என் மலர்
நீங்கள் தேடியது "Coffee Shop"
- சட்ட விரோதமாக இதுபோன்ற ஹூக்கா பார்களை நடத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- காபி கடை என்ற பெயரில் ஹூக்கா பார் போதை மையத்தை நடத்தியவர் சிக்கியுள்ளார்.
சென்னை:
சென்னையில் போதை தரும் பொருட்களை கொண்டு ஹூக்கா பார் நடத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
சட்ட விரோதமாக நடத்தப்படும் இதுபோன்ற ஹூக்கா பார்களை நடத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வெளியில் தெரியாமல் ரகசியமாக நடத்தப்படும் ஹூக்கா பார்களுக்கு மத்தியில் 'காபி கடை' என்ற பெயரில் ஹூக்கா பார் போதை மையத்தை நடத்தியவர் சிக்கியுள்ளார்.
சென்னை ஆழ்வார் பேட்டை பகுதியில் 'காபி ரெஸ்டாரண்ட்' என்கிற பெயரில் காபி கடை ஒன்று நடத்தப்பட்டு வந்தது. இந்த காபி கடையில் ஹூக்கா பார் நடத்தப்பட்டு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது காபி ரெஸ்டாரண்டை முகேஷ் என்பவர் நடத்தி வந்தது தெரியவந்தது. இவர் சட்டவிரோதமாக காபி ரெஸ்டாரண்டில் ஹூக்கா பார் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஹூக்கா பாரில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு ஹூக்கா போதைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், குழாய் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மாநகர் முழுவதும் இதுபோன்று ஹூக்கா பார் நடத்துவோரை கைது செய்ய கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
- என்ன இது யா யா, இந்த யா யா எல்லாம் எனக்கு அலர்ஜி என்று கோபமாக பேசியுள்ளார்
- பொது நல மனுவில் ரஞ்சன் கோகாய் பெயரை குறிப்பிட்டது தலைமை நீதிபதியையே எதிர்ப்பதாகிறது
உச்சநீதிமன்றம் ஒன்றும் காபி ஷாப் இல்லை என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வக்கீலுக்கு பாடம் எடுத்த சம்பவம் நிகழ்ச்த்துள்ளது. இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் வக்கீல் ஒருவருடன் சட்டப்பிரிவு 32 இந்த கீழ் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றின் மீது சந்திரசூட் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
2018 தேதியுடைய அந்த மனுவில் அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை அந்த வக்கீல் குறிப்பிட்டுள்ளார். அதாவது, 2018 இல் இந்த வக்கீல் வாதாடிய அந்த பொதுநல வழக்கை அப்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாய் தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் அந்த மனுவில் எந்த தவறும் இல்லை என்பதால் அதை தள்ளுபடி செய்திருக்கக்கூடாது என்று தற்போது மீண்டும் அந்த வக்கீல் உச்சநீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனுவை சமர்ப்பித்துள்ளார். எனவே அதில் ரஞ்சன் கோகாய் பெயரை வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பொது நல மனுவில் ரஞ்சன் கோகாய் பெயரை குறிப்பிட்டது தலைமை நீதிபதியையே எதிர்ப்பதாகிறது என்று சந்திரசூட் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துப் பேசிய வக்கீல், சாதாரணமாகப் பேசுவதுபோல், 'யா [Yeah] யா [Yeah], அப்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாய்... மறுபரிசீலனை மனு..' என்று இழுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்திரசூட், உடனே அந்த வக்கீலை இடைமறித்து, 'இது ஒன்றும் காபி ஷாப் கிடையாது, என்ன இது யா யா, இந்த யா யா எல்லாம் எனக்கு அலர்ஜி, இதற்கு இங்கு அனுமதி கிடையாது' என்று கோபமாகக் கடிந்துகொண்டார். இதனால் நீதிமன்ற அவையே சற்று நேரம் சற்று நேரம் அமைதியில் மூழ்கியது.