search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brewery"

    • டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரபல மதுபான தயாரிப்பு [Brewery] நிறுவனம் கார்ல்ஸ்பெர்க் [Carlsberg].
    • இந்திய மற்றும் நேபாள சந்தைகளில் கார்ல்ஸ்பெர்க் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று எதிரிப்பார்கலாம்.

     டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரபல பியர் மதுபான தயாரிப்பு [Brewery] நிறுவனம் கார்ல்ஸ்பெர்க் [Carlsberg]. இந்நிறுவனத்தின் பார்ட்நர்ஷிப்பில் இந்தியாவில் CSAPL நிறுவனமும் நேபாள நாட்டில் கூர்க்கா ப்ரியூயரி நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த இரண்டு பார்ட்நர்ஷிப் நிறுவனங்களையும் 744 மில்லியன் டாலர்களுக்கு [ரூ.6,234 கோடிக்கு] விலைக்கு வாங்க கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் முன்வந்துள்ளது.

     

    இதன்படி CSAPL நிறுவனத்தில் ஏற்கனவே அதிக பங்குகளை வைத்துள்ள கார்ல்ஸ்பெர்க், அதில் மீதமுள்ள 33.33% பங்குகளையும் தற்போது வாங்க உள்ளது. மேலும் நேபாள நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் கார்ல்ஸ்பெர்க் வாங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி விரைவில் இந்த இரண்டு நிறுவனமும் கார்ல்ஸ்பெர்க் நிர்வாகத்தின் கீழ் செல்கிறது.

     

    ஆசியாவில் கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் வலுவாகக் காலூன்ற இது ஒரு வரலாற்று நகர்வாகப் பார்க்கப்படுகிறது. எனவே வரும் காலங்களில் இந்திய மற்றும் நேபாள சந்தைகளில் கார்ல்ஸ்பெர்க் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று எதிரிப்பார்கலாம். 

    • 3 பேர் கைது
    • மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுச்சேரி;

    புதுவை வில்லியனூர்- திருக்காஞ்சி ரோட்டில் நேற்று ஒரு மினி வேன் சந்தேகப்படும்படி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அந்த மினி வேன் நிற்பது குறித்து சிறப்பு அதிரடிப் படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைய டுத்து, போலீசார் அங்கு விரைந்து வந்து, அந்த மினி வேனை சோதனையிட்டனர்.

    இதில் போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப் படும். எரிசாராயம், கள்ளச் சாராயம், காலி மதுபாட்டில் கள், ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள், தமிழக போலி மதுபான லேபிள்கள் மற்றும் மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி உடனடியாக புதுச்சேரி கலால்துறையின ருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கலால்துறை அதிகாரிகள் விரைந்து சென்று, போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப் பட்ட மூலப்பொருட்களு டன் மினிலாரியை கைப் பற்றினர்.

    அப்போது சந்தேகப்படும் படி நின்றுக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செந்தில்குமார், சீனு என்பதும். இவர்கள் மினிவேனில் போலி மதுபானம் தயாரித்து அதனை தமிழக பகுதியில் விற்பனை செய்ய தயாராகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் விசாரணை நடத்தியதில் இந்த போலி மதுபானம் தயாரிப்பில் காலாப்பட்டை அடுத்த தமிழக பகுதியான அனு மந்தை அருகே செட்டி யான்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் முக்கிய குற்றவாளியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜசேகரையும் கலால் போலீசார் கைது செய்தனர்.

    ×