search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chess game"

    • ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும்.
    • பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றன.

    செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மிக குறுகிய காலத்தில் தமிழக அரசு சார்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது. சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 197 அணிகளும் 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றன.

    மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 11 சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.

    இந்நிலையில் செஸ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தொடக்க ஆட்டத்தில் மொராக்கோவை எதிர்கொண்டது. இதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது. இந்திய பெண்கள் அணி முதல் ஆட்டத்தில் 3.5-0.5 என்ற கணக்கில் ஜமைக்காவை தோற்கடித்தது.

    • 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது.
    • இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும்.

    புடாபெஸ்ட்

    செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மிக குறுகிய காலத்தில் தமிழக அரசு சார்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது. சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 197 அணிகளும் 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றன.

    மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 11 சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.

    'ஸ்விஸ்' முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு சுற்றில் அணியில் 4 பேர், எதிரணியினருடன் மோதுவார்கள்.

    கடந்த முறை இந்திய அணி இரு பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்திய அணியில் டி.ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மாற்று வீராங்கனையாக தானியா சச்தேவ் இருக்கிறார்.

    ஆண்கள் பிரிவில் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, குகேஷ் மற்றும் விதித் குஜராத்தி, அர்ஜூன் எரிகாசி, ஹரிகிருஷ்ணா ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள். போட்டித்தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இவர்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.

    உலகின் 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்சென் தனிப்பட்ட முறையில் எல்லா பட்டங்களையும் வென்று விட்டார். ஆனால் அணியாக செஸ் ஒலிம்பியாட் எட்டாக்கனியாக இருக்கிறது. அந்த ஏக்கத்தை தணிக்க இந்த முறை அவர் கடுமையாக முயற்சிப்பார்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் பேச்சு
    • ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை :

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28.7. 2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ள 44 வது உலக செஸ் போட்டி நடைபெறுகிறது.

    இதையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் தோறும் சதுரங்க செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றிய முகுந்தராயபுரம் மற்றும் வாணாபாடி ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தலைமை தாங்கி மகளிர் குழுக்களுடன் இணைந்து மாணவ மாணவர்களுடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-

    சதுரங்கப் போட்டி என்பது இந்தியாவில் தோன்றியது. மன்னர் ஆட்சி காலத்தில் தோன்றி சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்னரே இப்போட்டி மன்னர்களிடையே நடைபெற்று வந்தது. அரசர்கள் எவ்வாறு போர் புரிய வேண்டும் எவ்வாறு தற்காத்துக் கொள்வது குறித்து மனதிற்கும் உடலுக்கும் ஊக்கத்தை கொடுக்கக்கூடிய போட்டியாக நடைபெற்றுள்ளது. பின்னர் மற்ற உலக நாடுகளுக்கும் பரவி அனைத்து நாடுகளிலும் இப்போட்டி நடைபெற்று வருகிறது. எவ்வாறு திட்டமிடுதல், எவ்வாறு தற்காத்துக் கொள்ளுதல், வெற்றியை தடைகளை தாண்டி எப்படி பெறுவது குறித்து மனதிற்கும் மூளைக்கும் ஆராய்ந்து செயல்படக்கூடிய ஒரு விளையாட்டு போட்டியாக சதுரங்க விளையாட்டு விளங்குகிறது.இதை மாணவர்களுக்கும் பொதுமக்களும் என அனைவரும் விளையாடும் வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்ற சிந்தனை பாங்கு உயர்வடையும் மூளையின் நரம்புகள் சுறுசுறுப்பு அடைய செய்யும், மனவலிமை அறிவாற்றல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விளையாட்டு இருக்கின்றது. இப்போட்டியில் அனைவரும் பங்கு பெற்று தன்னுடைய அறிவாற்றலை பெருக்கும் வகையில் தமிழக அரசு அனைத்துக் பள்ளிகளிலும் சதுரங்க போட்டிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மாணவ மாணவிகள் இதை பயன்படுத்தி நன்கு சதுரங்க விளையாட்டை விளையாட வேண்டும்.

    செஸ் போட்டியானது நமது தமிழகத்தில் நடைபெற உள்ளது. அதனை மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு அடையும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், ஊராட்சி உதவி இயக்குனர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன், உதவி திட்ட அலுவலர்கள் ஷாகூல் ஷமீத், சுபாஷ் சந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், ஊராட்சிமன்ற தலைவர்கள் முருகன், ஈஸ்வரி, மகளிர் சுய உதவி குழு பெண்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×