என் மலர்
நீங்கள் தேடியது "Bhuvneshwar Kumar"
- இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் சமனில் முடிந்தது.
- சர்வதேச கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் பெறும் 4-வது தொடர் நாயகன் விருது இதுவாகும்.
பெங்களூரு:
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20 தொடரில் விளையாடியது. முதல் இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. தொடர் நாயகனாக இந்தியாவின் புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.
முன்னதாக, ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 3 தொடர் நாயகன் விருதுகளை வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் புவனேஸ்வர்குமார் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
- பவர் பிளேயில் 130 ஓவர் வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர்குமார் முதல் இடத்தில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 4-வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு குஜராத் மாநிலம் ராஜ்கோர்ட்டில் நடக்கிறது.
இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் உலக சாதனை படைக்க உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் புவனேஸ்வர்குமார் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வந்துள்ளார். சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களில் இவர் மட்டுமே அணியில் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பும்ரா, முகமது சமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் பவர் பிளேயில் ஒரு விக்கெட் எடுத்தால் புவனேஸ்வர்குமார் உலக சாதனை படைப்பார். பவர் பிளேயில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் புவனேஸ்வர் குமார் 33 விக்கெட்டுகள் எடுத்து 3-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த சாமுவேல் பத்ரி (33), இரண்டாது இடத்தில் நியூசிலாந்து அணியை சேர்ந்த டிம் சவுத்தி(33) ஆகியோர் உள்ளனர்.

டி20 வரலாற்றில் பவர்பிளேயில் 100 ஓவர்களுக்கு மேல் வீசிய முதல் மூன்று பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், பத்ரீ மற்றும் சவுத்தி ஆகியோர் ஆவர். டி20 போட்டிகளில் பவர் பிளேயில் 130 ஓவர் வீசி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர்குமார் முதல் இடத்தில் உள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்களில் பும்ராவை(67 விக்கெட்) முந்துவதற்கு புவனேஸ்வர்குமாருக்கு (64 விக்கெட்) வாய்ப்பு இருக்கிறது. இந்த 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால் அவரை முந்தி விடுவார். முதல் இடத்தில் சாஹல் உள்ளார். அவர் 72 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
முதல் மூன்று போட்டிகளில் புவனேஸ்வர்குமார் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிறந்த பந்து வீச்சாக இரண்டாவது டி20-யில் 4 ஒவர்கள் பந்து வீசி 13 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இவருடன் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இங்கிலாந்து ஆடுகளங்கள் மிகவும் ‘Flat’ ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் மற்ற அணிகள் இந்தியாவின் பந்து வீச்சை மிகவும் கவனமாக எதிர்கொள்ளும் என்று புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புவனேஸ்வர் குமார் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கு போதுமான அளவில் ஐபிஎல் பயிற்சி ஆட்டமாக அமைந்தது. கட்டுக்கோப்பாக பந்து வீசி, விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் தன்னம்பிக்கை தானாகவே உயரும். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக பந்து வீசிய அதே ரிதமில் பந்து வீசுவது அவசியம்.
ஸ்லோவர் பால், நக்குல் பால் போன்ற வேரியேசன் பந்துகளை வீசுவதிலும், பந்து வீச்சில் வேகத்தை கூட்டுவதிலும் முன்னேற்றம் அடைந்துள்ளேன். அதேபோல் உடற்தகுதியிலும் முன்னேற்றம் அடைந்துள்ளேன்.
நாங்கள் சிறந்த பந்து வீச்சை கொண்ட அணியா? இல்லையா? என்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஏனென்றால், ஆடுகளத்தில் எங்களுடைய பந்துவீச்சு எப்படி வெளிப்படும் என்பதை பொறுத்துதான் அது அமையும். எங்களுடைய கடந்த சில வருட ஆட்டத்திறன் எங்களை பற்றி சொல்லும். இந்திய அணியின் பந்து வீச்சு படிப்படியாக சிறந்த வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. எந்தவொரு ஆடுகளத்திலும் இந்திய பந்து வீச்சால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும்.

இந்திய அணியில் உள்ள நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய பலத்தை, ஒரு அணியாக வெளிப்படுத்துகிறோம். ஆடும் லெவன் அணியில் யார் இடம்பிடித்தாலும் சிறப்பாக பந்து வீசுவது சிறப்பான விஷயம். ஒரு பந்து வீச்சு குழுவாக எந்த கண்டிசனிலும் சிறப்பாக பந்து வீச முடியும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
இங்கிலாந்து ஆடுகளங்கள் ‘Flat’ ஆக இருக்கும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் தொடக்கம் மற்றும் டெத் ஓவர்களில் எங்களுடைய பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் எதிரணிகள் கவனமாக எதிர்கொள்வார்கள். அன்றைய தினம் எங்களுடைய திட்டத்தை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் எல்லா விஷயங்களும் அமையும்’’ என்றார்.
தொடக்க ஆட்டகாரரான தவானை எல்பிடபிள்யூ (கோல்டன் டக்) முறையில் ஜேசன் பெரண்டார்ப் வெளியேற்றினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (8 பந்துகளில் 3 ரன்கள்) எடுத்த நிலையில் ரிச்சர்ட்சன் ஓவரில் ஸ்டாயின்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அம்பதி ராயுடுவும் வந்த வேகத்தில் வெளியேறினார். 2 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.
அதன்பின்னர் ரோகித் சர்மா, டோனி இருவரும் நிதானமாக விளையாடினர். டோனி இந்த போட்டியில் முதல் ரன்னை எடுத்தபோது, ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார். இதன்மூலம் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு, சச்சின், கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
ஒருநாள் போட்டிகளில் மொத்த ரன்கள் அடிப்படையில், சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் 18,426 ரன்கள் எடுத்துள்ளார். கங்குலி 11,221 ரன்களும், டிராவிட் 10,768 ரன்களும், விராட் கோலி 10,232 ரன்களும் எடுத்துள்ளனர். #AUSvIND #Dhoni



ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்கள் (6 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்து வெளியேறினார். ஸ்டாயின்ஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 43 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தும், மேக்ஸ்வெல் 5 பந்துகளில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது.
இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் விழ்த்தினர். முகமது சமி, கலீல் அகமது விக்கெட் கிடைக்கவில்லை.
இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.#AUSvIND #bhuvneshwarkumar
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி பெற்று சாதனைப் படைத்தது. இதையடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன.
இதில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. துவக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், கேரே களமிறங்கினர். ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் எடுத்த நிலையில், புவனேஸ்வர் குமார் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் நூறாவது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றி உள்ளார். அதன்பின்னர் கேரே-கவாஜா ஜோடி நிதானமாக விளையாடியது.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரே (விக்கெட் கீப்பர்) உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாயின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், நாதன் லயன், பீட்டர் சிடில், ரிச்சர்ட்சன், ஜேசன் பெரண்டார்ப்,
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்) ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், முகம்மது சமி, கலீல் அகமது. #AUSvIND #bhuvneshwarkumar
இந்நிலையில் ஆல்ரவுண்டரின் பங்களிப்பை இந்தியா தவற விட்டதுதான் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எல் சிவராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எல் சிவராம கிருஷ்ணன் கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக அணி நிர்வாகம் புவனேஸ்வர் குமாரை பயன்படுத்தியிருக்க வேண்டும். அவர் இந்திய அணிக்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக இருந்திருப்பார்.

இந்தியா தொடரை இழப்பதற்கு ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. ஹர்திக் பாண்டியாவை விட புவனேஸ்வர் குமார் அதிக ரன்கள் அடித்திருப்பார். அதேபோல்தான் சகா. இவர் அதிக அளவில் ‘பைஸ்’ ரன்கள் விட்டுக்கொடுத்திருக்க மாட்டார். அதேபோல் அதிக ரன்களும் குவித்திருப்பார். இருவரும் இடம் பிடித்திருந்தால் இந்தியாவை அதிக அளவில் பாதித்திருக்காது’’ என்றார்.
ஆனால், இங்கிலாந்துக்கு ஏதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது அவரது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
விரைவில் காயம் குணமடைந்து அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புவனேஸ்வர் காயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘புவனேஸ்வர் குமார் காயம் இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு. நான் அவரிடம் அதிக அளவிலான ஆட்டத்தை எதிர்பார்த்தேன். அவரிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரில் அவருடைய ஸ்விங் திறமை இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாகும்.
புவனேஸ்வர் குமார் டெஸ்ட் போட்டியில் அடித்துள்ள ரன்களையும் மறந்து விடக்கூடாது. கடைசி கட்டத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த வகையில் பார்ட்னர்ஷிப் கொடுக்கக்கூடியவர். இருந்தாலும் இந்திய அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்’’ என்றார்.
இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘‘நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியின்போது புவனேஸ்வர் குமாருக்கு முதுகின் அடிப்பாகத்தில் காயம் ஏற்பட்டது. அவரது காயம் பிசிசிஐ மெடிக்கல் குழுவால் கவனிக்கப்பட்டு வருகின்றது. இந்திய அணியில் அவருடைய பெயர் விரைவில் இடம்பெறும்’’ என்று பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்னும் 13 நாட்கள் உள்ளதால் புவனேஸ்வர் குமார் முதல் டெஸ்டில் விளையாட வாய்ப்புள்ளது. அதேவேளையில் பும்ரா காயத்தில் இருந்து மீண்டால் 2-வது டெஸ்டில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘தற்போதுள்ள வேகப்பந்து வீச்சு யூனிட்டுதான் இங்கிலாந்து தொடருக்கான மிகவும் முழுமையானது. என்னுடைய மதிப்பீட்டின்படி, இந்த யூனிட்டின் தாக்குதல் மிகவும் சிறந்ததாக இருக்கும். ஸ்விங் பவுலரான புவனேஸ்வர் குமார். மிகவும் உயரம் கொண்ட இசாந்த் சர்மா, பந்தை தரையில் பலமாக தாக்கும் பும்ரா, மிகவும் திறமை வாய்ந்த வேகமாக வீசும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நம் பெற்றுள்ளோம். பல்வேறு தரப்பட்ட பந்து வீச்சை கொண்டு சிறந்த காம்பினேசன்.

தற்போதுள்ள இந்திய அணி தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பெரும்பாலான நேரத்தில் அதிக அளவில் பேட்டிங் செய்கிறார்கள். ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் தற்போது அதிக அளவில் ரன்கள் அடிக்க உதவியாக இருக்கிறார்கள். பேட்ஸ்மேன்கள் ஐந்தாறு ஓவர்கள் வீசுவது பெரிய விஷயம் அல்ல. முக்கியமான நேரத்தில் பந்து வீச்சாளர்கள் ரன்கள் அடிப்பது அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும்’’ என்றார்.