search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bio Max"

    • அரசு மாதிரி பள்ளியில் பயோ மேக்ஸ் பாடப்பிரிவை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பாடப்பிரிவு பிரிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    அரசு மாதிரி பள்ளிகளில் ஏற்கனவே இருந்தபடி பயோ மேக்ஸ் பாட பிரிவில் (கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்) படித்தால் மருத்துவம் அல்லது என்ஜினீயரிங் படிக்க முடியும். தற்போது 2023-24-ம் கல்வியாண்டில் இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

    பயோ மேக்ஸ் பாடப் பிரிவை தற்போது பயோ கம்ப்யூட்டர் (இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்),மேக்ஸ் கம்ப்யூட்டர் (இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ்) என இரண்டாக பிரித்து மாணவர் சேர்க்கை நடக்கி றது. இம்முறைக்கு மாணவர் கள், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாண வர்களில் அதிக மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாதிரி பள்ளிகளில் பிளஸ் 1-ல் சேர்க்கப்படுகின்றனர்.

    2023-24 கல்வி ஆண்டிற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் மாணவர்கள் விருப்ப பாடமான பயோ மேக்சை இரண்டாக பிரித்து இதில் ஒன்றை தேர்ந்தெ டுக்க வற்புறுத்துகின்றனர்.

    இதில் ஏதாவது ஒரு பிரிவை தேர்வு செய்யும் போது ஒன்று மருத்துவ படிப்பிற்கு செல்ல முடியும். அல்லது என்ஜினீயரிங் செல்ல முடியும். முன்பு பயோ மேக்ஸ் பாடத்தை தேர்வு செய்தவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங் இரண்டிலும் சேர வாய்ப்பு இருந்தது. தற்போது பிரிக்கப்பட்ட பாடப்பிரிவு நடைமுறையில் அப்படி சேர முடியாது. இதுகுறித்து மாணவர்கள், பெற்றோர்கள் கூறுகையில், பிளஸ்- 1 சேரும்போதே மாணவர்கள் டாக்டரா? என்ஜினீயரா? என முடிவு எடுக்குமாறு வற்புறுத்தும் வகையில் பாடப்பிரிவு பிரிக்கப்பட்டுள்ளது.

    இம்முறையால் ராமநாத புரத்தில் கலந்தாய்வுக்கு வந்த 150 பேரில் 60 பேர் பங்கேற்கவில்லை. இதனால் மாணவர்கள் மன உளச்ச லுக்கு ஆளாகியுள்ளனர்.

    எனவே முதல்- அமைச்சர் ஸ்டாலின், கல்வித்துறை அமைச்சர், தலையிட்டு பழைய முறைப்படியே மாதிரி பள்ளிகளில் பயோ மேக்ஸ் பாடப்பிரிவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றனர்.

    ×