என் மலர்
நீங்கள் தேடியது "chattisgarh"
- பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே அவ்வப்போது என்கவுன்டர் நடைபெறுகிறது.
- இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
6இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது அவ்வப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.
சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள கேர்லாபால் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
- பீஜப்பூரில் நடந்த என்கவுண்டரில் 18 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுடெல்லி:
சத்தீஸ்கர் மாவட்டத்தின் பீஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் கங்கலூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு காட்டில் பாதுகாப்புப் படையின் கூட்டுப்படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 18 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், கான்கர் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுண்டரில் 4 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று நமது வீரர்கள் மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். சத்தீஸ்கரின் பீஜப்பூர் மற்றும் கான்கரில் நமது பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மோடி அரசாங்கம் நக்சலைட்டுகளுக்கு எதிராக இரக்கமற்ற அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது. மேலும் சரணடையாத நக்சலைட்டுகளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாடு நக்சலைட்டுகளிலிருந்து விடுபடும் என பதிவிட்டுள்ளார்.
- சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 18 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
- இந்த சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ராய்ப்பூர்:
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது அவ்வப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் பீஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் கங்கலூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு காட்டில் பாதுகாப்புப் படையின் கூட்டுப்படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதில் 18 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த சண்டையின்போது மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி) வீரர் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.
- மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அடங்கிய குழுவானது மாநிலத்தின் துபேடா பகுதியில் இருந்து நாராயணன்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அபுஜ்மத் பகுதியில் உள்ள கொட்லியார் கிராமத்திற்கு அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருள் திடீரென வெடித்துச்சிதறியது.
இதில், இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.
- சத்தீஷ்காரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அடங்கிய குழுவானது மாநிலத்தின் துபேடா பகுதியில் இருந்து நாராயணன்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அபுஜ்மத் பகுதியில் உள்ள கொட்லியார் கிராமத்திற்கு அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருள் திடீரென வெடித்துச்சிதறியது.
இதில், இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இந்நிலையில், வீரர்கள் இரண்டு பேரின் உடல்களை அமைச்சர் டேங் ராம் வெர்மா தோளில் சுமந்தபடி சென்று இறுதி மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சத்தீஷ்காரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளே இல்லாத நிலையை உருவாக்குவதற்கான பணியை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுக்மா மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து ஏ.கே. 47 போன்ற துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டரில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ஏ.கே. 47 போன்ற துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஆண்டில் சுக்மா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 207 நக்சலைட்களின் உடல்கள் மீட்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மந்திரி அருண் சாவோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுக்மாவில் பாதுகாப்பு படையினர் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளனர். பாதுகாப்புப் படைவீரர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நாங்கள் அரசாங்கத்தை அமைத்த பிறகு, கடுமையான நிலப்பரப்புகளிலும் பாதுகாப்புப் படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மாவோயிஸ்ட்கள் இல்லாத பகுதியாக பஸ்தார் வெகு விரைவில் மாறி விடும். அங்கு அமைதி மீட்டெடுக்கப்பட்டு வளர்ச்சிப் பாதைக்கு வரும் என தெரிவித்தார்.
- வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்தாராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அங்கு தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மாநிலத்தில் ஏற்பட்ட தனித்தனி மோதல்களில் 83 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
- சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
- அங்கு மொத்தம் உள்ள 10 மேயர் தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 10 மேயர் தொகுதிகளையும் கைப்பற்றி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. இதைத்
தொடர்ந்து, கடந்த 11-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின.
இங்கு மொத்தமுள்ள 49 நகராட்சி கவுன்சில் தலைவர் பதவிகளில் 35 இடங்களில் பா.ஜ.க.வும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வென்றது. 114 நகர பஞ்சாயத்துகளில் பா.ஜ.க. 81 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும் வென்றது. நகராட்சி வார்டுக்கு நடந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது.
இதற்கிடையே, சத்தீஸ்கரின் பரஸ்வாரா கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர். இதில் தேர்வான 6 பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றது குறித்து விசாரணை நடத்துப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
- பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் 4.8 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் அம்பிகாபூருக்கு மேற்கே 65 கிமீ தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் அதிகாலை 5.28 மணியளவில் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் நில அதிர்வை உணர்ந்து பீதியில் வீட்டைவிட்டு வெளியேறினர். இருப்பினும் லேசான நில அதிர்வு என்பதால் யாருக்கும் பாதிப்போ அல்லது பொருட்சேதமோ இல்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இன்றிரவு சுமார் 8 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 90 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 88 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3, சமாஜ்வாதி வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும், கோண்ட்வானா கந்த்தந்த்ரா கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ.க. வேட்பாளர் 21 தொகுதியிலும், காங்கிரஸ் 23 தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 24 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 1 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 1 தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
61 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 75 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் 2 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிய பழங்குடியின கட்சி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி ஒரு இடத்திலும், ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 57 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் தனி மெஜாரிட்டியுடனும் ஆட்சி அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை காங்கிரஸ் தலைமை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் அடுத்த முதல்வராக யாரை நியமனம் செய்வது? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்றிரவு சுமார் 8 மணியளவில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மேற்கண்ட 3 மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்த அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்ளுக்கான வெற்றி. இந்த வெற்றி காங்கிரசுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பாகும். இதை நாங்கள் நிறைவேற்றுவோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
’சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் ஒன்றானவை, பா.ஜ.க.வின் சித்தாந்தத்தில் இருந்து மாறுபட்டவை.
காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களுக்கான புதிய முதல் மந்திரிகளை தேர்வு செய்வது பெரிய காரியமல்ல. அது சுமுகமாக முடிந்துவிடும். எங்களை வெற்றிபெற வைத்த மாநில மக்களுக்கான தொலைநோக்கு திட்டத்தை வகுத்து, அவர்கள் பெருமைப்படும் வகையில் அவற்றை காங்கிரஸ் அரசு நிறைவேற்றும்.

பா.ஜ.க.வுக்கு என்றொரு சித்தாந்தம் உள்ளது. அதை எதிர்த்து போராடி நாங்கள் வெற்றி பெறுவோம். இன்று அவர்களை நாம் தோற்கடித்து இருக்கிறோம். 2019-பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம். ஆனால், யாரையும் நாங்கள் அழிக்க விரும்பவில்லை’ எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #victoryoffarmers #Congressworkers #RahulGandhi #2018Electionresults
