என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bihar Boys"

    • கொத்தடிமையாக இருந்த பீகார் சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
    • இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த கீழான் மறைநாடு கிராமத்தில் ஒரு தனியார் பேப்பர் மில் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பேப்பர் மில்லில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரீஷ் (வயது17), சுரேஷ்குமார் (13) ஆகிய 2 சிறுவர்கள் கொத்தடிமை குழந்தை தொழிலாளர்களாக வேலை பார்ப்பது தெரியவந்தது. அவர்களை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினர் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    ×