என் மலர்
நீங்கள் தேடியது "Collector Akash"
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 11-ன் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரம் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது
- நவம்பர் 1-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சியும் நடைபெற உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், கிராம சபை ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23-ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 11-ன் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரம்,கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணைய வரி, வீட்டு வரி-சொத்து வரி செலுத்துதல்,
மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்குதல், 2021-22 மற்றும் 2022 -23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களில் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவின் அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்த அறிக்கை,மக்கள் நிலை ஆய்வு பட்டியல், விடுபட்ட புதிய இலக்கு, மக்கள் குடும்பங்களை சேர்த்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சியும் நடைபெற உள்ளது.
கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கண்காட்சியிலும் அனைத்து பொது மக்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
- 3 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
- அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டா மாறுதல் மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடை பெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கலந்துகொண்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் தென்காசி வட்டம் சிவசைலம் கிராமத்தில் இயங்கி வரும் காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் பயின்று வரும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் 3 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
மேலும் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது ) முத்து மாதவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தலையனை பகுதி மக்கள் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித் தர கோரிக்கை வைத்தனர்.
- 49 குடும்பம் வசிக்கும் தலையனை பகுதியில் 15 வீடுகள் மட்டும் உள்ளன.
சிவகிரி:
வாசுதேவநல்லூரில் பழங்குடியினர் பெருமை தின விழாவினை முன்னிட்டு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், பழங்குடியினரை பெருமைப்படுத்தும் விதமாக பழங்குடியினர் பெருமை தின விழா பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:-
தலையனை பகுதி மக்கள் புளியங்குடியில் இருந்து வாசுதேவநல்லூர் வழியாக தலையனை வரை பஸ் வசதியும், வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித் தரவும் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் பஸ் இயக்கப்படும் எனவும், 49 குடும்பம் வசிக்கும் தலையனை பகுதியில் 15 வீடுகள் மட்டும் உள்ளன. கூடிய விரைவில் நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசுதேவநல்லூரில் நடைபெற்ற பழங்குடியினர் பெருமை தின விழா பேரணியில், சிவகிரி தலை யணை, கடையநல்லூர் கலைமான்நகர் பளியர் ஆகிய இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர்.
இப்பேரணியானது, வாசுதேவநல்லூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி பழைய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், தென்காசி தனி தாசில்தார் (ஆதிந) முருகசெல்வி, சங்கரன்கோவில் தனி தாசில்தார் (ஆதிந) பரிமளா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி காப்பாளர்கள், அலுவ லர்கள், பழங்குடியின மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் பாண்டியன், தலையனை பள்ளியின் முன்னாள் தலை மை ஆசிரியரும் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜ்மோகன், கிராம நிர்வாக அலுவலர்கள் வாசு தேவநல்லூர் பாலகணேஷ், திருமலாபுரம் முருகானந்தம், நாரணபுரம் 2 கனகவள்ளி, வருவாய் ஆய்வாளர் வள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
- மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணியாற்றுவபராக இருத்தல் வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது பெறுவோ ருக்கு 8 கிராம் (22காரட்) எடையுள்ள தங்கப் பதக்கமும், ரூ.1 லட்சத் திற்கான காசோலை மற்றும் சான்றிதழ், சால்வை வழங்கப்படும். 2023-ம் ஆண்டு அவ்வையார் விருதுக்கான கருத்து ருக்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தின் (https://awards.tn.gov.in) வழியாக வருகிற டிசம்பர் 10-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் அனுப்ப வேண்டும்.
அவ்வையார் விருதுக்கான கருத்து ருக்களை அனுப்புபவர்கள், தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்ட வராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணி யாற்றுவபராக இருத்தல் வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ, இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித் தொகைக்கு 2022-23-ம் கல்வியாண்டில் (Fresh Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்கத்தையோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in welfschemes.htm scholarship schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருக்கிறது.
- 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருக்கிறது.
இம்முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடுவோர் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் .
தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்ற வர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்க ப்படாது என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
- காசி மேஜர்புரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தினையும் கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு ,கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
- அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருந்து கிடங்கினை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, தென்காசி ஊராட்சி ஒன்றியம், காசி மேஜர்புரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மூலம் ஊரணியில் அமைக்கப்பட்ட சிறு குளம் , படித்துறை மற்றும் தடுப்பு சுவர் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மேலும், ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.
அப்போது பொது சுகா தார துணை இயக்குநர் முரளிசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இயன்முறை சிகிச்சை கருவிகளோடு இருப்பிடத்திற்கே சென்று மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனத்தை தொடங்கி வைத்தார்.
- மாற்றுத்திறனாளி நலத்துறையின் வாயிலாக மறுவாழ்வு திட்டங்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்கான வாகனத்தை வழங்கி இருந்தார்.
தென்காசி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தின் மூலம் இயன்முறை சிகிச்சை கருவிகளோடு இருப்பிடத்திற்கே சென்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனத்தை தொடங்கி வைத்தார்.
அதன்படி தசை பயிற்சி அளித்தல், செயல் திறன் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, உதவி உபகரணங்களுக்கான மதிப்பீடு,விளையாட்டு முறையில் சிகிச்சை அளித்தல் மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறையின் வாயிலாக மறுவாழ்வு திட்டங்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்கான வாகனத்தை வழங்கி இருந்தார்.
அந்த வகையில் தென்காசி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் கலெக்டர் ஆகாஷ் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளி களுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தை கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
- கலெக்டர் ஆகாஷ், தாசில்தார் தெய்வ சுந்தரி ஆகியோர் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்தனர்.இந்த நிலையில் சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை தருவதாக பழனி நாடார் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டரிடம் உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் தென்காசி கலெக்டர் ஆகாஷ், பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் வீ.கே.புதூர் தாசில்தார் தெய்வ சுந்தரி ஆகியோர் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அதேபோல் சுரண்டையில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது மண்டல நிலைய வட்டார அலுவலர் முருகன்,வருவாய் அலுவலர் கண்ணன்,கிராம நிர்வாக அலுவலர் ராஜ லட்சுமி,நில அளவையர் பஷீர் அகமது, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- 25 பயனாளிகளுக்கு ரூ.16.42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
- கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மனுக்கள் உள்பட மொத்தம் 433 மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஆகாஷ் பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில், தென்காசி மாவட்ட வருவாய் துறையின் சார்பாக, இந்திய படைப்பிரிவில் பணிபுரிந்து பணியிடை காலமானவர்கள் மற்றும் கொடுங்காயமுற்றோர்கள் ஆகியோரின் வாரிசுதாரர்க ளுக்கு கருணை அடிப்படை யில் 6 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மேலும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் தலா ரூ.8,500 மதிப்பிலும் என மொத்தம் ரூ.4 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களையும், மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் திருநங்கை களுக்கான சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் 12 திருநங்கையர்களுக்கு ரு.12 லட்சம் மதிப்பில் சிறுதொழில் கடன் உதவி தொகைக்கான ஆணை என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.16.42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 433 மனுக்கள் பெறப்பட்டது.
இந்தக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணு வர்தன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், அலுவலக மேலாளர் (பொது) ஹரிஹரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- முகாமில் ரூ. 87 ஆயிரத்து 515 மதிப்பில் நலத்திட்டங்களை கலெக்டர் ஆகாஷ் பயனாளிகளுக்கு வழங்கினார்.
- 50 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் கூறினார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் ஆகாஷ் பங்கேற்றார்.
அதில் இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை உள்பட ரூ. 87 ஆயிரத்து 515 மதிப்பில் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகிறது. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியக்கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே தொழில் முனைவோர் அனைவரும் தொழில் தொடங்குவதற்கு தேவையான கடனுதவிகளை பெற்று பயனடையலாம். மேலும், நமது மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 பள்ளிகளை தேர்வு செய்து கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு நேரில் வர இயலாதவர்கள் 1800 599 3599 மற்றும் வாட்ஸ் அப் எண் 7190079008 ஆகியவற்றில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்
முகாமில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திவ்யா மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அமுதா தேன்ராஜ் (கடங்கனேரி), மாலதி (தெற்கு காவலாக்குறிச்சி), தனித்துணை கலெக்டர் ஷீலா, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தமிழ்மலர், ஆலங்குளம் தாசில்தார் ரவீந்திரன், மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினர்.
- 862 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.50.54 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.
தென்காசி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் உதவி கடன் உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் இ.சி.ஈஸ்வரன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடனுதவிகளை பயனாளி களுக்கு வழங்கினர்.
தென்காசி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக, 541 ஊரக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிகடன் இணைப்பு தொகை ரூ.38.02 கோடி மதிப்பிலும், 125 நகர்புறம் மகளிர் சுய உதவிக்குழுக்கான தொகை ரூ.11.03 கோடி மதிப்பிலும், 163 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சமுதாய முதலீட்டு நிதி மூலம் ரூ.1.07 கோடி மதிப்பிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 13 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இணை மானியம் தொகை ரூ.29 லட்சம் மதிப்பிலும், 8 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய திறன் பள்ளிகள் அமைப்பதற்கான நிதி ரூ.5 லட்சம் மதிப்பிலும், 12 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய பண்ணை பள்ளிகள் அமைப்பதற்காக தொகை ரூ.8 லட்சம் மதிப்பிலும், என மொத்தம் 862 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.50.54 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) குருநாதன், மாவட்ட தொழில் மைய மேலாளார் மாரியம்மாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணு வர்தன், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சேக் அப்துல்லா (தென்காசி), சுப்பம்மாள் (கடையநல்லூர்), காவேரி சீனித்துரை (கீழப்பாவூர்) மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.