என் மலர்
நீங்கள் தேடியது "Central"
மத்திய, மாநில பட்ஜெட்டுகளில் விவசாயம் மற்றும் நீர் ஆதாரத்தை சேமிக்க அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை:
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா விவசாயிகள் தின விழா பொதுக்கூட்டமாக கோவை சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு கோவை மாநகர் தெற்கு மாவட்டத்தலைவர் வி.வி.வாசன் தலைமை தாங்கி பேசினார். கோவை மாநகர் வடக்கு மாவட்டத்தலைவர் கே.என்.ஜவஹர் வரவேற்று பேசினார். கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தலைவர் அன்னூர் ராமலிங்கம், புறநகர் தெற்கு மாவட்டத்தலைவர் பி.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.
கூட்டத்தில் த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-
விவசாய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்த ஜி.கே.மூப்பனார் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் அகில இந்திய அரசியலில் அடியெடுத்து வைத்து வளர்ந்து, உயர்ந்து விளங்கியதற்கு அடிப்படையாக இருந்தது அவர் பிறந்த விவசாய மண், காவிரி மண். அந்த வகையில் தமிழ்மாநில காங்கிரஸ் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கும் கட்சி.
இனிமேல் காவிரியின் குறுக்கே தடுப்புச்சுவர் அமைத்தால் மட்டுமே பாசன கால்வாய்களில் தண்ணீரை கொண்டு செல்ல முடியும். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது கால்வாய்களின் கடைக்கோடிக்கு சென்றடையவில்லை. மேட்டூர் அணைக்கு கீழே காவிரியின் குறுக்கே தேவையான தடுப்பணைகளை கட்டியிருக்க வேண்டும். இனிமேலாவது தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் முறைப்படி காலத்தே கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கேரளாவில் மழை, வெள்ளக்காலங்களில் ஆறுகளில் இருந்து பல நூறு டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இவற்றை தமிழக பகுதிகளில் திருப்பி விடும் திட்டத்தை செயல்படுத்தி தமிழகத்திற்கு பாசன நீர், கேரளாவிற்கு மின்சாரம் என்ற அடிப்படையில் நீர் பங்கீடு செய்திட வேண்டும்.
மத்திய-மாநில பட்ஜெட்டுகளில் எதிர் காலங்களில் விவசாயத்திற்கும், நீர் ஆதாரத்தை சேமிப்பதற்கும், அதிக நிதி ஒதுக்கீடு செய்து விவசாய தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். அமராவதி அணையின் நீர் கொள்ளளவை 4 டி.எம்.சி.யில் இருந்து 9 டி.எம்.சி.யாக அதிகரிக்க வேண்டும். அவினாசி-அத்திக்கடவு பாசன திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.
விவசாயிகளின் விளை பொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. விலை குறையும் போது அதை ஈடுகட்டும் வகையில் விலை பாதுகாப்பு காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். எனவே தமிழகத்தில் இனி நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில், யாரும் வெற்றி பெற முடியாது என்ற நிலையை நாம் ஏற்படுத்துவோம். இதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுக்கூட்டத்தில், முன்னாள் எம்.பி. பி.எஸ்.ஞானதேசிகன், மாநில துணைத்தலைவர் கோவை தங்கம், குனியமுத்தூர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், ஈரோடு ஆறுமுகம், சுரேஷ் மூப்பனார், சக்திவடிவேல், யுவராஜா, மாறன், கோபால், கவுதமன், மாநில செயலாளர்கள் சேதுபதி, செல்வராஜ், தொழிற்சங்க செயலாளர் தனசேகரன், இளைஞரணி செயலாளர் நடராஜ், துணை தலைவர்கள் சிவசுப்பிரமணியம், செழியன், பொதுச்செயலாளர்கள் பத்மநாபன், அப்துல் கலாம் அசாத், பெரியசாமி, மற்றும் முருகேஷ், தங்கராஜ், திருப்பூர் மாநகர் மாவட்டத்தலைவர் எஸ். ரவிக்குமார், மாநில பொதுச்செயலாளர் மோகன் கார்த்திக், திருப்பூர் தெற்கு புறநகர் மாவட்டத் தலைவர் டி.ரத்தினவேல், நீலகிரி மாவட்டத்தலைவர் சந்திரன் மற்றும் தம்பு, இளைஞர் அணி துணை தலைவர் சி.பி.அருண்பிரகாஷ், கோவை விஷ்ணு, சரத் விக்னேஷ், பொன் ஆனந்தகுமார், சி.ஆர்.ரவிச்சந்திரன், குனிசை ரவிச்சந்திரன் ராம்நகர் சக்தி முருகானந்தம், ராஜா, ராஜேஷ், மாவட்ட பொருளாளர் வளர்மதி கணேசன், காளப்பட்டி சிகாமணி, நித்யானந்தம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மழை-வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் 30 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களும் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை ஜி.கே.வாசன் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா விவசாயிகள் தின விழா பொதுக்கூட்டமாக கோவை சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு கோவை மாநகர் தெற்கு மாவட்டத்தலைவர் வி.வி.வாசன் தலைமை தாங்கி பேசினார். கோவை மாநகர் வடக்கு மாவட்டத்தலைவர் கே.என்.ஜவஹர் வரவேற்று பேசினார். கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தலைவர் அன்னூர் ராமலிங்கம், புறநகர் தெற்கு மாவட்டத்தலைவர் பி.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.
கூட்டத்தில் த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-
விவசாய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்த ஜி.கே.மூப்பனார் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் அகில இந்திய அரசியலில் அடியெடுத்து வைத்து வளர்ந்து, உயர்ந்து விளங்கியதற்கு அடிப்படையாக இருந்தது அவர் பிறந்த விவசாய மண், காவிரி மண். அந்த வகையில் தமிழ்மாநில காங்கிரஸ் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கும் கட்சி.
இனிமேல் காவிரியின் குறுக்கே தடுப்புச்சுவர் அமைத்தால் மட்டுமே பாசன கால்வாய்களில் தண்ணீரை கொண்டு செல்ல முடியும். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது கால்வாய்களின் கடைக்கோடிக்கு சென்றடையவில்லை. மேட்டூர் அணைக்கு கீழே காவிரியின் குறுக்கே தேவையான தடுப்பணைகளை கட்டியிருக்க வேண்டும். இனிமேலாவது தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் முறைப்படி காலத்தே கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கேரளாவில் மழை, வெள்ளக்காலங்களில் ஆறுகளில் இருந்து பல நூறு டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இவற்றை தமிழக பகுதிகளில் திருப்பி விடும் திட்டத்தை செயல்படுத்தி தமிழகத்திற்கு பாசன நீர், கேரளாவிற்கு மின்சாரம் என்ற அடிப்படையில் நீர் பங்கீடு செய்திட வேண்டும்.
மத்திய-மாநில பட்ஜெட்டுகளில் எதிர் காலங்களில் விவசாயத்திற்கும், நீர் ஆதாரத்தை சேமிப்பதற்கும், அதிக நிதி ஒதுக்கீடு செய்து விவசாய தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். அமராவதி அணையின் நீர் கொள்ளளவை 4 டி.எம்.சி.யில் இருந்து 9 டி.எம்.சி.யாக அதிகரிக்க வேண்டும். அவினாசி-அத்திக்கடவு பாசன திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.
விவசாயிகளின் விளை பொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. விலை குறையும் போது அதை ஈடுகட்டும் வகையில் விலை பாதுகாப்பு காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். எனவே தமிழகத்தில் இனி நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில், யாரும் வெற்றி பெற முடியாது என்ற நிலையை நாம் ஏற்படுத்துவோம். இதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுக்கூட்டத்தில், முன்னாள் எம்.பி. பி.எஸ்.ஞானதேசிகன், மாநில துணைத்தலைவர் கோவை தங்கம், குனியமுத்தூர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், ஈரோடு ஆறுமுகம், சுரேஷ் மூப்பனார், சக்திவடிவேல், யுவராஜா, மாறன், கோபால், கவுதமன், மாநில செயலாளர்கள் சேதுபதி, செல்வராஜ், தொழிற்சங்க செயலாளர் தனசேகரன், இளைஞரணி செயலாளர் நடராஜ், துணை தலைவர்கள் சிவசுப்பிரமணியம், செழியன், பொதுச்செயலாளர்கள் பத்மநாபன், அப்துல் கலாம் அசாத், பெரியசாமி, மற்றும் முருகேஷ், தங்கராஜ், திருப்பூர் மாநகர் மாவட்டத்தலைவர் எஸ். ரவிக்குமார், மாநில பொதுச்செயலாளர் மோகன் கார்த்திக், திருப்பூர் தெற்கு புறநகர் மாவட்டத் தலைவர் டி.ரத்தினவேல், நீலகிரி மாவட்டத்தலைவர் சந்திரன் மற்றும் தம்பு, இளைஞர் அணி துணை தலைவர் சி.பி.அருண்பிரகாஷ், கோவை விஷ்ணு, சரத் விக்னேஷ், பொன் ஆனந்தகுமார், சி.ஆர்.ரவிச்சந்திரன், குனிசை ரவிச்சந்திரன் ராம்நகர் சக்தி முருகானந்தம், ராஜா, ராஜேஷ், மாவட்ட பொருளாளர் வளர்மதி கணேசன், காளப்பட்டி சிகாமணி, நித்யானந்தம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மழை-வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் 30 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களும் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை ஜி.கே.வாசன் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
பயணிகள் எளிதாக சாலையை கடப்பதற்காக சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. #ChennaiCentral #MetroRailwayStation
சென்னை:
சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு கடந்த மே 25-ந் தேதியில் இருந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்துவரும் பயணிகள் பூந்தமல்லி சாலையை எளிதாக கடப்பதற்காக சென்டிரல்-மெட்ரோ ரெயில் நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது.
இந்த சுரங்கப்பாதை நேற்று முதல் பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த சுரங்கப்பாதையில் இரண்டு பகுதிகளிலும் 2 நகரும் படிக்கட்டுகளும், 2 படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இரண்டு பகுதிகளிலும் லிப்டுகள் 3 மாதத்தில் அமைக்கப்படும்.
இதன்மூலம் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தை அடைய 2 நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வாயில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 5 நுழைவு வாயில்களும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
பாரிமுனையில் ராஜாஅண்ணாமலை மன்றத்தில் இருந்து பிராட்வே சிக்னல் செல்லும் சாலையும், ஐகோர்ட்டு முன்பு உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையும் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்து வருவதால் தற்போது மீண்டும் இருவழி பாதையாக்கப்பட்டு உள்ளது.
டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்த உடன் அண்ணா சாலையிலும் முழுமையாக இருவழிப்பாதையில் போக்குவரத்து தொடங்கப்படும்.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ரெயில் நிலையங்களில் உள்ள பூங்காக்களுக்கும், கழிப்பறைகளுக்கும் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு கடந்த மே 25-ந் தேதியில் இருந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்துவரும் பயணிகள் பூந்தமல்லி சாலையை எளிதாக கடப்பதற்காக சென்டிரல்-மெட்ரோ ரெயில் நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது.
இந்த சுரங்கப்பாதை நேற்று முதல் பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த சுரங்கப்பாதையில் இரண்டு பகுதிகளிலும் 2 நகரும் படிக்கட்டுகளும், 2 படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இரண்டு பகுதிகளிலும் லிப்டுகள் 3 மாதத்தில் அமைக்கப்படும்.
இதன்மூலம் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தை அடைய 2 நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வாயில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 5 நுழைவு வாயில்களும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
பாரிமுனையில் ராஜாஅண்ணாமலை மன்றத்தில் இருந்து பிராட்வே சிக்னல் செல்லும் சாலையும், ஐகோர்ட்டு முன்பு உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையும் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்து வருவதால் தற்போது மீண்டும் இருவழி பாதையாக்கப்பட்டு உள்ளது.
டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்த உடன் அண்ணா சாலையிலும் முழுமையாக இருவழிப்பாதையில் போக்குவரத்து தொடங்கப்படும்.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ரெயில் நிலையங்களில் உள்ள பூங்காக்களுக்கும், கழிப்பறைகளுக்கும் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பொன்னேரி:
ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பொதுமக்களுடன் அவர் சாதாரணமாக அமர்ந்து பயணம் செய்தார். அப்போது அந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டார்.
மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் சைலேந்திரபாபு இறங்கினார். அவருடன் ரெயில்வே அதிகாரிகளும் வந்து இருந்தனர்.
அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் குறைகள் பற்றி கேட்டு அறிந்தார். சைலேந்திரபாபுவிடம் பொதுமக்கள் கூறும்போது, “மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகம் நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும், ரெயில்வே போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்” என்றனர்.
இதையடுத்து சைலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு ஏற்படும் குறைகள் குறித்து கேட்டு வருகிறோம். அந்தந்த துறைக்கு குறைகள் பற்றி தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்.
மீஞ்சூரில் ரெயில்வே காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகள் தொல்லையை தடுக்க அவர்களது அமைப்பில் தெரிவித்து மாற்று தொழில் செய்ய அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து சைலேந்திரபாபுவும், அதிகாரிகளும் மீஞ்சூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் மீண்டும் பயணம் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திலும் அவர்கள் பயணிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். #Tamilnews
ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பொதுமக்களுடன் அவர் சாதாரணமாக அமர்ந்து பயணம் செய்தார். அப்போது அந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டார்.
மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் சைலேந்திரபாபு இறங்கினார். அவருடன் ரெயில்வே அதிகாரிகளும் வந்து இருந்தனர்.
அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் குறைகள் பற்றி கேட்டு அறிந்தார். சைலேந்திரபாபுவிடம் பொதுமக்கள் கூறும்போது, “மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகம் நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும், ரெயில்வே போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்” என்றனர்.
இதையடுத்து சைலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு ஏற்படும் குறைகள் குறித்து கேட்டு வருகிறோம். அந்தந்த துறைக்கு குறைகள் பற்றி தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்.
மீஞ்சூரில் ரெயில்வே காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகள் தொல்லையை தடுக்க அவர்களது அமைப்பில் தெரிவித்து மாற்று தொழில் செய்ய அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து சைலேந்திரபாபுவும், அதிகாரிகளும் மீஞ்சூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் மீண்டும் பயணம் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திலும் அவர்கள் பயணிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். #Tamilnews
சென்னை சென்ட்ரல் - நேருபூங்கா, சின்னமலை - டிஎம்ஸ் ஆகிய புதிய வழித்தடங்களில் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. #ChennaiMetro
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மெட்ரோ ரெயில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையம் - சின்னமலை மற்றும் பரங்கிமலை - நேருபூங்கா ஆகிய வழித்தடங்களில் தற்போது ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேருபூங்கா - சென்டிரல், சின்னமலை - டிஎம்ஸ் ஆகிய வழித்தடங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய வழித்தடத்தில் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரெயில் சேவை தொடங்க உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் ரெயில் சேவையை தொடங்கி வைக்கின்றனர்.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதும், சிறந்த டாக்டர்களை உருவாக்குவதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் யோகேஷ் உள்ளிட்ட 16 டாக்டர்கள் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அகில இந்திய ஒதுக்கீட்டில் வெளிமாநிலங்களில் எங்களுக்கு இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த எங்களது பெயர் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியலில் இடம் பெறாததால், தமிழகத்தில் உள்ள சிறந்த மருத்துவ கல்லூரியை தேர்வு செய்ய முடியவில்லை.
எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், மாநில ஒதுக்கீட்டின் கீழ் எங்களை சேர்க்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, ‘சம்பந்தப்பட்ட மாணவர்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்ற போதும் ஏதாவது ஒரு கலந்தாய்வில் மட்டுமே அவர்கள் பங்கேற்க முடியும். அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றுவிட்டு, மாநில அரசின் ஒதுக்கீடு வேண்டும் என்று அவர்கள் உரிமை கோர முடியாது’ என்று கூறியது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர்கள் அனைவரும் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுகளின்படி, இந்த கலந்தாய்வுகள் நடக்கின்றன. மனுதாரர்கள் ஏற்கனவே அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்கள் என்ற காரணத்தால், இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறேன். இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் பட்டமேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் இளம் டாக்டர்கள் அவர்கள் விரும்பும் பாடங்களையும், கல்லூரிகளையும் தேர்வு செய்ய வாய்ப்பளிக்காவிட்டால் அவர்களால் நாட்டுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியாது.
எனவே நாடு முழுவதும் புதிய மருத்துவ கல்லூரிகளை, டாக்டர்கள் விரும்பும் துறைகளுடன் தொடங்க வேண்டும். மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க சிறந்த டாக்டர்களை உருவாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் யோகேஷ் உள்ளிட்ட 16 டாக்டர்கள் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அகில இந்திய ஒதுக்கீட்டில் வெளிமாநிலங்களில் எங்களுக்கு இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த எங்களது பெயர் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியலில் இடம் பெறாததால், தமிழகத்தில் உள்ள சிறந்த மருத்துவ கல்லூரியை தேர்வு செய்ய முடியவில்லை.
எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், மாநில ஒதுக்கீட்டின் கீழ் எங்களை சேர்க்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, ‘சம்பந்தப்பட்ட மாணவர்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்ற போதும் ஏதாவது ஒரு கலந்தாய்வில் மட்டுமே அவர்கள் பங்கேற்க முடியும். அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றுவிட்டு, மாநில அரசின் ஒதுக்கீடு வேண்டும் என்று அவர்கள் உரிமை கோர முடியாது’ என்று கூறியது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர்கள் அனைவரும் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுகளின்படி, இந்த கலந்தாய்வுகள் நடக்கின்றன. மனுதாரர்கள் ஏற்கனவே அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்கள் என்ற காரணத்தால், இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறேன். இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் பட்டமேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் இளம் டாக்டர்கள் அவர்கள் விரும்பும் பாடங்களையும், கல்லூரிகளையும் தேர்வு செய்ய வாய்ப்பளிக்காவிட்டால் அவர்களால் நாட்டுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியாது.
எனவே நாடு முழுவதும் புதிய மருத்துவ கல்லூரிகளை, டாக்டர்கள் விரும்பும் துறைகளுடன் தொடங்க வேண்டும். மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க சிறந்த டாக்டர்களை உருவாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்டிரல் ரெயில் நிலையம் வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடக்க விழாவை வருகிற 25-ந்தேதி நடத்துவதற்கான தீவிர ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை:
சென்னையில் நடந்துவரும் மெட்ரோ ரெயில் பணிகளை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் ஆய்வு செய்தார். சின்னமலை-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே பாதுகாப்பு ஆணையர் மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை செய்தார். கடந்த 20-ந்தேதி ஆய்வுப்பணியை முடித்து கொண்டு பாதுகாப்பு ஆணையர் பெங்களூரு திரும்பினார்.
பாதுகாப்பு ஆணையர் பயணிகள் ரெயிலை முறைப்படி இயக்குவதற்கான ஆய்வு அறிக்கையை ஓரிரு நாட்களில் சமர்ப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடக்க விழா வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். எழும்பூரில் விழா ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
சென்னையில் நடந்துவரும் மெட்ரோ ரெயில் பணிகளை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் ஆய்வு செய்தார். சின்னமலை-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே பாதுகாப்பு ஆணையர் மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை செய்தார். கடந்த 20-ந்தேதி ஆய்வுப்பணியை முடித்து கொண்டு பாதுகாப்பு ஆணையர் பெங்களூரு திரும்பினார்.
பாதுகாப்பு ஆணையர் பயணிகள் ரெயிலை முறைப்படி இயக்குவதற்கான ஆய்வு அறிக்கையை ஓரிரு நாட்களில் சமர்ப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடக்க விழா வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். எழும்பூரில் விழா ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. #BanSterlite #TalkAboutSterlite
புதுடெல்லி:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ராமசுப்பு என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. மேலும், மக்களுக்கும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்துவதால் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் ஆலை இயங்க அனுமதி அளித்துள்ளது.
எனவே இந்த வழக்கை முழுமையாக ஆராயாமல் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து, ஆலையை நிரந்தரமாக மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், இந்த மனுவின் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #BanSterlite #TalkAboutSterlite
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ராமசுப்பு என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. மேலும், மக்களுக்கும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்துவதால் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் ஆலை இயங்க அனுமதி அளித்துள்ளது.
எனவே இந்த வழக்கை முழுமையாக ஆராயாமல் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து, ஆலையை நிரந்தரமாக மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், இந்த மனுவின் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #BanSterlite #TalkAboutSterlite