என் மலர்
நீங்கள் தேடியது "Break Pipe"
- மருதூர் கடைத்தெருவில் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, செல்லக்கோன் வாய்க்காலில் தண்ணீர் வீணாக செல்கிறது.
- கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்த தண்ணீர் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வண்டுவாஞ்சேரி நீரேற்று நிலையத்திலிருந்து அண்ணாட்டை, வாய்மேடு, தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் வழியாக வேதாரண்யத்திற்கு கூட்டு குடிநீர் திட்ட குழாய் சென்றடைகிறது.
இந்நிலையில், மருதூர் கடைத்தெருவில் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள செல்லக்கோன் வாய்க்காலில் தண்ணீர் வீணாக செல்கிறது.
இதேபோல், பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்த தண்ணீர் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது.
கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட குழாயை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.