என் மலர்
நீங்கள் தேடியது "Central Railway Station"
- சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- ரெயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று பிரதமர் மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வருகைதர உள்ளார்.
- விமான நிலையத்துக்கு எதிரே உள்ள மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும்.
சென்னை
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையின் தொடக்க விழாவையொட்டி, 8-ந்தேதி (இன்று) பிரதமர் மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வருகைதர உள்ளார்.
எனவே, புறநகர் ரெயில் பயணிகள் வாகனங்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மூர் மார்க்கெட் வளாகத்துக்கு அருகில் உள்ள அல்லிகுளம் சாலை வழியாக வந்து செல்ல வேண்டும்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள், நடைமேடை எண்.4 முதல் 6 வரை உள்ள பழைய கான்கோர்ஸ் பகுதி வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மேலும், இன்று பிளாட்பாரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* பிரதமர் நரேந்திர மோடி புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கும்போது, குறிப்பிட்ட நேரத்துக்கு விமான நிலையத்துக்கு எதிரே உள்ள மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும்.
* பிரதமர் மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கிவைப்பது மற்றும் மெரினா காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டுவிழாவில் கலந்துகொள்ளும் நேரங்களில் பறக்கும் ரெயில் சேவைகள் நிறுத்தப்படும்.
- சுற்றுலா பயணிகள், தொழில் சார்ந்த வணிக பிரதிநிதிகள் நாள்தோறும் சென்னைக்கு வருகின்றனர்.
- ரெயில்வே போலீசாருடன் இணைந்து மாநகராட்சி காப்பகங்களில் ஆதரவற்றவர்களை தங்க வைக்கிறோம்.
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
சுற்றுலா பயணிகள், தொழில் சார்ந்த வணிக பிரதிநிதிகள் நாள்தோறும் சென்னைக்கு வருகின்றனர். அப்படி வரும்போது சென்ட்ரல் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுப்பவர்களின் செயல் அறுவருக்கத்தக்கதாக உள்ளது.
50-க்கும் மேற்பட்ட முதியோர்கள், பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள், ஊனமுற்றோர் உணவுக்காக பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். சிலர் பிள்ளைகளால், உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள்.
இவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்டீட் விஷன் என்ற தொண்டு நிறுவன அமைப்புடன் இணைந்து ரெயில்வே போக்குவரத்து போலீசார் பிச்சை எடுப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரெயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா, சூப்பிரண்டு பொன்ராமு ஆகியோர் முயற்சியால் 31 பேர் மீட்கப்பட்டு அவர்கள் தங்கும் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு மாற்றுதிறனாளி, 8 பெண்கள் உள்பட 31 பேர் பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஸ்டீட் விஷன் தொண்டு நிறுவனர் சீதாதேவி கூறியதாவது:-
சென்ட்ரல் ரெயில் நிலையத்தை தொடர்ந்து எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் யாசகம் கேட்கும் ஆதரவற்றவர்களை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ரெயில்வே போலீசாருடன் இணைந்து மாநகராட்சி காப்பகங்களில் ஆதரவற்றவர்களை தங்க வைக்கிறோம். அவர்களுக்கு உணவு, தங்கும் இடம் வழங்கப்படும். வேலை செய்ய விருப்பம் இருந்தால் வெளியில் போய் விட்டு திரும்பி இல்லத்திற்கு வந்து விடவேண்டும் என்றார்.
- தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சென்னையில் தெரு நாய்களை பிடித்து கொல்வது தடை செய்யப்பட்டதால் யாருமே நாய்களை பிடித்துச் செல்வதில்லை.
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். இங்கு இருந்து வடமாநிலங்கள் உள்ளிட்ட பல முக்கிய மாநகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையம் இரவு , பகல் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சப்படுகிறார்கள்.
தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். சென்னையில் தெரு நாய்களை பிடித்து கொல்வது தடை செய்யப்பட்டதால் யாருமே நாய்களை பிடித்துச் செல்வதில்லை. இதன் காரணமாக நாய்கள் பெருகி விட்டன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் பல்வேறு புகார்கள் தெரிவித்து வருகின்றனர். ரெயில் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு உடனடியாக நாய் தொல்லையில் இருந்து விடுபட ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சென்ட்ரல் நிலையத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகளை இது கவர்ந்து வருகிறது.
- ரெயில் பெட்டி அருகே நின்று ‘செல்பி’ புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னை மாநகரின் முக்கிய அடையாளமாக சென்ட்ரல் ரெயில் நிலையம் திகழ்கிறது. இங்கு பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.
சென்ட்ரலில் மெட்ரோ, மின்சார ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் அனைத்தும் உள்ளன. இங்கு வரும் பயணிகளுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட சென்ட்ரல் சதுக்கம் பயணிகளிடம் வரவேற்பு பெற்று உள்ளது. நடைபாதைகள், ஓய்வு இருக்கைகள், சுரங்க நடைபாதைகள், புல்வெளிகள் ஆகிய பல்வேறு வசதிகளை பயணிகள் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகளை கவரும் வகையில் மின்சார ரெயில் பெட்டி ஒன்று பயணிகள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது. சென்ட்ரல் விரைவு ரெயில் நிலையம் மற்றும் புறநகர் மின்சார ரெயில் நிலையங்களுக்கு இடையே திறந்த வெளியில் தண்டவாளம் அமைத்து அதன் மேல் இந்த மின்சார ரெயில் பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் நிலையத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகளை இது கவர்ந்து வருகிறது. ரெயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆர்வத்துடன் இதனை பார்த்து செல்கிறார்கள். சிலர் ரெயில் பெட்டி அருகே நின்று 'செல்பி' புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.
- தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
- மர்ம நபர் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், பூக்கடை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் இன்று மதியம் 2 மணிக்கு குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், இருப்பு பாதை போலீசார், பூக்கடை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஏப்.25-ம் தேதி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த, அதே தொலைபேசி எண்ணில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்துள்ளது.
மாநில கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- வாலிபர் நாசரின் செல்போனை திருடிவிட்டு தப்ப முயன்றார்.
- ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சென்னை:
விழுப்புரத்தை சேர்ந்த நாசர் இப்ராகிம் (46) என்பவர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நின்றார். அப்போது ஒடிசாவை சேர்ந்த பாரத் நாயக் (24) என்ற வாலிபர் நாசரின் செல்போனை திருடிவிட்டு தப்ப முயன்றார்.
அவரை சகபயணிகள் விரட்டி பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் ஒப்படைத்தனர். அப்போது பாக்கெட்டில் இருந்த பிளேடால் பாரத் கழுத்தில் கீறிக் கொண்டார். லேசான காயம் அடைந்த அவருக்கு முதலுதவி அளித்து விசாரித்தனர்.
இந்த நிலையில் கழிவறை உள்ளே சென்ற பாரத், ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டது.
- கடத்தப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் 4 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்.
சென்னை:
ஒடிசா மாநிலம், காந்தமால் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் லங்கேஷ்வர். இவரது மனைவி நந்தினி கன்ஹார். இவர்களது ஒரு வயது ஆண் குழந்தை ஆயூஸ். நேற்று இரவு லங்கேஷ்வர் குடும்பத்துடன் சொந்த ஊரில் இருந்து ரெயில் மூலம் சென்டரல் ரெயில் நிலையம் வந்தடைந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் அவர்கள் ரெயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் தாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்து விட்டு அங்கேயே தூங்கினர்.
அதிகாலை 2.45 மணியளவில் எழுந்து பார்த்தபோது மகன் ஆயூஸ் மாயமாகி இருப்பதை கண்டு லங்கேஷ்வரும், அவரது மனைவி நந்தினி கன்ஹாரும் அதிர்ச்சி அடைந்தனர். ரெயில் நிலையம் முழுவதும் தேடியும் மகனை கண்டுபிடிக்க முடியாததால் சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகள் முழுவதையும் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் குழந்தை ஆயூசை கடத்திச் செல்வது தெரியவந்தது. மேலும் அவர்கள் குழந்தையுடன் வால்டாக்ஸ் சாலையில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்வதும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து அதனை ஓட்டிச்சென்ற டிரைவரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் குழந்தையுடன் வந்த ஆணையும், பெண்ணையும் குன்றத்தூர் ஏரிக்கரை அருகே ஒரு வீட்டில் இறக்கிவிட்டதாக தெரிவித்தார்.
உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்று ஏரிக்கரை பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டில் சோதனை செய்தபோது அங்கு குழந்தை ஆயூஸ் பத்திரமாக இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து குழந்தையை போலீசார் மீட்டனர்.
மேலும் குழந்தையைக் கடத்தி வந்த தம்பதியான பரபாஸ் மண்டல், அவரது மனைவி நமிதா ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள் இங்கு தங்கி தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். குழந்தை இல்லாததால் அவர்கள் இந்தக் கடத்தலில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
முதலில் போலீசார் பரபாஸ் மண்டலிடம் விசாரித்தபோது மனைவியை சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு ரெயிலில் ஏற்றி விட வந்ததாக தெரிவித்தார். அவரிடம் சோதனை செய்தபோது ரெயிலுக்கான எந்த டிக்கெட்டும் இல்லை. நடைமேடை டிக்கெட் மட்டும் எடுத்து வந்து இருந்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பின்னர் அவர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அதிகமான வடமாநிலத்தவர்கள் வந்து செல்வார்கள் என்பதால் அங்கு குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் திட்டமிட்டு குழந்தை கடத்தலில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
குழந்தை கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் ரெயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளனர். அவர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர். மீட்கப்பட்ட குழந்தை அயூசை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தபோது அவர்கள் கண்ணீர் சிந்தி போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
கைதான தம்பதி பரபாஸ் மண்டல், அவரது மனைவி நமிதா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் குழந்தை இல்லாததால் கடத்தலில் ஈடுபட்டனரா? அல்லது இதேபோல் வேறு இடத்தில் குழந்தை கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வடமாநிலங்களில் இருந்து வரும் ஏழு ரெயில்கள் திருத்தணியில் நிறுத்தப்படும்.
- சென்ட்ரலில் இருந்து புறப்படும் சில ரெயில்கள் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை நகரை வெள்ளம் சூழ்ந்தது. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துவிட்டது. ஆனால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் பகுதிகளில் தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீர இன்னும் வடியவில்லை. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்கள் இயக்க முடியாத நிலை 4-வது நாளாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு குறித்து ரெயில் நிலையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. மைசூருவில் இருந்து நேற்று புறப்பட்ட காவிரி எக்ஸ்பிரஸ் பெரம்பூரில் நிறுத்தப்படும்.
2. மும்பையில் இருந்து சென்ட்ரலுக்கு புறப்பட்ட ரெயில் திருத்தணியில் நிறுத்தப்படும்.
3. டெல்லியில் இருந்து புறப்பட்ட ரெயில் திருத்தணியில் நிறுத்தப்படும்.
4. மொத்தம் ஏழு ரெயில்கள் திருத்தணி, சென்னை கடற்கரை நிலையத்தில் நிறுத்தப்பட உள்ளது.
5. சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை புறப்படும் வந்தே பாரத் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
6. ஷாலிமர் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலும் கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
- சென்ட்ரல் நிலையத்திற்கும்-பேசின் பாலத்திற்கும் இடையே உள்ள யார்டில் இரவு 11.30 மணி அளவில் ரெயில் என்ஜின் ஒன்று தடம் புரண்டது.
- யார்டில் தடம் புரண்ட என்ஜினை விரைவாக மீட்கும் பணி நடந்தது. அங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் காலையில் முடிந்தன.
சென்னை:
சென்னையில் ஒரே நாளில் 2 ரெயில் விபத்துகள் நடந்தன. டீசல் ஏற்ற வந்த காலி ரெயில் பெட்டியும், ரெயில் என்ஜின் ஒன்றும் தடம் புரண்டதில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் மீட்பு பணிகள் விடிய விடிய நடந்தன.
சென்னை தண்டையார் பேட்டையில் ஐ.ஓ.சி-க்கு சொந்தமான எண்ணை கிடங்குகள் உள்ளன. அங்கிருந்து சரக்கு ரெயில் மூலம் டீசல், பெட்ரோல் நிரப்பப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதிகாலை 2.30 மணி யளவில் பெட்ரோல் ஏற்ற யார்டுக்கு பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. அப்போது 2 பெட்டிகள் தடம் புரண்டன. 4 சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கின.
இதையடுத்து உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தடம் புரண்ட சரக்கு காலி பெட்டிகளால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு இல்லை. ஆனாலும் விடிய, விடிய மீட்பு பணிகள் நடந்தன. காலை 7 மணிக்கு சரி செய்யப்பட்டு யார்டுக்கு பெட்டிகள் கொண்டு செல்லப் பட்டன.
இதேபோல சென்ட்ரல் நிலையத்திற்கும்-பேசின் பாலத்திற்கும் இடையே உள்ள யார்டில் இரவு 11.30 மணி அளவில் ரெயில் என்ஜின் ஒன்று தடம் புரண்டது.
யார்டில் இருந்து என்ஜின் வெளியே வந்தபோது தண்டவாளத்தைவிட்டு இறங்கியது. இதனால் யார்டில் இருந்து ரெயில்கள் வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டது. யார்டில் தடம் புரண்ட என்ஜினை விரைவாக மீட்கும் பணி நடந்தது. அங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் காலையில் முடிந்தன.
இந்த 2 ரெயில் விபத்தாலும் அடுத்தடுத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- மெமு சிறப்பு ரெயில் இன்று திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும்.
- மின்சார ரெயில் நாளை மற்றும் 24-ந்தேதிகளில் திருவள்ளூருடன் நிறுத்தப்படும்.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரெயில் இன்று (21-ந் தேதி) வரை திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை மற்றும் 24-ந் தேதிகளிலும் இந்த மாற்றம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9.10, 11 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் மற்றும் திருத்தணிக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் 24-ந் தேதிகளில் திருவள்ளூருடன் நிறுத்தப்படும்.
மறுமாா்க்கமாக அரக்கோணத்தில் இருந்து காலை 11.15, பகல் 12 மணிக்கும், திருத்தணியில் இருந்து பகல் 12.35 மணிக்கும் புறப்பட வேண்டிய மின்சார ரெயில்கள் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு சென்ட்ரல் வந்தடையும்.
வேலூா் கன்டோன்மன்டில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சித்தேரி வரை மட்டும் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- கருவி குறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னையில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் ரெயில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நகரின் முக்கிய ரெயில் நிலையங்களான சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ரெயில்வே நிர்வாகம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியுடன் இணைந்து, சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இதய பிரச்சனைக்கு முதலுதவி சிகிச்சை செய்வதற்கான நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 4-ல் உள்ள நிலைய கண்காணிப்பு அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் இந்த கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல, சென்டிரல் ரெயில் நிலையத்தில் 7 இடங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது.
தானியங்கி வெளிப்புற டிபி பிரிலேட்டர் (ஏ.இ.டி.) என்று அழைக்கப்படும் இந்த கருவி, ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிக்கு திடீரென இதய துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அவரின் இதய துடிப்பை சரிசெய்து, அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக அளிக்கப்பட வேண்டிய முதலுதவி சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, 'இந்த கருவியை முதல்கட்டமாக சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் வைத்துள்ளோம்.
இதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதற்காக ரெயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கருவி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்' என்றார்.