என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "co - operative"

    • பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
    • பொங்கல் பரிசு தொகுப்பு பெற ‘ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என்று எந்தவித உத்தரவும் இதுவரை நமக்கு வரவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலமாக 1,129 ரேஷன் கடைகள், மகளிர் குழுக்கள் மூலமாக 14 ரேஷன் கடைகள், நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் 22 ரேஷன் கடைகள் என மொத்தம் 1,129 ரேஷன் கடைகள் உள்ளன. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

    பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது என்றும், இதற்காக ரேஷன் கார்டுதாரர்களின் ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு வங்கி கணக்கு இணைக்கப்பட உள்ளதாகவும் திருப்பூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் குறுஞ்செய்தி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    இவ்வாறு வங்கிக்கணக்கு இணைக்காமல் உள்ள கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளுக்கு சென்று கார்டில் உள்ள யாராவது ஒருவரின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை கொண்டு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறுஞ்செய்தியில் வேகமாக தகவல் பரவியது. அதுவும் வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, பொங்கல் பரிசு தொகுப்பு பெற 'ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என்று எந்தவித உத்தரவும் இதுவரை நமக்கு வரவில்லை. அது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்–றார். 

    • உறுப்பினர்களுக்கு மட்டும் பொறுப்பாக்கப்பட்ட அமைப்பாகும்.
    • கூட்டுறவு சங்கம், பதிவு எண் டி.எண். 20-0001095 என்ற பெயரில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியி–ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் என்பது முற்றிலும் தன்னாட்சி அதிகாரம் பெற்று, அதன் உறுப்பினர்களுக்கு மட்டும் பொறுப்பாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த வகை சங்கங்கள் மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின், மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் நிர்வாக கட்டுப்பாட்டிலோ அல்லது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் நிர்வாக கட்டுப்பாட்டிலோ செயல்படுவது அல்ல.

    எனவே பொதுமக்களும், முதலீடுதாரர்களும் மேற்படி சங்கங்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு வைப்புத்தொகையை முதலீடு செய்வது தொட–ர்பான முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் நிதி இழப்பிற்கு கூட்டுறவு அமைச்சகத்தின் மத்திய பதிவாளரோ அல்லது மாநில பதிவாளரோ இந்த வைப்பீடுகளுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. எனவே இவற்றில் முதலீடு செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிய நிரந்தர பணியாளர்கள் தேவை என http:www.olx.in என்ற வலைதள முகவரியில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிய நிரந்தர பணியாளர்கள் தேவை என்றும், மாத சம்பளமாக ரூ.13 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுவதாகவும், சேலம், பவானி, பெருந்துறை, அவினாசி, திருப்பூர், நாமக்கல் ஆகிய இடங்களில் பணியிடங்கள் உள்ளதாகவும், வயது 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும் எனவும், தொடர்புக்கு 82203-03402, 95970-49997 ஆகிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாவட்ட நெசவாளர்கள் மற்றும் டெக்ஸ்டைல் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், பதிவு எண் டி.எண். 20-0001095 என்ற பெயரில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்த போது, இப்படி ஒரு சங்கம் கூட்டுறவுத்துறையின் கீழோ அல்லது கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கீழோ பதிவு செய்யப்படவில்லை என தெரியவருகிறது. 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம், 1988-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் திருத்தப்பட்ட விதிகளின்படி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள, கூட்டுறவு சங்கங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் முறையான அறிவிப்பு வழங்கப்பட்டு, முறையான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    மேலும், தற்போது வாட்ஸ் அப், இணையதளம், குறுஞ்செய்தி மற்றும் இதர மின்னணு ஊடகங்கள் மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணி வழங்கப்படுவதாகவும், இதற்கு முன்பணம் செலுத்தி பயிற்சி பெற்றால் நிரந்த பணி வழங்கப்படும என போலியான விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் மட்டுமே பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டு உரிய முறையில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு, பணி வழங்கப்பட்டு வருகிறது. எனவே வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில், சமூக வலைதளத்தில் வெளியிடப்படும் போலி விளம்பரங்களை யாரும் நம்பி ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய ஊட்டி கிளையின் ஆண்டு விழா நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
    • ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஊட்டி:

    ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய ஊட்டி கிளையின் ஆண்டு விழா நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.வாஞ்சிநாதன் தலைமை வகித்தாா். ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை மற்றும் சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.

    இந்நிகழ்ச்சியில் ராமலிங்கா கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் ஸ்ரீதா், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் சரவணன், நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் முத்து சிதம்பரம், குன்னூா் நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் குமார சுந்தரம், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநா் தமிழ்ச்செல்வன் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

    கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கக்கோரி ஊட்டியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஊட்டி:

    தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் எட்வின் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் ஹால்துரை, மாவட்ட பொருளாளர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து மாவட்ட துணைத்தலைவர் எட்வின் கூறியதாவது:-

    தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் நடத்தி வரும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற விகிதத்தில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம், மொத்த விற்பனை பண்டக சாலைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், தாலுகா கூட்டுறவு விற்பனை சங்கம், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் பிற கூட்டுறவு சங்கங்களால் நியாய விலைக்கடைகள் நடத்தப்படுகின்றன. பொது வினியோக திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வந்து அரசின் கீழ் செயல்படுத்த வேண்டும்.

    தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் இருந்து கூட்டுறவு நியாய விலைக்கடைகளுக்கு எடை குறைவின்றி பொருட்களை வழங்க வேண்டும். வினியோகத்தின் போது ஏற்படும் சிந்துதல், சிதறுதல்களுக்கு சேதார கழிவு 3 சதவீதம் வழங்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெய், சிறப்பு பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் எடை குறையாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2012-2013-ம் ஆண்டு முதல் 2017-2018-ம் ஆண்டு வரை கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானிய தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்துவதுடன், பணியாளர்களின் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடைகளில் எடையாளர் நியமிக்க வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
    ×