search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandipura Virus"

    • சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இந்தியாவில் 245 பேருக்கு அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் அதாவது மூளையழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 82 பேர் உயிரிழந்தனர்.

    தற்போது நாடு முழுக்க 43 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் 64 பேருக்கு சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    "சண்டிபுரா வைரஸ் தொற்று இந்தியாவில் அழிந்து போகும் தருவாயில் உள்ளது. எனினும், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது," என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    குஜராத்தில் ஒவ்வொரு நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சண்டிபுரா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. கொசுக்கள், பூச்சி வகைகளால் சண்டிபுரா வைரஸ் பரவுகிறது. இந்த நோய் பாதிப்புக்கு குறிப்பிட்ட சிகிச்சை முறை மற்றும் தடுப்பு மருந்து என எதுவும் இல்லை.

    பாதிப்பு ஏற்பட்டதும் அதனை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ அதற்கு ஏற்ப நோய் பாதிப்பை குணப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, 15 வயதிற்கும் கீழ் உள்ள சிறுவர்களை கண்காணிப்பது அவசியம் ஆகும்.

    • ஈக்கள், உண்ணிகள், கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்கள் அல்லது வீட்டு விலங்குகளுக்கு பரவுகிறது.
    • சண்டிபுரா வைரசுக்கு தடுப்பு சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லை.

    சமீப காலமாக புதிய புதிய நோய்கள் ஏற்படுகின்றன. அதில், இப்போது பரபரப்பை ஏற்படுத்துவது சண்டிபுரா வைரஸ்.

    1965-களில் மகாராஷ்டிரத்தில் சண்டிபுரா நகரில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ் கிருமிக்கு, அந்த நகரின் பெயரே சூட்டப்பட்டது.

    2004-ம் ஆண்டில் மராட்டியம், குஜராத் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இந்த வைரஸ் கிருமியின் தாக்கம் காணப்பட்டது. கிட்டத்தட்ட 300 குழந்தைகள் வரை இந்த கிருமியின் பாதிப்பால் இறந்திருக்கலாம் என்று அப்போது தகவல்கள் தெரிவித்தன. இத்தனை ஆண்டுகள் கழித்து 2024-ல் இந்த வைரஸ் கிருமி மீண்டும் தலைதூக்கி உள்ளது.

    குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் சமீபத்தில் 6 குழந்தைகள் சண்டிபுரா வைரசால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சண்டிபுரா வைரஸ் கிருமி என்பது விலங்குகளில் இருந்து மனிதர்களை தொற்றும் வகையை சேர்ந்தது.

    இந்த வைரஸ் கிருமி என்பது ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ் ஆகும். இது மணல் ஈக்கள் மற்றும் கொசுக்களால் பரவுகிறது. இதில் டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசுவும் அடங்கும்.

     

    இந்த பூச்சிகளின் உமிழ்நீர் சுரப்பிகளில் வைரஸ் காணப்படுகிறது. இந்த ஈக்கள், உண்ணிகள், கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்கள் அல்லது வீட்டு விலங்குகளுக்கு பரவுகிறது.

    சண்டிபுரா வைரஸ் நோய் தொற்றின் அறிகுறிகள் லேசான சுவாசக் கோளாறு முதல் கடுமையான சிக்கல்கள் வரை இருக்கும். காய்ச்சல், தலைவலி, சோர்வு, உடல் மற்றும் தசை வலி, வாந்தி, வலிப்பு, நோய் தொற்று தீவிரமடையும்போது இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற சுவாச அறிகுறிகள் காணப்படும். சில கடுமையான சந்தர்ப்பங்களில், மூளை அழற்சியும் ஏற்படும்.

    சண்டிபுரா வைரசுக்கு தடுப்பு சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லை. ஆரம்பகால நோயறிதல் மற்றும் சுவாச பாதைகளை நிர்வகித்தல், திரவ சமநிலை மற்றும் 2-ம் நிலை பாக்டீரியா தொற்றுகளை தடுப்பது, மணல் ஈக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை கண்டறிந்து தடுத்தல் போன்றவைதான் தடுப்புமுறைகளாக உள்ளன.

    • சிறுமியின் மாதிரி பரிசோதனை செய்ததில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
    • ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த நோயாளியும் சண்டிபுரா வைரசால் உயிரிழந்துள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரசால் 4 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு அம்மாநிலத்தில் ஏற்பட்ட முதல் மரணம் என்று சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியது.

    மாநிலத்தில் 14 நோயாளிகள் தொற்றுநோயால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் 29 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் மற்றும் கடுமையான மூளையழற்சி (மூளையின் அழற்சி) அறிகுறிகளை கொண்டுள்ளது.

    சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிமத்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 4 வயது சிறுமி வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இவர் ஆரவல்லி மாவட்டம் மோட்டா கந்தாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். சிறுமியின் மாதிரி பரிசோதனை செய்ததில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது மாநிலத்தில் சண்டிபுரா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட முதல் மரணம் என்று சபர்கந்தா தலைமை மாவட்ட சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த நோயாளியும் சண்டிபுரா வைரசால் உயிரிழந்துள்ளார்.

    இதுதவிர ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த மற்றொரு நோயாளியும், மத்தியப் பிரதேசத்தின் தாரைச் சேர்ந்த ஒருவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×