என் மலர்
நீங்கள் தேடியது "Bundi Lake"
- தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- காலை நிலவரப்படி நீர்வரத்து 11 ஆயிரத்து 290 கன அடியாக உயர்ந்து உள்ளது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரி முழு கொள்ளவை எட்டி உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34.43 அடி வரை தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் பலத்த மழையால் ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், கிருஷ்ணா கால்வாய் மூலம் வரும் 450 கனஅடி நீர் மற்றும் மழை நீர் ஆகியவை சேர்ந்து பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 11 ஆயிரத்து 290 கன அடியாக உயர்ந்து உள்ளது.
இதற்கிடையே பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளதால் இன்று காலை உபரி நீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் பூண்டியை சுற்றி உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்றாம் பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, ஏறையூர், பீமன் தோப்பு, கொரக்கதண்டலம், சோமதேவம்பட்டு, மெய்யூர், தாமரைப்பாக்கம் திருக்கண்டலம் ஆத்தூர், பாண்டிக்காவனூர், ஜெக நாதபுரம், புதுக்குப்பம், கன்னிபாளையம், வன்னி பக்கம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயில்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், காரனோடை, மீஞ்சூர், எண்ணூர் உள்ளிட்ட 50 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லு மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி ஆகும். இதில் தற்போது 2,960 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தபடி உள்ளனர்.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக பூண்டி ஏரி நீர்தேக்கத்தின் அருகே கொசஸ்தலை ஆற்றில் குறுக்கே செல்லும் தரைப்பாலம் மூழ்கியது.இதனால் திருவள்ளூரில் இருந்து கிருஷ்ணாபுரம், ரங்காபுரம், நம்பாக்கம், வல்லாத்துக்கோட்டை, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏரி, ஆறுகளில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆற்றை சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- சமூக ஆர்வலர்களும் கொசஸ்தலை ஆற்றை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை மணலி புதுநகரில் கொசஸ்தலை ஆறு உள்ளது. மழைக்காலங்களில் பூண்டி ஏரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரக்கூடிய மழைநீர் மற்றும் உபரிநீர் இந்த ஆறு வழியாக வந்து மணலி புதுநகரை கடந்து எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலக்கிறது.
இந்நிலையில் புது நாப்பாளையத்தில் இருந்து இடையஞ்சாவடி வரை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு கொசஸ்தலை அற்றின் இருபுறமும் ஆங்காங்கே கரைகள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பெருமழை பெய்யும் பட்சத்தில் ஆற்றுநீர் உடைந்த கரையின் வழியாக வெளியேறி மணலி புதுநகர் பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளது.
கொசஸ்தலை ஆற்றின் கரையை இருபுறமும் உயர்த்தி சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஏற்கெனவே அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், சமூக ஆர்வலர்களும் கொசஸ்தலை ஆற்றை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆற்றை சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே பெருமழை பெய்வதற்கு முன்பு கொசஸ்தலை ஆற்றின் கரையை சீரமைக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கை ஆகும். இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கூறியதாவது:-
கடந்த காலங்களில் பெருமழை பெய்யும் போது உபரி நீர் மணலி புதுநகர் பகுதியில் குடியிருப்புகளில் புகுந்ததால் மிகப்பெரிய பாதிப்பும், பொதுமக்களுக்கு பொருள் இழப்பும் ஏற்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்டெடுக்க அரசு மிகவும் சிரமப்பட வேண்டிய திருந்தது. எனவே தற்போது சேதமடைந்துள்ள கொசஸ்த லை ஆற்றின் கரையை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மழை பெய்யும் நேரங்களில் இந்த பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து பொது மக்கள் மீண்டும் இழப்புகளை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ஏரிக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- 1000 கனஅடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
வடகிழக்கு பருவமழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் சோழவரம் ஏரியை தவிர மற்ற ஏரிகள் அனைத்தும் நிரம்பின. முழு கொள்ளளவை எட்டியதால் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து ஏற்கனவே உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
தற்போது பூண்டி ஏரியில் இருந்து மட்டும் 1000 கனஅடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆனால் சோழவரம் ஏரிக்கு மட்டும் எதிர்பார்த்த அளவு தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. இதனால் சோழவரம் ஏரியில் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்தது.
இந்த நிலையில் தற்போது சோழவரம் ஏரி 10 மாதங்களுக்கு பிறகு 50 சதவீதம் நிறைந்து உள்ளது. மொத்த கொள்ளளவான 1080 மில்லியன் கனஅடியில் 503 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு இதே நாளில் சோழவரம் ஏரியில் 770 மி.கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியில் மொத்த உயரமான 35 அடியில் 34.93 அடியும், புழல் ஏரியில் 21 அடியில் 19.99 அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 24 அடியில் 23.15 அடிக்கும் தண்ணீர் உள்ளது. ஏரிகளில் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.