறுவனம் தனியாருடன் கூட்டு சேர்ந்து சார்ஜிங் மையத்தையும் பெங்களூருவில் நிறுவி வருகிறது. இது 3.9 விநாடிகளில் 40 கி.மீ வேகத்தை எட்டும். இதன் முன்பகுதியில் 7 அங்குல தொடு திரை வசதி கொண்ட டேஷ் போர்டு உள்ளது.

    இது வாகனம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டும். பேட்டரிக்கு 3 ஆண்டு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. விலை ரூ. 1.24 லட்சம். இதில் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும்.

    ஹீரோ என்.ஒய்.எக்ஸ். இ5

    இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கி.மீ ஆகும். இந்த ஸ்கூட்டரிலும் லித்தியம் அயன் ரக பேட்டரி தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பிரஷ் இல்லாத டி.சி. ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு இருக்கைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் நிலையில், பின்புற இருக்கையை மடித்துவிட்டு அதில் லோடு ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

    பின் இருக்கையை மடித்து ஓட்டுபவர் முதுகுப்பகுதியில் சாய்ந்து கொள்ளலாம். இதன் பேட்டரிக்கு 3 ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இதன் விலை ரூ.50,490. ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ. வரை பயணிக்கலாம். சார்ஜ் ஆக 4 மணி நேரம் ஆகும்.

    ஒகினாவா பிரைஸ்

    இந்தியன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஒகினாவா இரண்டு பேட்டரி ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. பிரைஸ் மற்றும் ரிட்ஜ் என்ற பெயரில் இவை அறிமுகம் ஆகியுள்ளன. இதில் ஒரு கி.மீ. தூரம் பயணிக்க 10 காசு மட்டுமே செலவாகும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது மூன்று கண்கவர் வண்ணங்களில் வெளிவந்துள்ளது.

    பிரைஸ் ஸ்கூட்டரில் டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், நடுப்பகுதியில் லாக் செய்யும் வசதி, திருடு போவதை எச்சரிக்கும் அலாரம், பொத்தானை அழுத்தி ஸ்டார்ட் செய்யும் வசதி, ஸ்கூட்டர் இருக்குமிடம் அறியும் வசதிகள் உள்ளன.

    மேலும் மொபைல் சார்ஜ் செய்வதற்கான போர்ட், தள்ளிச் செல்லும்போது உதவும் முன்புற, பின்புறம் சுழலும் வசதி, பகல் நேரங்களில் ஒளிரும் விளக்கு ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். இதன் விலை ரூ. 59,889. அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கி.மீ. ஆகும். பேட்டரி சார்ஜ் செய்தால் 170 கி.மீ. முதல் 200 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். சார்ஜ் ஆக 6 மணி முதல் 8 மணி நேரம் வரை ஆகும். #BatteryBike 
    ×