என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP"

    • வெடிபொருள் வீசப்பட்ட தகவலறிந்ததம், சம்பவ இடத்தில் ஏராளமான பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில பாஜக கட்சியின் துணைத் தலைவர் ஷோபா சுரேந்திரன். பாஜகவின் கேரள மாநில முன்னாள் தலைவராக இருந்த சுரேந்திரனின் மனைவி ஆவார். இவர்களது வீடு திருச்சூர் அய்யந்தோல் பகுதியில் இருக்கிறது.

    இவர்களது வீட்டின் அருகே நேற்று இரவு ஏதோ வெடிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 மர்ம நபர்கள், வெடிபொருளை வீசியுள்ளனர். இதனால் பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

    வெடிபொருள் வீசப்பட்டபோது ஷோபா சுரேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்தனர். அவர்கள் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது வெடிபொருள் வீசப்பட்டதை அறிந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். ஷோபா சுரேந்திரன் வீட்டின் அருகே வீசப்பட்ட வெடிபொருள் எந்த வகையை சேர்ந்தது? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனை வீசியது யார்? எதற்காக வீசினார்கள்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வெடிபொருளை வீசிச் சென்ற மர்மநபர்களை அடையாளம் காணுவதற்காக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோ காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஷோபா சுரேந்திரன் வீடு அருகே வெடிபொருள் வீசப்பட்ட தகவலறிந்ததம், சம்பவ இடத்தில் ஏராளமான பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    • 160 தொகுதிகள் போக மீத முள்ள 74 தொகுதிகளை பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    அந்த வகையில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். இதற்காக பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள அவர் அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகளை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

    இதன் மூலம் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியானதையடுத்து மத்திய மந்திரி அமித்ஷா அளித்த பேட்டியில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று கூறியதாக செய்திகள் வெளியானது. இதுபற்றிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை என்று மறுத்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க.வை தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர வைத்திட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி மிகவும் தீவிரமாக உள்ளார். இதற்கு வசதியாக கூடுதல் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை களம் இறக்க அவர் முடிவு செய்துள்ளார். கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 150 தொகுதிகளை நீங்கள் எடுத்துக் கொண்டு மீதமுள்ள 84 தொகுதிகளையும் எங்களிடம் கொடுத்துவிடுங்கள். நாங்கள் தேவையான தொகுதிகளை எடுத்துக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்து விடுகிறோம் என்று கூறி உள்ளது.

    ஆனால் எடப்பாடி பழனிசாமியோ 160 தொகுதிகளில் அ.தி.மு.க.வை போட்டியிட வைப்பதற்கு விரும்புகிறார். அப்போதுதான் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 117 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் கணக்காக உள்ளது. 160 தொகுதிகள் போக மீத முள்ள 74 தொகுதிகளை பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் 49 தொகுதியில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே அ.தி.மு.க. தோல்வியை தழுவி இருந்தது. 34 சட்டமன்ற தொகுதிகளில் 2 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும், 15 தொகுதிகளில் 4 சதவீத வாக்குகள் வித்தியாசத்திலுமே அ.தி.மு.க. தோல்வி அடைந்திருந்தது.

    இந்த தொகுதிகள் எவை? எவை? என்பதை பட்டியல் போட்டு வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி அதனை அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களிடம் கொடுத்து குறிப்பிட்ட 49 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக நேற்று மாலையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்றும், தி.மு.க. அரசின் குறைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தேடித் தர வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    • "ராகுல் காந்தி நாட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும், நாட்டிற்குள் ஏதோ ஒரு மோசமான விஷயம் நடக்கிறது"
    • அரசியல் விவாதங்களில் தேசிய நலனை இழுப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை.

    காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களுடன் ஒத்துப்போகின்றன என்று உணர்த்தும் சமூக ஊடகப் பதிவிற்காக கர்நாடக காவல்துறை அம்மாநில பாஜக ஐடி பிரிவு மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

    கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வையும், ராகுல் காந்தி மேற்கொண்ட அமெரிக்க பயணத்தையும் குறிப்பிட்டு அந்த பதிவு இருந்தது.

    சர்ச்சைக்குரிய அந்தப் பதிவில், "ராகுல் காந்தி நாட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும், நாட்டிற்குள் ஏதோ ஒரு மோசமான விஷயம் நடக்கிறது" என்று அவரின் புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவர் சி.எம். தனஞ்சயா அளித்த புகாரின் பேரில், பெங்களூருவில் உள்ள ஹை கிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் பாஜக ஐடி பிரிவு மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்,"அரசியல் விவாதங்களில் தேசிய நலனை இழுப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை.

    எங்களுக்கு, நாட்டின் ஒற்றுமை முதலில் முக்கியம் எக்காரணம் கொண்டும் நாட்டின் அமைதி பாதுகாக்கப்பட வேண்டும். இதுபோன்ற முக்கியமான விஷயங்களை யாரும் அரசியலாக்கக்கூடாது. ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் மிக முக்கியமானது" என்று கூறினார். 

    • கொலை வெறித் தாக்குதல் நடத்திய மனிதத் தன்மையற்ற தீவிரவாதிகளின் வன்முறையைக் கண்டிக்கிறேன்.
    • பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிய எல்லா முயற்சிகளையும் சமரசம் இல்லாமல் பாஜக அரசு செய்யும்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷாவை பதவி விலக சொல்வதா என நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தேசத்தின் ஒற்றுமைக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசரகாலத்திலும் அரசியலா?

    காஷ்மீர் பஹல்காம் பகுதியில் அப்பாவிப் பொது மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மனிதத் தன்மையற்ற தீவிரவாதிகளின் வன்முறையைக் கண்டிக்கிறேன்.

    சுற்றுலாவிற்காக காஷ்மீர் சென்ற நம் மக்கள் மீது நடைபெற்ற கோழைத்தனமான. கொடூர தாக்குதலுக்கு ஒட்டுமொத்த தேசமும் வெகுண்டெழுந்து தங்களது கண்டனங்களையும், வேதனைகளையும் பதிவு செய்து வருகிறது. உலக நாட்டு மக்களும். தலைவர்களும் நமக்கு ஆறுதல் சொல்லி நமது நடவடிக்கைகளுக்குத் துணையாக நிற்கிறார்கள்.

    நமது பாரதப் பிரதமர். நரேந்திர மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு அரியணை ஏறியதில் இருந்து இந்த நிமிடம் வரை, உள்நாட்டு தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் என அனைத்திற்கும் எதிரான தன் கடுமையான யுத்தத்தை முன் வைத்துள்ளார். தன் உறுதியான நடவடிக்கைகளின் மூலம், தாய்நாட்டைப் பாதுகாத்து வருகிறார்.

    காங்கிரஸ் கட்சியானது தனது ஆட்சிக் காலத்தில் காஷ்மீர் மாநிலத்தில் துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்க அஞ்சியதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலக் காரணம், ஆம். இந்த நாட்டைத் துண்டாடத் துடித்தவர்களின் கரங்களைத் தங்களின் வாக்கரசியல் மூலம் பலப்படுத்தியது காங்கிரஸ்.

    ஆனால் தேசந்தின் வலிமையை, ஒற்றுமையை, சம உரிமையை நம்பும் பாஜக-வின் ஆட்சியில் காஷ்மீர் மீட்டெடுக்கப்பட்டது.

    டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வடிவமைத்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் இடைச்செருகலாக வந்தது தான் 370 வது சட்டப்பிரிவு சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் தன் எதிர்ப்பைத் தெரிவித்தும், அப்போதைய ஆட்சியாளர்களால் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான இந்த 370 வது சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது.

    இந்தியாவின் ஆன்மாவிற்கு சவால் விடுவதாக அமைந்திருந்த இந்த சட்டத்தை மாற்றி அமைத்து தேசப் பிரிவினைவாதிகளின் நோக்கங்களை முறியடித்தது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜ ஆட்சியில்தான்.

    ஆனால். 370 வது சட்டப்பிரிவை நீக்கக் கூடாது என காங்கிரஸ் திமுக கூட்டணியோடு சேர்ந்து திருமாவளவன் அவர்களும் மேடைக்கு மேடை முழங்கினார்.

    காஷ்மீர் பிரிவினைவாத போராட்டத்தைப் புரட்சி என்று வர்ணிப்பவர்களை எல்லாம் விசிக-வில் வைத்துக் கொண்டு, திருமாவளவன் அவர்களும் அதே தொனியில் பேசி வந்தார்.

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்தாலும், தீவிரவாதிகளாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதை விட இழப்புகளுக்கு அஞ்சலி செலுத்துவதை விட, திரு. திருமாவளவன் அவர்களின் கருத்தில் பாஜக அரசு 370 வது சட்டப்பிரிவை நீக்கியதைக் குறை சொல்வதுதான் இப்போது விஞ்சி நிற்கிறது. இதன் அடிப்படை நோக்கம் ஒன்றுநான்.

    திரு. திருமாவளவன் அவர்களின் இண்டி கூட்டணிக்கு, காஷ்மீர் பழையபடி நாட்டின் வளர்ச்சிக்கு விரோதமான பிரிவினைவாதம் பேசும் பகுதியாகவே இருக்க வேண்டும். லால் சவுக்கில் இந்தியக் கொடி பறக்கக் கூடாது என்ற எண்ணம் இருப்பதாகத் தான் புரிந்துகொள்ள முடிகிறது.

    ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கும் போது. இண்டி கூட்டணியும் அதன் பங்காளியான திருமாவளவன் அவர்களும் 370 வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு மட்டுமே எதிராக உள்ளனர். இதில் மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களையும் பதவி விலகச் சொல்கிறார் திரு. திருமாவளவன் அவர்கள். அதே போன்று தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராய சாவுகள் (கள்ளக்குறிச்சியில் மட்டும் 68 பேர் இறந்தனர்).

    லாக்-அப் மரணங்கள். சாதிய படுகொலைகள். பெண்களுக்கெதிரான குற்றங்கள் ஆகி ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்று. காவல்துறையைத் தன் நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள, சட்டமொழுங்கு சீர்கேட்டில் No.1 முதல்வரான திரு. ஸ்டாலின் அவர்களைப் பதவி விலகச்சொல்வாரா திருமாவளவன் அவர்கள்?

    மேலும். கோவை கார் குண்டுவெடிப்பை சிலிண்டர் வெடிப்பு எனப் பூசி மெழுகப் பார்த்து இன்று வரை வழக்கின் ஆழம் தீவிரவாத செயலாகவே நீண்டு செல்கிறதே அதற்காக ஏன் தமிழக முதல்வரைப் பதவி விலகச் சொல்லவில்லை? கோவை குண்டுவெடிப்பிற்கு காரணமான குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்குப் பாதுகாப்பு கொடுத்தது திமுக அரசு.

    விசிக கட்சியோ அவருக்கு மரியாதை செலுத்தியது. இதற்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டிய திரு. திருமாவளவன் அவர்கள். இந்த தேசத்தின் நவீன இரும்பு மனிதராக வாழும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களைப் பதவி விலகச் சொல்வது நியாயமா?

    தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட முடியும் என்று மனித குலத்திற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளின் நடவடிக்கை. நம் நாட்டையே உலுக்கி இருக்கும் இந்தத் தருணத்தில் நேசத்தின் ஒற்றுமைக்காக உரத்த குரல் கொடுக்காமல் இந்த நேரத்திலும் அரசியல் செய்ய நினைக்கும் திருமாவளவன் அவர்களின் அறியாமையை நினைத்து வருந்துகிறேன்.

    நம் உறவுகளை எல்லாம் உயிரற்ற சடலங்களாக்கி, மதத்தின் பெயரால் மனிதநேயத்திற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் விதமாக திரு. திருமாவளவன் அவர்கள் பேசுவது, ஓட்டு அரசியலுக்காக அவர் எதுவும் செய்யத் துணிவார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசு, தீவிரவாதத்திற்கு எதிராக எந்த உச்சபட்ச நிலைக்கும் செல்லும் என்பதற்கு கடந்த கால உதாரணங்களே நிறைய உள்ளன.

    எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, உள்ளூர் பயங்கரவாதமாக இருந்தாலும் சரி அதை வேரோடு பிடுங்கி எறிய எல்லா முயற்சிகளையும் சமரசம் இல்லாமல் பாஜக அரசு செய்யும்.

    ஆனால், அதற்குத் துணை துணை நிற்காமல், தேசத்தின் வளர்ச்சியை மனதில் நிறுத்தாமல் எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் போக்கினை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டுமென இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பையை பாராமன்றத்துக்கு கொண்டு வந்தார்.
    • 17 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் தனது தாய்க்கு ரூ.4 லட்சம் கொடுத்ததற்காக விசாரிக்கப்பட்டார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தி, கடந்த ஆண்டு பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, பாலஸ்தீனம் ஆதரவு மற்றும் வங்காளதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு ஆதரவு வாசகம் எழுதப்பட்ட பையை எடுத்து வந்து கவனத்தை ஈர்த்தார்.

    இதற்கிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கூட்டு பாராளுமன்றக் குழுவில் உள்ள பாஜக பெண் எம்.பி.யான பன்சூரி ஸ்வராஜ், நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பையை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தார்.

    அதில் கொள்ளை என்று எழுதப்பட்டு இருந்தது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான இவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி. பன்சூரி ஸ்வராஜ்க்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, இந்த கொள்ளையை நீங்கள் சுமக்கிறீர்களா?அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது.

    எதிர்க்கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து குறிவைக்கிறது. என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்கிறார்கள். 17 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் தனது தாய்க்கு ரூ.4 லட்சம் கொடுத்ததற்காக விசாரிக்கப்பட்டார்.

    இது என்ன மாதிரியான விசாரணை? விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டல் பிரசாரத்தை பாஜக திட்டமிட்டு செய்து வருகிறது.விசாரணை செய்யப்பட்டு பின்னர் பாஜகவில் சேருபவர்கள் திடீரென்று அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் மறைந்துவிடும் என்றார்.

    • காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார்.
    • இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையம் மீது குற்றம்சாட்டினார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் பாஸ்டன் நகரில் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பில் ஏதோ பிரச்சனை உள்ளது என குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நளின் கோலி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் தலைமை யங் இந்தியன்ஸ் மற்றும் நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து முற்றிலும் மௌனம் காக்கிறது. ப.சிதம்பரம் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆதரவாக அறிக்கைகளை வெளியிடுவது காங்கிரஸ் பீதியில் இருப்பதைக் காட்டுகிறது.

    தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் நடத்துதல் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கள் காங்கிரஸ் நேஷனல் ஹெரால்டு வழக்கிலிருந்து விலகிச் செல்கிறது என்பதையும், அவர்கள் வழக்கிலிருந்து மக்களின் கவனத்தை நிறுவனங்களைத் தாக்கும் வகையில் திசைதிருப்ப முயல்கிறார்கள் என்பதையும் நிரூபிக்கிறது.

    தேர்தல் ஆணையம் சிறந்த சாதனைப் பதிவைக் கொண்டிருப்பதால் இது ஒரு தீவிரமான விஷயம். தேர்தல்களில் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன. பல மாநிலங்களில் காங்கிரஸ் அரசாங்கத்தை அமைத்துள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் இதுபோன்ற பல தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று இப்போது எம்.பி.க்களாக உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தையை நீங்கள் எவ்வாறு கேள்வி கேட்கிறீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பின் அ.தி.மு.க. மூத்த தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியுள்ளார்.
    • முக்கிய பிரச்சனைகளை ஒன்று சேர்ந்து எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் பா.ஜ.க. மாநில தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இவர்களது சந்திப்பானது எதிர்க்கட்சி தலைவர் அறையில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாக கூறப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பின் அ.தி.மு.க. மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜூ ஆகியோரை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

    முக்கிய பிரச்சனைகளை ஒன்று சேர்ந்து எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின்பு எடப்பாடி பழனிசாமி- நயினார் நாகேந்திரன் முதன்முறையாக சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அண்ணாமலையை மாற்ற வேண்டும் பா.ஜ.க. தலைமைக்கு அ.தி.மு.க. அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதி செய்தார்.

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பொறுப்பு ஏற்று அண்ணாமலை பணியாற்றி வந்தார். இவரது தலைமையிலான பா.ஜ.க.வினர் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவே தலைமை கருதியது. இருப்பினும் இவர் மீது அ.தி.மு.க.வினர் அதிருப்தியில் இருந்தனர். கூட்டணி தொடர வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் பா.ஜ.க. தலைமைக்கு அ.தி.மு.க. அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதி செய்தார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலை மாற்றம் குறித்து கேட்டதற்கு, பா.ஜ.க.வின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்படும் என அமித்ஷா சூசகமாக தெரிவித்தார். இதற்கு மறுநாளே பா.ஜ.க. மாநில புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அதனை தொடர்ந்து, பா.ஜ.க. யுவமோர்ச்சா (BJYM) பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு அண்ணாமலை தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜ.க. மத்திய தலைமை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. 

    • யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம்.
    • திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்ற அடிப்படையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி.

    சென்னை:

    தமிழக சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    * குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை, அதனால் உயிரிழப்பு ஏற்படவில்லை என அமைச்சர் கூறுகிறார்.

    * குடிநீரில் கழிவுநீர் வருவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    * புகார் வந்த உடன் குடிநீரில் கழிவு நீர் கலப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

    * திருவிழாவில் வழங்கிய மோர், குளிர்பானத்தால் தான் பிரச்சனை என அமைச்சர் கூறுகிறார்.

    * கோவில் திருவிழாவுக்கு பலரும் சென்ற நிலையில் உறையூர் மக்களுக்கு மட்டும் பாதிப்பு ஏன்? குளிர்பானம் தான் பிரச்சனை என்றால் பல பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு ஏன் பாதிப்பு இல்லை.

    * அதிமுக- பாஜக கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலின் பதறுவது ஏன்? பயப்படுவது ஏன்?

    * யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம்.

    * திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்ற அடிப்படையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி.

    * மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நீட் தேர்வுக்கு அறிவிக்கை வெளியானது.

    * நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியில் காங்கிரஸ் இருந்தபோது தான்.

    * நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க., தடுத்து நிறுத்த முயற்சித்தது அ.தி.மு.க.

    * இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் நீட் ரத்தாகி இருக்கும் என முதலமைச்சர் கூறுகிறார்.

    * மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது ஏன் நீட் தேர்வை தடுக்கவில்லை.

    * பா.ஜ.க.வுடன் திமுக கூட்டணி வைத்த போது இனித்தது, இப்போது கசக்கிறதா? என்றார். 



    • ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இந்த நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
    • அவர்கள் அப்பாவியாக தங்களை காட்டிக்கொண்டு கொண்டு மற்றவர்களிடம் பிரசங்கம் செய்கிறார்கள்.

    டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவால், சம்பவ் ஜெயின் என்பவரை நேற்று முன் தினம் திருமணம் செய்தார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் தனது மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலின் நிச்சயதார்த்த விழாவில் புஷ்பா 2 படத்தில் வரும் சாமி பாடலுக்கு தனது மனைவி சுனிதாவுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.

    டெல்லியின் ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இந்த நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

    இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் திருமணம் குறித்து பாஜக விமர்சித்துள்ளது. "திருமணங்கள் எளிமையாக இருக்க வேண்டும், எந்த ஆடம்பரமும் இருக்கக்கூடாது" என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய பழைய வீடியோவை டெல்லி பாஜக தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    "முதலில், அவர்கள் அப்பாவியாக தங்களை காட்டிக்கொண்டு கொண்டு மற்றவர்களிடம் பிரசங்கம் செய்கிறார்கள். பின்னர் கோடிக்கணக்கில் செலவு செய்து, 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கள் குடும்ப திருமணங்களை நடத்துகிறார்கள்," என்று பாஜக  விமர்சித்துள்ளது. 

    • தமிழ்நாட்டில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது.
    • பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இதனை சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தினார்.

    இதனையடுத்து, பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். இந்நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு கோவையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். வேடத்தில் பாஜக கொடியுடன் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலையுள்ளது.

    அதிமுக கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆர். வேடத்தில் இருந்த இருந்த நபர் பாஜக கொடியுடன் நடனமாடிய விவகாரம் அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தன்னை பாஜககாரராக காட்டிக் கொள்கிறார் ஆளுநர்
    • அதிமுக - பாஜக கூட்டணியை 2 முறை தோற்கடித்துள்ளோம்

    "ஆளுநரின் அதிகாரம் என்பது ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே" என்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கே: கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு குறித்து உங்கள் பதில் என்ன?

    பதில்: ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுதான் சட்டமியற்றும் அதிகாரம் மிக்கது. நியமனப் பதவியான கவர்னர் பதவி என்பது ஒரு கவுரவப் பதவிதான். சட்டமன்றத்தின் அதிகாரத்தை முடக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பின் வாயிலாக தெளிவுபடுத்தி-மத்திய-மாநில உறவுகளில் அதற்குரிய அதிகாரம், ஒரு தபால்காரருக்குரியதுதான் என்பதைத் தொடர்ந்து தி.மு.க சொல்லி வருகிறது. அது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டி ருக்கிறது.

    கே: கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிலேயே தொடர வேண்டும் என்று நீங்கள் இன்னும் நினைக்கிறீர்களா?

    பதில்: அவருக்குரிய பதவிக்காலம் முடிந்தபிறகும் தமிழ்நாட்டில்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழுக்கு எதிராகவும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராகவும், தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராகவும் செயல்படும் ஆளுநர், பச்சையான பா.ஜ.க. காரராகவே வெளிப்படுத்திக் கொள்கிறார்.

    அவருடைய அத்தனை செயல்பாடுகளும் மக்களால் வெறுக்கப்படுவதால், அவர் பதவியில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளை இன்னும் அதிகமாக மேற்கொண்டு, தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்வார்.

    என்று தெரிவித்தார்.

    ×