என் மலர்
நீங்கள் தேடியது "BJP MLAs"
- தொகுதி பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரிடம் பேசியதாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
- மண்டைக்காடு கலவரம் குறித்து வேணுகோபால் கமிஷன் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசியதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.
பா.ஜனதா எம்.எல். ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, காந்தி ஆகியோர் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து தொகுதி பிரச்சினையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
அதன் பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
"மண்டைக்காடு கலவரம் குறித்து வேணுகோபால் கமிஷன் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசினோம். வேணு கோபால் கமிஷன் அறிக்கையை அரசாணையாக கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறும் போது, "தொகுதி பிரச்சினை குறித்து பேசினோம்" என்றார்.
- எங்கள் மடியில் கனமில்லை. பா.ஜ.க. பிள்ளை பிடிப்பவர்கள் போல அலைகிறார்கள்.
- நான் இங்கு ராஜாவாக இருக்கிறேன். நான் ஏன் பா.ஜ.க.வில் போய் கூஜாவாக இருக்க வேண்டும்.
கோவை:
கோவை மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுனன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் அ.தி.மு.க.வில் ராஜாவாக உள்ளேன். பா.ஜ.க.வுக்கு சென்று கூஜா தூக்க விரும்பவில்லை. நேற்று கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது.
அந்த சமயத்தில் நான் ஓட்டல் அருகே உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். உடனே நான் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அவினாசி சாலை என்பது பா.ஜ.க.வினருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒரு பொது வழிச்சாலை. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம்.
அ.தி.மு.க.வில் உள்ள எந்தவொரு அடிப்படை தொண்டனும் பா.ஜ.க.வில் இணைய மாட்டான். நாங்களும் சொல்வோம். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைவார்கள்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்ததால் தான் பா.ஜ.க.வால் சட்டமன்றத் தேர்தலில் கோவையில் வெற்றி பெற முடிந்தது. நாங்கள் உயிரை கொடுத்து உழைத்து வெற்றி பெற வைத்தோம்.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜ.க.வில் இணைத்தது போல் இங்கும் நினைக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இது வடநாடு கிடையாது. இங்கிருந்து ஒரு தொண்டனை கூட பா.ஜ.க.வில் இணைக்க முடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கோவையில் வெற்றி பெற்றால் நான் அரசியல் வாழ்வை விட்டு விலகி கொள்கிறேன். எங்களால் தான் பா.ஜ.க.வினர் வெற்றி பெற்றார்கள் என்பதை மறுக்க இயலாது. கள நிலவரம் எங்களுக்கு தான் தெரியும். தமிழகத்தில் கோவை அ.தி.மு.க.வின் கோட்டை. பா.ஜ.க.வால் தனித்து வெல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைவார்கள்
- அப்படியா? நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. யார் உங்களுக்கு சொன்னது. வந்தால் சந்தோஷம்தான். வந்தால் சொல்லி அனுப்புகிறேன்
கோவை மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுனன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், நான் அ.தி.மு.க.வில் ராஜாவாக உள்ளேன். பா.ஜ.க.வுக்கு சென்று கூஜா தூக்க விரும்பவில்லை. நேற்று கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது.
அ.தி.மு.க.வில் உள்ள எந்தவொரு அடிப்படை தொண்டனும் பா.ஜ.க.வில் இணைய மாட்டான். நாங்களும் சொல்வோம். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைவார்கள் என்று பேசியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பிய போது, "அப்படியா? நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. யார் உங்களுக்கு சொன்னது. வந்தால் சந்தோஷம்தான். வந்தால் சொல்லி அனுப்புகிறேன் என்று பதில் அளித்தார்.
அதிமுக எம்.எல்.ஏ சொன்ன கருத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கே தெரியவில்லை என்று சொன்னது பேசு பொருளாகியுள்ளது.
- சித்தராமையா மனைவிக்கு சட்டவிரோத வீட்டு மனை ஒதுக்கீடு செய்ததாக பாஜக புகார்.
- சட்டசபையில் இரவு பகலாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் ரூ4,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு சட்டவிரோத வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுத்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி சம்பந்தப்பட்ட மூடா ஊழல் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க வேண்டும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர். அதனை சபாநாயகர் மறுத்த நிலையில், சட்டசபையில் இரவு பகலாக தர்ணா போராட்டத்தை பாஜக எம்.எல்.ஏ.க்கள் நடத்தி வருகின்றனர்.
கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் தலையணைகள் மற்றும் போர்வைகளை எடுத்துச் சென்று இரவு உணவை சாப்பிட்டு விட்டு அவையிலே இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கியது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சட்டசபை கூடவுள்ள நிலையில், இன்று மூடா ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது.
- பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
- பாஜக-வின் இந்த செயல் பின்வாசம் தந்திரம் என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைத்தது. இதை அடுத்து அவருக்கு பலமுறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
இடையில் பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. மே மாதம் 10-ந்தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் மாதம் 2-ந்தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக தனது இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு ஊழலில் சிக்கியிருப்பதாகவும், நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்துள்ள என்றும், இதன் மூலம் டெல்லியில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக டெல்லி பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
இந்நிலையில் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், "அரசியலமைப்பு நெருக்கடி" தொடர்பாக ஆம் ஆத்மி அரசை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் குழு நேற்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இதற்கிடையே பாஜக-வின் இந்த செயல் பின்வாசம் தந்திரம் என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
- காங்கிரசில் நாடு முழுவதும் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை விட 2.4 மடங்கு அதிகமாகும்.
- 7 மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணிகளுடன் ஆட்சி நடக்கிறது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது. அந்த கட்சி மொத்தம் 132 இடங்களை கைப்பற்றியது.
இதன் மூலம் நாடு முழுவதும் பாரதிய ஜனதாவுக்கு 1593 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இது காங்கிரசில் நாடு முழுவதும் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை விட 2.4 மடங்கு அதிகமாகும்.
இந்தியா கூட்டணிக்கு நாடு முழுவதும் 965 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதே நேரத்தில் பா.ஜ.க. இல்லாமல் அந்த கூட்டணியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் 515 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்.
பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து 20 மாநிலங்களில் ஆட்சி நடக்கிறது.
அருணாச்சல பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், அரியானா, மத்திய பிரதேசம், மணிப்பூர், ஒடிசா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய 13 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம் ஆகிய 7 மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணிகளுடன் ஆட்சி நடக்கிறது.
அதே நேரத்தில் கர்நாடகா, தெலுங்கானா இமலாச்சல பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 7 மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ஆட்சி நடக்கிறது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றனர். பாஜக, தனது எம்எல்ஏக்களை அரியானா மாநிலம் குருகிராமத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்தது. அவர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால் இந்த குழப்பத்திற்கு பாஜக காரணம் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லாததே இந்த குழப்பத்திற்கு காரணம் என்றும் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்தார். அத்துடன் குருகிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் திரும்பி வரும்படி கேட்டுக்கொண்டார். எனவே, பாஜக எம்எல்ஏக்கள் விரைவில் பெங்களூரு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #KarnatakaPolitics #Yeddyurappa #BJP
புதுடெல்லி:
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் ஆளும் பா.ஜனதா கட்சி முதல் கட்டமாக 131 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஜே.பி. நட்டா இந்த பட்டியலை வெளியிட்டார். முதல்-மந்திரி வசுந்தராராஜே தனது பாரம்பரிய மிக்க ஜால்ரா பதன் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த பட்டியலில் தற்போதைய எம்.எல்.ஏ.க் கள் 25 பேருக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்க வில்லை. அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 85 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
25 புதுமுகங்களுக்கு வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல 12 பெண்களுக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கி உள்ளது. #BJP #RajasthanElections
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. வசுந்தரா ராஜேசிந்தியா முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதையடுத்து இம்மாத இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இதற்கிடையே பா.ஜனதா மேலிடம் ராஜஸ்தானின் தேர்தல் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. மேலிட பொறுப்பாளரான அவினாஷ்ராய் கன்னா ஜெய்ப்பூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
குறிப்பாக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு பற்றி கருத்துக்கள் கேட்டார். மீண்டும் அவர்களுக்கு டிக்கெட் வழங்கலாமா? அல்லது புதுமுகங்களை களத்தில் இறக்கலாமா? என்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவினாஷ் கன்னா நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜஸ்தான் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த தவறான கருத்தும் இல்லை.
ஆனால் செயல்பாடு சரி இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கு பதில் புதுமுகங்கள் களத்தில் இறக்கப்படுவார்கள். மக்கள் மத்தியில் பெயர் பெற்று நல்ல முறையில் பணியாற்றியவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 எம்.எல்.ஏ.க்களில் பா.ஜனதாவின் பலம் 160 ஆக உள்ளது. அவர்களது செயல்பாடுகள் பற்றி பா.ஜனதா ரகசியமாக கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 60 சதவீத எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு சரியில்லை என்றும் அவர்களுக்கு மீண்டும் தேர்தல் டிக்கெட் வழங்கினால் டெபாசிட் இழப்பார்கள் என்றும் தகவல் வெளியானது.
இதுபற்றியும் அவினாஷ் ராய் கன்னா ஆலோசனை நடத்தினார். எனவே 60 சதவீத எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வாய்ப்பு இல்லை என்றும் அவர்களுக்கு பதில் மக்கள் செல்வாக்கு பெற்ற புதுமுகங்களுக்கு டிக்கெட் வழங்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. #RajasthanAssemblyElection #BJP
ஏற்கனவே கோரக்பூர், புல்பூர் பாராளுமன்ற தொகுதிகளை பா.ஜனதா இழந்த நிலையில் தற்போது தொடர் தோல்வியை தழுவியிருப்பது முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

5 பாராக்கள் கொண்ட இந்த கவிதைக்கு தடம் மாறிச் சென்றது அதிகாரிகள் ஆட்சி என்ற தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.
இதேபோல் பைரியா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திரா சிங் கூறுகையில், தேர்தல் தோல்விக்கு ஊழலே காரணம். தாசில்தார் தொடங்கி போலீஸ் நிலையங்கள் வரை ஊழல் பரவி விட்டது. அதிகாரிகளும், போலீசாரும் மக்களை தொல்லைப்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டார்கள். முதல்-மந்திரி அதை தடுக்க தவறியதால் அரசு மதிப்பு மரியாதையை இழந்து விட்டது என்றார்.
இதற்கிடையே ஈடாவா நகரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஆதித்யநாத் பேசுகையில், ஊழல்வாதிகளும், அவர்களை ஆதரிப்பவர்களும் பயங்கரவாதிகள். அவர்கள் கூட்டணி வைத்து பிரதமர் மோடிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றார். #UPbypolls #YogiAdityanath