என் மலர்
நீங்கள் தேடியது "Cancer surgery"
- முகாமில் 100-க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
- முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் மார்பக புற்றுநோய் அகற்றுதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தென்காசி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி இணைந்து மருத்துவ முகாமை ஆலங்குளம் அருகில் உள்ள நெட்டூர் கிராமத்தில் கடந்த மாதம் நடத்தியது.
முகாமில் 100-க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர்களால் மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 4 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஸ்வர்ணலதா, விஜயகுமார், முத்துக்குமாரசுவாமி, ஜெரின் இவஞ்செலின், விக்னேஷ் சங்கர் ஆகிய மருத்துவக்குழுவினர்களால் மார்பக புற்றுநோய் அகற்றுதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் டாக்டர் பிரேமலதா கூறும்போது, இதுபோன்ற உயிர் காக்கும் உயர் அறுவை சிகிச்சைகள், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் நடப்பது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றார். கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறுகையில், தென்காசி மருத்துவமனையில் 4 பேருக்கும் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்டது மிகப்பெரிய சாதனை. இதனை நடத்தி காட்டிய மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுக்கள் என்றார்.
- அமெரிக்காவில் மியாமி மாகாணத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை.
- சிவராஜ்குமாருக்கு செயற்கை சிறுநீரகப்பை பொருத்தப்பட்டுள்ளது.
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறுநீரகப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அவர் சிகிச்சைக்காக கடந்த 18ம் தேதி அமெரிக்கா சென்றார்.
அங்கு, அமெரிக்காவில் மியாமி மாகாணத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவர் முருகேஷ் மனோகர் மேற்பார்வையில் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மருத்துவரின் ஆலோசனையின்படி, சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவராஜ்குமாருக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுநீரகப்பை அகற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிவராஜ்குமாருக்கு செயற்கை சிறுநீரகப்பை பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது, சிவராஜ்குமாரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவரே வீடியோ ஒன்றை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.