என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy kidnapped"

    • சிறுவன் சகிப் உதீன் கடந்த 12ம் தேதி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வைத்து கடத்தப்பட்டான்.
    • சிறுவனை மீட்ட ரெயில்வே போலீசார் கடத்தலில் ஈடுபட்ட பெண்களையும் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் 14 நாட்கள் கழித்து ஆந்திரா மாநிலம் குண்டூர் அருகே மீட்கப்பட்டுள்ளான்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் சகிப் உதீன் கடந்த 12ம் தேதி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வைத்து கடத்தப்பட்டான்.

    சிசிடிவி காட்சிகள் மூலம் சகிப் உதீனை 5 பெண்கள் வடமாநிலம் செல்லும் ரெயில் மூலம் ஆந்திராவிற்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    சிறுவன் சகிப் உதீன் குண்டூர் மாவட்டம் நசரத்பேட்டை ரெயில் நிலையம் அருகே இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று மீட்டனர்.

    மேலும், சிறுவனை மீட்ட ரெயில்வே போலீசார் கடத்தலில் ஈடுபட்ட பெண்களையும் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.

    தருமபுரி அருகே சிறுவன் கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி

    தருமபுரியை அடுத்த கொடுத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு ஜெயம்ரவி என்ற மகன் உள்ளார். கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். மாதேஷ் வீட்டில் அவரது மகன் ஜெயம்ரவி வசித்து வந்தார். சம்பவத்தன்று மஞ்சுளாவின் உறவினர்கள் சிறுவன் மாதேசை கடத்தி சென்றுவிட்டனர்.

    இது குறித்து மாதேஷ் கொடுத்த புகாரின்பேரில் மதிகோண்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வீட்டு முன்பு விளையாடிய சிறுவன், திடீரென மாயமானான். அவனை யாராவது கடத்திச் சென்றிருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பூவாணி கிராமத்தைச் சேர்ந்தவர் திருவாசகம், விவசாயி. இவருடைய மகன் விக்னேஸ்வரன் (வயது 4).

    நேற்று விக்னேஸ்வரன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்த்த போது சிறுவனை காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் விக்னேஸ்வரனை கண்டு பிடிக்க முடியவில்லை.

    எனவே அவனை யாராவது கடத்திச் சென்றிருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராணிமுத்து வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவன் விக்னேஸ்வரனை தேடி வருகிறார்.

    இதேபோல் ராமநாதபுரம் குயவன் குடியைச் சேர்ந்தவர் செந்தில் பிரசாத். இவருடைய மகள் பிரதீபா (19), கீழக்கரை தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர், கடந்த 21-ந் தேதி வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால் கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கீழக்கரை அருகே உள்ள நல்லிருக்கை கோகுல் நகரைச் சேர்ந்தவர் பாலு மகள் பிரதீபா (21), ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து பாலு கொடுத்த புகாரின் பேரில் திருஉத்தரகோசமங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனா வழக்குப்பதிவு செய்து மாயமான பிரதீபாவை தேடி வருகிறார்.

    ×