என் மலர்
நீங்கள் தேடியது "Cogress"
- ரீஸ்டார்ட் அல்லது பேட்டரியை சார்ஜ் செய்வது அல்லது பேட்டரியை மாற்றினாலும் கூட வேலை செய்யவில்லை
- மொபைல் பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா முன்னதாக 118-வது இடத்தில் இருந்தது. தற்போது 43-வது இடம்
2004 மற்றும் 2009-ல் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அடுத்தடுத்து வெற்றி பெற்று மன்மோகன் சிங் பிரதமரானார்.
2014-ல் தேர்தலில் பா.ஜனதா மோடியை முன்னிறுத்தி "குஜராத் மாடல்" முழக்கத்துடன் மக்களை சந்தித்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து 2019 தேர்தலில் தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை பிடித்தது. அடுத்த வருடம் நடைபெற இருக்கும் தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் "2014" வெறும் தேதி மட்டுமல்ல. அது மாற்றம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-
"2014" வெறும் தேதியல்ல. இது மாற்றம். காங்கிரஸ் கட்சி காலாவதியான போனாக (செல்போன்) இருந்தது. எத்தனை முறை ஸ்வைப் செய்தாலும் அல்லது பட்டனை அழுத்தினாலும், செயல்படாத உடைந்த ஸ்கிரீனை கொண்ட கலாவதியான போன் போன்று காங்கிரஸ் ஆட்சி இருந்தது.
ரீஸ்டார்ட் அல்லது பேட்டரியை சார்ஜ் செய்வது அல்லது பேட்டரியை மாற்றினாலும் கூட வேலை செய்யவில்லை. 2014-ல் மக்கள் காலாவதியான போன் போன்ற அரசாங்கத்தை புறந்தள்ளி, நாட்டை ஆள்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு அளித்தனர்.
5ஜி நெட்வொர்க் அறிமுகப்படுத்திய பிறகு, 6ஜி-யில் இந்தியா தன்னை முன்னோடியாக நிலை நிறுத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா தயாரிக்கும் போன்களை உலகம் பயன்படுத்தி வருகிறது.
மொபைல் பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா முன்னதாக 118-வது இடத்தில் இருந்தது. தற்போது 43-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் நான்கு லட்சம் 5ஜி பேஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை, இரண்டு மக்களவை இடங்கள் ஒதுக்கீடு.
- மற்ற இரு கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்துள்ளது.
கேரளாவில் பிரனராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் இடையில் போட்டி நிலவுகிறது.
கேரளாவில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிடும் என அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் தலைவருமான வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மூன்று இடங்கள் கேட்ட நிலையில், இரண்டு இடங்கள் அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மலப்புரம், பொன்னாணி ஆகிய இடங்களில் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா காங்கிரஸ் (ஜே) கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி கோட்டயம் தொகுதியில் போட்டியிடும் எனவும், கொல்லம் தொகுதியில ஆர்எஸ்பி போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள் என சதீசன் தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அடுத்த முறை காலியாகும் மாநிலங்களவை எம்.பி. தொகுதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட்டார். தற்போது வயநாட்டில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி.ராஜாவின் மனைவி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராகுல் காந்தி அந்த தொகுதியில் நிற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.