என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Boeing Flight"
- விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தை தரை இறக்குவதற்கான தகவல் விமானிகளுக்கு அனுப்பப்பட்டது.
- அந்த அழைப்பை விமானிகள் இருவரும் எடுத்து பேசவில்லை. பல முறை அழைத்தபோதும், அந்த அழைப்புக்கு விமானிகளிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.
அடிஸ்அபாபா:
சூடானில் இருந்து எத்தியோப்பியா நாட்டின் அடிஸ் அபாபா சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 15-ந் தேதி போயிங் விமானம் ஒன்று புறப்பட்டது.
விமானத்தை இயக்கும் பணியில் 2 பைலட்டுகள் இருந்தனர். அபாபா சர்வதேச விமான நிலையத்தை விமானம் நெருங்கும் போது விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தை தரை இறக்குவதற்கான தகவல் விமானிகளுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் அந்த அழைப்பை விமானிகள் இருவரும் எடுத்து பேசவில்லை. பல முறை அழைத்தபோதும், அந்த அழைப்புக்கு விமானிகளிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.
அதன்பின்பு தான் விமானிகள் இருவரும், விமானத்தை தானியங்கி கருவிகளுடன் இயக்கிவிட்டு, விமானிகள் அறையில் அசந்து தூங்கி கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை பத்திரமாக தரை இறக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி விமானம் எச்சரிக்கை மணி அடித்தபடி ஓடுபாதையை நெருங்கிய போது, அலாரத்தின் தொடர் சத்தத்தால் விமானிகள் விழித்து கொண்டனர்.
அதன்பிறகு அவர்கள் பத்திரமாக விமானத்தை தரை இறக்கினர். சுமார் 25 நிமிட தாமதத்திற்கு பிறகு விமானம் தரை இறங்கியது. விமானம் வானத்தில் பறந்தபோது விமானிகள் அசந்து தூங்கிய விவகாரம் குறித்து அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் உயிர் இழந்தனர். இதே ரக விமானம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
5 மாதங்களில் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கியதால், நாடு முழுவதும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் விமானத்தின் முக்கியமான மென்பொருளில் குறைபாடு இருந்ததை போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201905230132149998_1_i0v02gxc._L_styvpf.jpg)
போயிங் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவின் சிகாகோ நகர கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 189 பேர் பலியாகினர். இதேபோல் கடந்த மாதம் எத்தியோபியன் ஏர் விமானம் விபத்துக்கு உள்ளானதில் 157 பேர் பலியாகினர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201905171131194894_1_accident-on-lion._L_styvpf.jpg)
மீண்டும் விமான போக்குவரத்தை மேற்கொள்வதற்கு நிர்வாகத்திடம் இருந்து ஒப்புதல் பெறும் வகையில் ஃபெடரல் நிர்வாகத்திற்கு கூடுதல் தகவல்களை போயிங் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
737 மேக்ஸ் ரக போயிங் விமானங்களை மீண்டும் இயக்க, வரும் 23ம் தேதி டெக்சாஸ் மாநிலத்தில் ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் ஆலோசனை நடத்த இருக்கிறது.
டெல்லி விமானநிலையத்தில் நேற்றிரவு டெல்லியில் இருந்து சான்ஃப்ரான்சிஸ்கோ செல்ல ஓடுதளத்தில் போயிங் 777 விமானம் நின்றுக் கொண்டிருந்தது. இந்த விமானத்தின் பின்பகுதியில் இருந்த ஏசியில் பழுதடைந்துள்ளது.
ஏசியை பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக பின்பகுதியில் தீப்பிடித்தது. இதையடுத்து ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறிது நேரம் கழித்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் நடக்கவிருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீப்பிடித்தபோது பயணிகள், விமானிகள் என யாரும் உள்ளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Boeing777CaughtFired