என் மலர்
நீங்கள் தேடியது "cctv video"
- போலீசார் கூடுதல் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் காரை இயக்கி வந்த ஓட்டுனர் பெண் மீது மோதி காரின் பெனட்டில் வெகு தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பான அதிர்ச்சியான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் காரின் பெனட்டில் தொங்கியபடி 500 மீட்டருக்கு இழுத்துச் செல்வது காணமுடிகிறது.
மேலும், அந்தப் பெண்ணைக் காப்பாற்ற பலர் காரின் பின்னால் ஓடுவதைக் காண முடிந்தது. ஆனாலும் ஓட்டுனர் காரை நிறுத்தவில்லை.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட காரின் உரிமம் தகடு உள்ளிட்ட தகவல்களை கூடுதல் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அடையாளம் தெரியாத கார் ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
- சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
- சிறுத்தை நடமாட்டம் சி.சி.டி.வி.-யில் பதிவாகி உள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பான வீடியோக்கள் சமீப காலங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. சி.சி.டி.வி.-யில் சிறுத்தை, காட்டு யானை என வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகும் சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ள கோயம்புத்தூர் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்படும். அந்த வகையில், கோம்யபுத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.
இது தொடர்பான வீடியோவில் வீட்டு தடுப்பு சுவற்றின் மீது கோழி நின்று கொண்டிருக்கும் காட்சிகளும், அந்த வழியாக வந்த சிறுத்தை ஒன்று கோழியை பிடித்து செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
#WATCH | Tamil Nadu: A leopard caught jumping and catching a hen on camera, in Coimbatore. pic.twitter.com/ZigYG6NxhJ
— ANI (@ANI) May 30, 2024
- மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், வீட்டு பணியாளர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு.
- இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியானது.
மதுபோதையில் வாலிபர் மற்றும் சிறுவனை தாக்கியதாக பாடகர் மனோ மகன்கள் மீது எழுந்த புகார் விவகாரத்தில், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியானது.
பாடகர் மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
அதில், மனோவின் மகன்களை 10 பேர் கொண்ட கும்பலும் மனோவின் மகன்களும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
கடந்த 11ம் தேதி சிறுவனை, மதுபோதையில் தாக்கியதாக மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், வீட்டு பணியாளர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்துள்ளார்.
- நடைமேடையில் விழுந்த வேகத்தில் சுமார் 150 மீட்டர் இழுத்து செல்லப்பட்டார்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில், படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்து ரெயிலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் (24) என்பவர், வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்துள்ளார்.
அப்போது, சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் வேகமாக சென்றுக்கொண்டிருந்தபோது, பாலமுருகன் தவறி விழுந்துள்ளார்.
நடைமேடையில் விழுந்த வேகத்தில் சுமார் 150 மீட்டர் இழுத்து செல்லப்பட்ட பாலமுருகன் இறுதியில் ரெயிலுக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் அதிரவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
- மாநாட்டு பணிகள் தொடர்பாக சில அறிவுரைகளையும் வழங்குவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் விஜய் கொடி ஏற்ற உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பணிகளை காணொலி காட்சி வாயிலாக விஜய் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநாட்டு திடலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் அவ்வப்போது பணிகளை விஜய் கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
தொடர் கண்காணிப்பில் உள்ள விஜய் அவ்வப்போது மாநாட்டு பணிகள் தொடர்பாக சில அறிவுரைகளையும் வழங்குவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குடிநீர், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் குறித்து நிர்வாகிகளுடன் விஜய் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
பொது மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத அளவிற்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.
மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் விஜய் கொடி ஏற்ற உள்ளார். விஜய் கொடியேற்ற உள்ள கொடி கம்பத்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநாட்டு திடலில் விஜய் கொடியேற்றும் கொடிக்கம்பத்தை 10 ஆண்டுகளுக்கு அகற்றாதபடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த விஷயத்தைப் பற்றி பேச பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார்
- சிசிடிவி காட்சிகளில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் காணலாம் .
பயிற்சி மையத்தில் தனது மகளுடன் பேசியதற்காக மாணவன் ஒருவரைப் பெண்ணின் தந்தை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தில் உள்ள பாவ்நகர் பகுதியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது.
கடந்த பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமை, பயிற்சி மையத்தில் ஒரு மாணவர் ஆபீஸ் ரூமுக்குள் ஆசிரியர் முன்னிலையில் கத்தியால் குத்தப்பட்டார். இந்த தாக்குதல் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
காயமடைந்த மாணவர் கார்த்திக் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் அந்த மையத்தில் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து வருகிறார். அதே மையத்தில் படித்து வரும் ஒரு பெண் மாணவியுடன் தொலைப்பேசியில் கார்த்திக் பேசி வந்துள்ளார்.
பெண்ணின் தந்தை ஜெகதீஷ் ராச்சாட் இதைப் பற்றி அறிந்ததும், இந்த விஷயத்தைப் பற்றி பேச பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். உரையாடலின் போது, ராச்சாத் திடீரென ஒரு கத்தியை எடுத்து கார்த்திக்கை பலமுறை சரமாரியாகக் குத்தினார்.
சம்பவ இடத்திலிருந்த ஒரு ஆசிரியர் தலையிட்டு அவரை தடுத்தார். சிசிடிவி காட்சிகளில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் காணலாம். பலத்த காயங்களுடன் கார்த்திக்கை மீட்டு பயிற்சி மைய அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பெண்ணின் தந்தை ஜெகதீஷ் ராச்சாட்டை கைது செய்தனர்.
- உடலை எடுத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.
- காவல் துறையினர் சச்சின் என்ற நபரை நேற்று கைது செய்தனர்.
அரியானா மாநிலம் ரோதக்கில் கொல்லப்பட்ட காங்கிரஸ் தொழிலாளி ஹிமானி நர்வாலின் வீட்டிற்கு வெளியே பதிவான ஒரு அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் குற்றம்சாட்டப்பட்ட சச்சின் ஒரு கருப்பு சூட்கேஸில் பெண்ணின் உடலை எடுத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.
கடந்த சனிக்கிழமை ரோதக்கில் உள்ள ஒரு பேருந்து நிலையம் அருகே சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் காவல் துறையினர் சச்சின் என்ற நபரை நேற்று கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சச்சின் நர்வாலை மொபைல் போன் சார்ஜிங் கேபிளால் அவரைக் கொன்று, உடலை சூட்கேஸில் அடைத்து வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.
சிசிடிவி வீடியோவில், குற்றம் சாட்டப்பட்டவர் அமைதியாக சூட்கேஸுடன் பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு தெரு வழியாக நடந்து செல்வதை காாண முடிகிறது. சிசிடிவி காட்சிகளை போலீசார் சரிபார்த்துள்ளனர்.
சச்சினை அந்த பெண்ணின் நண்பர் என்று போலீசார் விவரித்துள்ளனர். பணம் தொடர்பாக ஏற்பட்ட சண்டைக்கு பிறகு காங்கிரஸ் பிரமுகரான நர்வாலின் கழுத்தை சச்சின் நெரித்துள்ளார்.
அரியானாவின் ஜஜ்ஜார் பகுதியை சேர்ந்த சச்சின், பணம் தொடர்பான தகராறு காரணமாக காங்கிரஸ் பிரமுகரை கொன்றதாக அரியானா காவல் துறையினர் கூறினர். அவர் பாதிக்கப்பட்டவரின் நண்பர் என்றும், ரோதக்கில் உள்ள அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்வார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
"உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது, சிறப்பு விசாரணைக் குழுக்களை அமைத்தோம். பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது அவரை அடையாளம் காண்பதே எங்கள் முன்னுரிமையாக இருந்தது. குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டதும், குற்றம் சாட்டப்பட்டவரை கண்டுபிடிக்க போலீசார் விரைவான விசாரணைகளை மேற்கொண்டனர்."
"கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, குற்றம் சாட்டப்பட்டவர் சமூக ஊடகங்கள் மூலம் அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். மேலும் அவரது வீட்டிற்கும் சென்று வந்தார்," என்று கூடுதல் டிஜிபி கே.கே. ராவ் கூறியதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்கு பிறகு இந்த கொலை நடந்ததாக ராவ் கூறினார்.
"இருவருக்கும் இடையே பணப் பிரச்சினை இருந்தது. ஆனால் அது என்ன, இதையெல்லாம் முதலில் சரிபார்க்க வேண்டும். இதுதான் கொலைக்கான காரணம் என்று நாங்கள் கூற முடியாது," என்று அவர் மேலும் கூறினார்.