என் மலர்
நீங்கள் தேடியது "Chiranjeevi"
- சிரஞ்சீவி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘வால்டேர் வீரய்யா’.
- இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

வால்டேர் வீரய்யா போஸ்டர்
இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் டைட்டில் பாடல் நேற்று வெளியானது. இந்நிலையில், இந்த பாடல் வெளியான ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
వీరయ్య వేట మొదలైంది 😎💣🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) December 27, 2022
3M+ views for #VeerayyaTitleSong from #WaltairVeerayya 💥
- https://t.co/z0Rq3rk87G
Mega⭐ @KChiruTweets @RaviTeja_offl @dirbobby @shrutihaasan @CatherineTresa1 @ThisIsDSP @anuragkulkarni_ @boselyricist @konavenkat99 @SonyMusicSouth pic.twitter.com/fwBsEiUIdW
- நடிகர் சிரஞ்சீவி தற்போது 'வால்டேர் வீரய்யா' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இந்த திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் 'வால்டேர் வீரய்யா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

சிரஞ்சீவி
ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "கஷ்டப்பட்டுத்தான் நடிக்க வேண்டும். ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் அந்த படத்துக்கு 100 சதவீதம் நியாயம் செய்ய வேண்டும். கஷ்டத்தை பார்த்து வருந்தக்கூடாது.

சிரஞ்சீவி
கொடுத்த காட்சியில் நடித்தே ஆக வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே சினிமாவில் இருக்க அருகதை உண்டு. நடிப்பில் புகழ், பெயர் சும்மா வராது. கஷ்டப்பட வேண்டும். கதாபாத்திரங்களுக்காக நடிகர்கள் பசியோடு இருக்க வேண்டும். நடிப்பு பசி செத்து விட்டால் சினிமாவை விட்டே போய் விடவேண்டும். நான் கஷ்டமான காட்சிகளிலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் மாடுபோல் உழைப்பேன். திரையில் என்னை பார்க்கும் ரசிகர்கள் கைதட்டலில் கஷ்டப்பட்டது மறைந்துவிடும்'' என்று கூறினார்.
- இயக்குனர் பாபி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'.
- இப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

வால்டேர் வீரய்யா
இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டைட்டில் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வால்டேர் வீரய்யா
இந்நிலையில், 'வால்டேர் வீரய்யா' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பூனக்காலு'பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிரஞ்சீவியின் 154-வது படமாக உருவாகி வரும் படம் 'வால்டேர் வீரய்யா'.
- இந்த படத்தின் 'பாஸ் பார்ட்டி' மற்றும் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

வால்டேர் வீரய்யா
இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பாஸ் பார்ட்டி' மற்றும் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வால்டேர் வீரய்யா
இந்நிலையில் இப்பட்த்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு, விரைவில் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிரஞ்சீவியின் 154-வது படமாக உருவாகி வரும் படம் 'வால்டேர் வீரய்யா'.
- இப்படத்தின் 'பாஸ் பார்ட்டி' மற்றும் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

வால்டர் வீரய்யா
இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் 'பாஸ் பார்ட்டி' மற்றும் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வால்டேர் வீரய்யா
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் நாளை (07.01.2022) வெளியாகும் என்றும் கிராண்ட் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் (Grand Pre Release Event) 08.01.2022 அன்று நடைபெறும் என்றும் போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'.
- இப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கியிருந்தார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர்.

வால்டேர் வீரய்யா போஸ்டர்
இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்தார். இப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'வால்டேர் வீரய்யா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
In front there is Mega Force festival! Waltair Veerayya is coming to Netflix on 27th Feb and we can't keep calm??? pic.twitter.com/MD0FDSREtB
— Netflix India South (@Netflix_INSouth) February 7, 2023
- இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.
- இப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
புதுடெல்லி:
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆா்ஆா்ஆா் திரைப்படம், கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இதற்கிடையே, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது.
இந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. எம்.எம்.கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை ராகுல் மற்றும் கால பைரவா பாடினர்.
ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்ற நிலையில் நாட்டு நாட்டு பாடல் தற்போது ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலில் நடனமாடிய ஆர்.ஆர்.ஆர். திரைப்பட நடிகர் ராம் சரணை உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சந்தித்து, வாழ்த்தினார். இந்தச் சந்திப்பின்போது ராம் சரணுடன் அவரது தந்தை சிரஞ்சீவி உடன் இருந்தார்.
- இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
- இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்றது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்.)
இதையடுத்து, இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ராம் சரண் -அமித்ஷா- சிரஞ்சீவி
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆஸ்கர் விருது வென்ற 'நாட்டு நாட்டு' பாடலில் நடனமாடிய நடிகர் ராம் சரணை நேரில் சந்தித்து, வாழ்த்தினார். இந்தச் சந்திப்பின்போது நடிகர் சிரஞ்சீவியும் உடனிருந்தார். மேலும், அமித்ஷா தனது சமூக வலைதளத்தில் 'இந்திய சினிமாவின் ஜாம்பவான்களை சந்தித்ததில் மகிழ்ச்சி' என பதிவிட்டுள்ளார்.
Delighted meeting @KChiruTweets and @AlwaysRamCharan - two legends of Indian Cinema.
— Amit Shah (@AmitShah) March 17, 2023
The Telugu film industry has significantly influenced India's culture & economy.
Have congratulated Ram Charan on the Oscar win for the Naatu-Naatu song and the phenomenal success of the 'RRR'. pic.twitter.com/8uyu1vkY9H
- இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தசரா’.
- ‘தசரா’ திரைப்படம் இதுவரை ரூ.110 கோடி வசூல் செய்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சிரஞ்சீவி பதிவு
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் ரூ.110 கோடியை வசூல் செய்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், 'தசரா' திரைப்படம் பார்த்த நடிகர் சிரஞ்சீவி படக்குழுவை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தசரா திரைப்படம் பார்த்தேன். என்ன ஒரு அருமையான படம். இது இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் முதல் படம் என்பதை அறிந்து வியந்தேன். எங்களது 'மகாநடி' கீர்த்தி சுரேஷின் நடிப்பு சிறப்பு. சந்தோஷ் நாராயணன் இசையில் அசத்திவிட்டார். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Kudos to the entire team of 'DASARA'?@NameisNani @odela_srikanth @KeerthyOfficial @Dheekshiths@Music_Santosh pic.twitter.com/CciJqkcwrv
— Chiranjeevi Konidela (@KChiruTweets) April 13, 2023
- வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி ஜோடிக்கு நேற்று ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் சசிகுமாருடன் 'பிரம்மன்', சந்தீப் கிஷனுடன் 'மாயவன்' படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜும் லாவண்யா திரிபாதியும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

வருண் தேஜ் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாகபாபுவின் மகன். வருணும் லாவண்யாவும் மிஸ்டர், அந்தரிஷம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக பேசப்பட்டது. ஆனால் இதை லாவண்யா திரிபாதி மறுத்திருந்தார்.

இதையடுத்து, இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர். நிச்சயதார்த்தம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே இத்தகவல் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிரஞ்சீவி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி உங்கள் நிச்சயதார்த்தத்திற்கு வாழ்த்துகள். நீங்கள் சிறந்த ஜோடியாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் அன்பும் மகிழ்ச்சியும் பொழியும்" என்று தெரிவித்துள்ளார்.
Hearty Congratulations and Blessings to @IAmVarunTej & @Itslavanya on your engagement! You will make a wonderful couple!!
— Chiranjeevi Konidela (@KChiruTweets) June 10, 2023
May you both be showered by all the love and happiness and have a blissful life ahead! ?? ? pic.twitter.com/4pYjD69hue
- ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது.
- இவர்களுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். ராம் சரண் கடந்த 2012-ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்த நிலையில், ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஹைதரபாத் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ராம் சரண்-உபாசனா
இந்நிலையில், நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான ரோஜா, ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தாத்தாவானதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் சிரஞ்சீவி காரு. இதயத்தில் என்றும் இளமையாகவும் எப்போதும் ஆற்றல் மிக்க இந்த குடும்பத்தில் ஒரு அழகான மெகா இளவரசி ஆசீர்வதிக்கப்படுவது எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதம்.
அன்புள்ள ராம்சரண் நீ குழந்தையாக இருந்த போது உன்னை என் கைகளில் கட்டியணைத்த அந்த மறக்கமுடியாத நாட்களை நினைவு கூர்கிறேன், இப்போது உனக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள் என்ற மகிழ்ச்சியான செய்தியை கேட்பது இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது. சிரஞ்சீவி காரு தாத்தா பட்டம் பெற்றாலும் நீங்கள் எவர்கிரீன் ஹீரோ தான். உபாசனா மற்றும் குட்டி மகாலட்சுமிக்கு என்னுடைய ஆசிர்வாதங்கள்" என்று மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
- ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.
- திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடினர்.
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். ராம் சரண் கடந்த 2012-ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்ததையடுத்து ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களை வாழ்த்து மழையில் நனைத்தனர்.

இந்நிலையில், ராம் சரண்-உபாசனா தம்பதியின் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டு விழா நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர். அதன்படி, குழந்தைக்கு 'க்ளின் காரா கொனிடேலா' என பெயர் வைத்துள்ளனர்.

இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் சிரஞ்சீவி இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.