என் மலர்
நீங்கள் தேடியது "coimbatore airport"
- சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 6 பயணிகளை பிடித்து அவர்களது உடமைகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.
- 2 பயணிகள் உள்ளாடைகள், பாக்கெட்கள், பேன்ட் ஆகியவற்றில் 5.6 கிலோ தங்க நகைகளை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
கோவை:
கோவை விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்காணித்து தங்கத்தை கடத்தி வரும் பயணிகளை மடக்கி பிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 6 பயணிகளை பிடித்து அவர்களது உடமைகளை தீவிர சோதனை செய்தனர். அதில் 2 பயணிகள் உள்ளாடைகள், பாக்கெட்கள், பேன்ட் ஆகியவற்றில் 5.6 கிலோ தங்க நகைகளை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரூ.2.94 கோடி மதிப்பிலான 5.6 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது அப்சல் (வயது 32) மற்றும் திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் (66) என்பது தெரியவந்தது.
இதில் முகமது அப்சல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்கத்தை கடத்தி வந்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த கிருஷ்ணனை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
மேலும் தங்கம் கடத்தலில் வேறு ஏதாவது தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர்.
- கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பன்னாட்டு போக்குவரத்து பிரிவில் முறையே 119.97 டன், 150.19 டன் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
- 2 மாதங்களில் மட்டும் 25.18 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சரக்குகள் புக்கிங் செய்யப்பட்டு பார்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
கோவையில் இருந்து முன்பு ஷார்ஜா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய 3 வெளிநாடுகளுக்கு விமான சேவை இருந்தது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, இலங்கைக்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2 நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் போதும், பிணைக்கப்பட்ட டிரக் சேவை மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் சரக்குகள் பதிவு செய்யப்பட்டு, பன்னாட்டு ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கொரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து விமான நிலையம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில் சரக்கு போக்குவரத்து நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பன்னாட்டு போக்குவரத்து பிரிவில் முறையே 119.97 டன், 150.19 டன் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த 2 மாதங்களில் மட்டும் 25.18 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் ஜூன், ஜூலை மாதங்களில், 688.40 டன், 833.28 டன் சரக்கு பதிவு செய்யப்பட்டு 21.05 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
கொரோனா தொற்று மிக வேகமாக பரவிய காலகட்டத்திலும் கோவை விமான நிலையத்தில், சரக்கு போக்குவரத்து பிரிவு தொடர்ந்து செயல்பட்டு வந்தது. குறிப்பாக உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசி மற்றும் நோய் தொற்று பரவல் தடுப்புக்கு உதவும் முகக் கவசம், பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட பல உபகரணங்கள் தொடர்ந்து கையாளப்பட்டன.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விமானத்தின் அனைத்து செயல்பாடுகளும் இயல்பு நிலையில் இருப்பதாக பைலட் தெரிவித்தார்.
- விமானத்தை தொடர்ந்து இயக்கலாம் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர்.
கோவை:
பெங்களூருவில் இருந்து மாலி நாட்டுக்கு 92 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் விமானத்தில் இருந்து திடீரென அலாரம் ஒலித்தது. விமானத்தில் இருந்து புகை வந்ததற்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்ததையடுத்து, விமானம் கோயம்புத்தூர் விமான நிலையம் நோக்கி திருப்பி விடப்பட்டது.
கோயம்புத்தூர் விமான நிலையத்தை அடைந்ததும் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்ததும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது விமானத்தின் அனைத்து செயல்பாடுகளும் இயல்பு நிலையில் இருப்பதாக பைலட் தெரிவித்தார்.
எனினும், பொறியாளர்கள் விமானத்தை ஆய்வு செய்தனர். அப்போது, விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எச்சரிக்கை அலாரம் பழுதடைந்ததால் அலாரம் ஒலித்ததும் தெரியவந்தது. அத்துடன் விமானத்தை தொடர்ந்து இயக்கலாம் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
- புதிதாக நிறுவப்பட்டு உள்ள இந்த ரோபோக்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடான ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
தினசரி 20-க்கு மேற்பட்ட விமானங்களில் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவ தனி உதவி மையம் உள்ளது. அந்த உதவி மையத்தை செல்போன் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களை பயணிகள் பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் தானியங்கி ரோபோக்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அதிநவீன ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது. இதன் மூலம் பயணிகளுக்கு தேவையான தகவல்களை எவ்வித உதவியும் இன்றி தானாக வழங்க முடியும்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இன்று மாலை 3 மணி முதல் ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ரோபோக்கள் யாருடைய உதவியும் இல்லாமல் தானாக நகரும் தன்மை கொண்டது.
ரோபோ விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்று, அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும். இதற்காக அந்த ரோபோக்களில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டு உள்ளது. பயணிகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ள விரும்பினால், ரோபோ உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை அளிக்கும்.
இந்த ரோபோக்கள் பயணிகள் விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் உள்ளிட்ட இடங்களுக்கான வழிகளை பயணிகளுக்கு தெரிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக நிறுவப்பட்டு உள்ள இந்த ரோபோக்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது-
மத்திய அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக பொருளாதார இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது. ரூ. 8 லட்சம் வருமானம் என்பது மாத வருமானம் ரூ. 70 ஆயிரம் என நிர்ணயம் செய்து பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகும்.
இதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. 37 எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து விட்டு இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரிக்கும். தமிழகத்தில் ஜாதி ஒழிய வேண்டும் என பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற பல தலைவர்கள் போராடினார்கள்.
ஜாதி வேற்றுமை நீங்க வேண்டும். மனிதன், மனிதனாக வாழ வேண்டும் என திராவிட கட்சிகள் தொடர்ந்து போராடி வருகிறது. நாம் அனைவரும் சூத்திரர்கள் தான்.
சமத்துவத்தை கொண்டு வர பல போராட்டங்கள் நடத்தி இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளனர். பொருளாதாரம் என்பது தொடர்ந்து மாறுபடும். அதை நிர்ணயித்து இட ஒதுக்கீடு செய்தது தவறு.
மத்திய அரசும், மாநில அரசும் தொடர்ந்து சுமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் சில திட்டங்களை ஆதரித்துள்ளோம்.
தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களை அமல்படுத்தினால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

ரபேல் விமானத்தை வாங்க முடிவு செய்தது காங்கிரஸ். அதனை வாங்கியது பாரதிய ஜனதா. ஊழலில் இரு கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #TNGovt #ThambiDurai #BJP #Centalgovt
தூத்துக்குடியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயதுரை. இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
நேற்று கோவை வந்த இவர் இரவு 9 மணி அளவில் சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்தார்.அவர் கையில் ஒரு சூட்கேஸ் வைத்திருந்தார்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சூட்கேசை சோதனை செய்தனர். அப்போது சூட்கேசில் இருந்து சத்தம் கேட்டது.சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் 5 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார் ஜெயதுரையிடம் விசாரித்தனர்.
கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்காக லைசென்சு தன்னிடம் இருப்பதாக கூறிய அவர் தவறுதலாக தோட்டாக்களை சூட்கேசில் எடுத்து வந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கி லைசென்சுக்கான ஜெராக்சை காட்டினார். ஒரிஜனல் லைசென்சை இன்று கொண்டு வந்து காட்டுவதாக கூறினார். அவரிடம் போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினர். #DMK
கோவை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மேல் முறையீடு செய்ய உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர். ஆகவே அவர்கள் சட்ட ரீதியாக எப்படி அணுகுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
யார் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும், அது விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றச்சாட்டு வந்ததினால் பதவி விலக வேண்டும் என்று சிலர் சொல்வது தவறு.
தி.மு.க. போன்ற கட்சிகள் மத்திய அரசுடன் இணைந்து ஆட்சியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டு வந்தது. அப்போது அவர்கள் பதவி விலகினார்களா? இல்லை.
எனவே ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. அது நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும். சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். துணை வேந்தர்கள் நியமனத்தில் எழுந்துள்ள ஊழல்கள் குறித்து கவர்னர் மறுக்கவில்லை. அவர் பல கல்வியாளர்களை சந்திக்கும் போது தான் எனக்கு இப்படிப்பட்ட தகவல்கள் கிடைத்தது என்று தான் கூறினார்.
ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை சம்பந்தமாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சேலத்தில் இன்று நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றார். #BJP #Tamilisaisoundararajan
கோவை விமான நிலையத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக முதல்- அமைச்சர் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளதை வரவேற்கிறோம்.
நெடுஞ்சாலை துறையில் கடந்த 7 ஆண்டுகாலமாக ஊழல் நடைபெற்று உள்ளது என்று முன்னாள் கவர்னர் ரோசைய்யா மற்றும் தற்போதைய கவர்னர்பன்வாரிலால் புரோகித் ஆகியோரிடம் நான் நேரில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள ஊழல் பிரிவு விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே தான் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்து உள்ளார்கள்.
இந்த சூழலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தானாக பதவி விலக வேண்டும் அல்லது கவர்னர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
பதவியில் உள்ள ஒரு முதல்-அமைச்சரை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம்.

ரபேல் போர் விமானம் சம்பந்தமாக மத்திய அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். முந்தைய ஆட்சியில் ஒரு விமானம் ரூ. 550 கோடி. இந்த ஆட்சியில் ரூ. 1,600 கோடிக்கு பேசி உள்ளார்கள்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போதிய ஊதியம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு தேவையான ஊதியம் வழங்குங்கள்.
தனியார் போக்குவரத்து கழகம் லாபத்தில் இயங்கி கொண்டு இருக்கிறது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் உள்ளது. இதற்கு காரணம் ஊழல்.
ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலையில் 2 மாதம் ஆகியும் ஏன் கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் ஊழல் நடப்பது பா.ஜனதா அரசுக்கு தெரியாதா? ஏன் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஊழலை ஆதரிப்பது தானே அர்த்தம்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கார் மூலமாக சேலத்துக்கு புறப்பட்டு சென்றார். #PMK #AnbumaniRamadoss #EdappadiPalaniswami #Banwarilalpurohit
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் ஹரிஹரன், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எம்.பி., கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், கோட்ட பொறியாளர் ஜி.கே. செல்வகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்சில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்றார். மாலை 5 மணிக்கு அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபைக்கு செல்கிறார்.
அங்கு கோவை வர்த்தக சபையின் 90-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார். இரவு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
நாளை (புதன்கிழமை) பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி வைர விழாவில் பங்கேற்கிறார். இதற்காக காலை 9 மணிக்கு கோவை விமான நிலையம் செல்லும் வெங்கையாநாயுடு, அங்கிருந்து விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பொள்ளாச்சி செல்கிறார்.
பொள்ளாச்சி கல்லூரியில் பாதுகாப்பு குறித்து சென்னை பாதுகாப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. வீரபெருமாள் ஆய்வு செய்தார்.
கோவையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே ஹெலிகாப்டர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு காரில் செல்வதற்காக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர். இதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டது.
பொள்ளாச்சியில் விழா முடிந்ததும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஹெலிகாப்டரில் திண்டுக்கல் செல்கிறார்.
துணை ஜனாதிபதி வருகையையொட்டி கோவை விமான நிலையம், தொழில் வர்த்தக சபைக்கு செல்லும் பாதைகள், சுற்றுலா மாளிகை மற்றும் பொள் ளாச்சி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஐ.ஜி. பெரியய்யா உத்தரவின்பேரில் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் பொள்ளாச்சியில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகரில் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்பேரில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #VenkaiahNaidu
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசினார். மேலும் கல்லூரி மாணவர்கள், தொழில்துறையினருடன் கலந்துரையாடினார்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கேள்வி : தமிழகத்தில் தற்போது மின்தடை அதிகமாக உள்ளதே?

ப : பதவி கொடுக்கவில்லை என்றால் யார்- யாரை காட்டிக் கொடுப்பார் என்ற பயத்தால் தான் அமைச்சருக்கு இந்த பதவி வழங்கப்பட்டு இருக்கலாம்
கே : இலங்கையில் இறுதிப் போரின் போது இந்திய அரசு உதவி செய்ததாக ராஜபக்சே கூறி இருக்கிறாரே?
ப : அதுபற்றி எனக்கு தெரியாது.
கே : 7 பேர் விடுதலையில் கவர்னர் காலதாமதம் செய்வதாக தகவல் வருகிறதே?
ப : தமிழக கவர்னர் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவில்லை என தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் துரைமுருகன் ஈரோட்டில் நடைபெறும் ம.தி.மு.க. மாநாட்டில் கலந்து கொள்ள சென்றார். #DMK #DuraiMurugan #TNMinister #Vijayabaskar
சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஒரு விமானம் வந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு சூட்கேசில் இருந்த சிறிய ரக லேத் எந்திரத்திற்குள் தங்க கட்டிகள் இருப்பதாக ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர்.
அதனை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (டி.ஆர்.ஐ)‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது, உதிரிபாகத்துக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 3 கிலோ 675 கிராம் எடையுள்ள தங்கம் கட்டிகளை சிறிய பிஸ்கட்டுகளாக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 15 லட்சம் ஆகும்.
இதனை கடத்தி வந்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அமல்ராஜ் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு அமல்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார்.