என் மலர்
நீங்கள் தேடியது "bengaluru bulls"
- தலைவாஸ் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 டை, 1 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
- பெங்களூரு புல்ஸ் 1 வெற்றி, 5 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 டை, 1 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 44-29 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்சையும், 2-வது போட்டியில் 35-30 என்ற கணக்கில் புனேயையும் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் 40-42 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னாவிடம் தோற்றது. 4-வது போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சுடன் 30-30 என்ற கணக்கில் டை செய்தது. 5-வது ஆட்டத்தில் 44-25 என்ற கணக்கில் குஜராத் ஜெயன்ட்சை தோற்கடித்தது.
தமிழ் தலைவாஸ் 6-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்சை இன்று இரவு 9 மணிக்கு எதிர் கொள்கிறது. பெங்களூரு வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தமிழ் தலைவாஸ் இருக்கிறது. தமிழ் தலைவாஸ் அணியில் நரேந்தர் (44 புள்ளி) சச்சின் (30 புள்ளி), நிதேஷ் குமார் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
பெங்களூரு புல்ஸ் 1 வெற்றி, 5 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.
முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் புனேரி பல்தான்-குஜராத் அணிகள் மோதுகின்றன.
புனே அணி 4 வெற்றி, 1 தோல்வி, 1 டையுடன் 24 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. அந்த அணி 5-வது வெற்றி வேட்கையில் உள்ளது.
குஜராத் அணி 1 வெற்றி, 3 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- ஜெய்ப்பூர் அணி நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் புள்ளிகளை எடுத்தன.
இறுதியில், ஜெய்ப்பூர் அணி 39-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 34 புள்ளிகள் எடுத்து டிரா செய்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் இன்று முதல் தொடங்கியது.
இதில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
இதில் இரு அணி சிறப்பாக ஆடினர். இதனால் குஜராத், பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டம் 34-34 என்ற புள்ளிக்கணக்கில் சமனிலையில் முடிந்தது.
புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே அணி 35-33 என்ற புள்ளிக் கணக்கில் (‘ஏ’ பிரிவு) அரியானா ஸ்டீலர்சையும், பெங்களூர் புல்ஸ் 34-26 என்ற கணக்கில் (‘பி’ பிரிவு) தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 87-வது ‘லீக்‘ ஆட்டத்தில் புனேரிபல்தான்- குஜராத் பார்ச்சுன் ஜெய்மைட்ஸ் அணிகள் மோதுகின்றன. புனே அணி 8-வது வெற்றிக்காகவும், குஜராத் அணி 11-வது வெற்றிக்காகவும் காத்திருக்கிறது.
இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூர் அணி 11-வது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது. பெங்கால் வாரியர்ஸ் 7-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது. #ProKabaddi2018 #BengalWarriors #BengaluruBulls
6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி புனேயில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூர் புல்சிடம் ஏற்கனவே 2 முறை தோற்று இருந்தது. இதனால் இதற்கு பதிலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தமிழ் தலைவாஸ் உள்ளது. பெங்களூர் அணி தமிழ்தலைவாசை மீண்டும் வீழ்த்தி 8-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது.
முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை- டெல்லி அணிகள் மோதுகின்றன. மும்பை 11-வது வெற்றிக்காகவும், டெல்லி 6-வது வெற்றிக்காகவும் காத்திருக்கிறது. #Prokabbadi #TamilThalaivas #BengaluruBulls
6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் அரங்கேறிய 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 45-32 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்தது.
மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 32-37 என்ற புள்ளி கணக்கில் உள்ளூர் அணியான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சிடம் வீழ்ந்தது. குஜராத்துக்கு இது 8-வது வெற்றியாகும். போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.
6-வது புரோ கபடி லீக் தொடரில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 68-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் புனே அணி 13-12 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. பின் பாதியில் முன்னிலை பெற்ற பெங்கால் அணி அதனை கடைசி வரை தக்க வைத்து கொண்டது.
முடிவில் பெங்கால் அணி 26-22 என்ற புள்ளி கணக்கில் புனேவை வீழ்த்தியது. 69-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் சந்தித்தன. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 30-30 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது.
இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-உ.பி.யோத்தா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.