search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case against 40 people"

    • மறியலில் ஈடுபட்டதால் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் கனிமவள துறை சார்பில் வேலூர் பகுதியை சேர்ந்தவருக்கு கல்குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அவர் நேற்று காலை கல்குவாரிக்கு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் கல் உடைக்கும் பணியில் ஊழியர்களுடன் ஈடுபட்டார்.

    இதனை அறிந்த கிராம மக்கள் ஆரணி -முள்ளண்டிரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×