என் மலர்
நீங்கள் தேடியது "Chengalpattu rain"
- ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்கிறார்கள்.
- போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சென்னை:
பராமரிப்புகள் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் 28 மின்சார ரெயில்கள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகாலையில் இருந்து சேவை ரத்து செய்யப்பட்டாலும் அதனை ஈடு செய்வதற்காக புதிய கால அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது.
காலை மற்றும் மாலை பீக் அவர்சில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இயக்கப்பட்டுகின்றன.
சென்னை மாநகரத்தோடு புறநகர் பகுதியை இணைக்கும் பாலமாக விளங்கும் மின்சார ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்கிறார்கள்.
அரசு, தனியார் அலுவகங்களில் பணிபுரிவோர் நீண்ட தூரத்தில் இருந்து வருவதற்கு மின்சார ரெயில் சேவை மிகவும் பயன் உள்ளதாக இருப்பதால் பராமரிப்பு பணிக்காக ரத்துசெய்யும் போது சிரமங்கள் ஏற்படுகின்றன.
இன்று தொடங்கி உள்ள பராமரிப்பு பணிகள் நாள் குறிப்பிடாமல் நடைபெறுவதால் கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு அதன்படி ரெயில்கள் இயக்கப்பட்டன.
பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகயில் 200-க்கும் மேற்பட்ட ரெயில் சேவை இந்த மார்க்கத்தில் இயக்கப்படுவதாகவும் குறிப்பாக நெரிசல் மிகுந்த வேளையில் சேவை குறைக்கப்படாமல் இயக்கப்படுகிறது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனாலும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 10 பஸ்களும், பாரிமுனைக்கும் பஸ்களும் இயக்கப்பட்டன.
ஏற்கனவே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு போதுமான பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகளின் தேவை அறிந்து பஸ்கள் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்சார ரெயில் ரத்தால் தாம்பரம், எழும்பூர், பூங்காநகர், கோட்டை ரெயில் நிலையங்களில் சிறிது கூட்டம் காணப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கடற்கரை ரெயில் நிலையத்தில் 5 ரெயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை இயக்கப்படும் என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தது.
மெட்ரோ ரெயிலை பொறுத்தவரையில் பீக் அவர்சில் அதிகபட்க அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இன்னும் தேவைப்பட்டால் இயக்கவும் தயாராக இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 90 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அதேபோல் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. கன மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
காஞ்சீபுரம் - 47
ஸ்ரீபெரும்புதூர் - 49.90
செய்யூர் - 22.30
திருக்கழுக்குன்றம் - 64.20
மகாபலிபுரம் - 49.20
திருப்போரூர் - 31.07
வாலாஜாபாத் - 14.50
திருவள்ளூர் மாவட்டதில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடியவிடிய பெய்து வரும் கன மழையால் சாலை முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருவள்ளூர் நகரில் எம்ஜிஆர் சிலை, ஜெயா நகர் செல்லும் சாலை, பஜார் வீதி உட்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது.கிராமப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழையினால் பொது மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
கும்மிடிப்பூண்டி 57 அம்பத்தூர் - 51
பூந்தமல்லி - 43
திருவள்ளூர் - 41
ஆர்.கே.பேட்டை - 15
மணலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு சொந்தமான 4 மாடுகள் நேற்று இரவு 11 மணிக்கு அதே தெருவில் சென்றது. அப்போது உயர் அழுத்த மின்வயர் திடீரென்று அறுந்து மாடுகள் மீது விழுந்தது. இதில் 4 மாடுகளும் பலியாகின.