என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brisbane Cricket Ground"

    • இரு தரப்புக்கும் சரிசம அளவில் ஆடுகளம் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்.
    • கடந்த முறை இந்திய அணி இங்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதால் கூடுதல் நம்பிக்கையோடு களம் இறங்குவார்கள்.

    பிரிஸ்பேன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ள நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தொடங்குகிறது. கடந்த முறை இந்திய அணி இங்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதால் கூடுதல் நம்பிக்கையோடு களம் இறங்குவார்கள்.

    பிரிஸ்பேன் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது குறித்து பிட்ச் பராமரிப்பாளர் டேவிட் சந்துர்ஸ்கி கூறுகையில், 'ஒவ்வொரு முறையும் இந்த ஆடுகளத்தை நல்ல வேகத்துடன், பவுன்ஸ் இருக்கும் வகையிலேயே தயாரிக்கிறோம். கப்பா ஆடுகளம் என்றாலே வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வேகமும், பவுன்சும் இருக்கும் என்பதை அறிவார்கள். அந்த பாரம்பரிய தன்மை மாறாமல் அப்படியே இந்த முறையும் அமைக்க முயற்சிக்கிறோம்.

    பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் இரு தரப்புக்கும் சரிசம அளவில் ஆடுகளம் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். எல்லாவற்றுக்கும் ஏற்றது போல் இருக்கும் என நம்புகிறேன். கடந்த இரு நாட்கள் இங்கு மழை பெய்துள்ளது. ஆனால் போட்டிக்கு 3 நாட்கள் இருப்பதால் அதற்குள் ஆடுகளத்தை சரியான முறையில் தயார் செய்து விடுவோம் ' என்றார்.

    • பிரிஸ்பேனில் வெற்றியை ருசித்த ஒரே ஆசிய அணி என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு.
    • இந்த மைதானத்தில் இந்திய அணி 1947-ம் ஆண்டில் 58 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும்.

    பிரிஸ்பேனில் 1931-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடந்து வருகிறது. இந்த மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் ராசியானது. இங்கு 66 டெஸ்டுகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலியா 42-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 13-ல் 'டிரா'வும் கண்டுள்ளது. ஒரு டெஸ்ட் சமனில் (டை) முடிந்தது.

    இந்திய அணி இந்த மைதானத்தில் 7 டெஸ்டுகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 5-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. இந்த ஒரே வெற்றி 2021-ம் ஆண்டு ஜனவரியில் கிடைத்தது. அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 328 ரன் இலக்கை இந்திய அணி சுப்மன் கில் (91 ரன்), ரிஷப் பண்ட் (89 ரன்) ஆகியோரின் அதிரடியால் எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 300 ரன்களுக்கு மேலான இலக்கை விரட்டிப்பிடித்தது இதுவே முறையாகும்.

    அத்துடன் 32 ஆண்டுக்கு பிறகு இங்கு ஆஸ்திரேலியா சந்தித்த முதல் தோல்வியாகவும் அமைந்தது. இந்த நாள் வரைக்கும் பிரிஸ்பேனில் வெற்றியை ருசித்த ஒரே ஆசிய அணி என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. இதே போல் இந்தியா மீண்டும் சாதிக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    அதே சமயம் இங்கு கடந்த ஜனவரி மாதம் நடந்த டெஸ்டில் வெஸ்ட் இண்டீசிடம் 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா மறுபடியும் எழுச்சி பெற வரிந்து கட்டும் என்பதால் களத்தில் அனல் பறக்கும்.

    இங்கு ஆஸ்திரேலிய அணி 4 முறை 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. 1946-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 645 ரன்கள் சேர்த்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். இந்திய அணி 1947-ம் ஆண்டில் 58 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும்.

    இதுவரை 66 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ள பிரிஸ்பேனில் 118 சதங்களும், 303 அரைசதங்களும் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல், மைக்கேல் கிளார்க் தலா 5 சதங்கள் நொறுக்கியுள்ளனர். இந்திய வீரர்களில் சவுரவ் கங்குலி, முரளிவிஜய், சுனில் கவாஸ்கர், ஜெய்சிம்ஹா செஞ்சுரி அடித்திருக்கிறார்கள்.

    அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ேஷன் வார்னே (68 விக்கெட், 11 டெஸ்ட்) முதலிடம் வகிக்கிறார். தற்போது ஆடும் வீரர்களில் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் (51 விக்கெட்), மிட்செல் ஸ்டார்க் (47 விக்கெட்) கணிசமாக விக்கெட் எடுத்துள்ளனர்.

    பிரிஸ்பேன் ஆடுகளத்தில் பந்து வேகத்துடன் நன்கு பவுன்சும் இருக்கும். போட்டி நடக்கும் 5 நாட்களும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளைய தினம் மழை பெய்வதற்கு 50 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே மேகமூட்டமான சீதோஷ்ண நிலை காணப்பட்டால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.

    • பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
    • ரசிகர்களுக்கு முதல் நாளுக்கான டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடந்த 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றன. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 5.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது.

    அரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் போட்டி தொடங்கியது. ஆட்டத்தின் 13-வது ஓவரை ஆகாஷ்தீப் வீசியபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் முதல் நாள் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

    முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 19 ரன்னும், மெக்ஸ்வீனி 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் , முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்துசெய்யப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு முதல் நாளுக்கான டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது. 15 ஓவர்களுக்கு கீழ் வீசப்பட்டதால் டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது.

    • பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
    • முதல் நாள் ஆட்டம் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. பாதியில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விதிப்படி டெஸ்ட் போட்டியின் தினத்தில் குறைந்தபட்சம் 15 ஓவர்கள் வீசப்படா விட்டால் டிக்கெட் கட்டணத்தை 100 சதவீதம் திருப்பி வழங்க வேண்டும். இதன்படி 30,145 ரசிகர் களுக்கும் டிக்கெட்டின் முழுத் தொகை திரும்ப வழங்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.5.4 கோடியை திரும்ப வழங்க உள்ளது. 10 பந்துகள் குறைவாக வீசப்பட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.5.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ×