என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Colombia"

    • கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
    • நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல

    ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அதுமுதல் உலக சுகாதர அமைப்பில் இருந்து வெளியேறுவது, உலக நாடுகளுக்கான யுஎன்- எய்ட் நிதியுதவியை நிறுத்துவது உள்ளிட்ட முடிவுகளை அறிவித்தார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவரை நாடுகடத்துவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18,000 இந்தியர்களைத் திரும்பப்பெறுவதாக இந்தியாவும் உடன்பட்டுள்ளது. ஆனால் கொலம்பியா அமெரிக்காவின் நாடு கடத்தல் திட்டத்தை நிராகரித்தது. இதனால் கோபம் தலைக்கேறிய டிரம்ப், கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

    முன்னதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட 2 விமானங்களைத் தரையிறங்க கொலம்பியா அனுமதிக்கவில்லை. இதனால் கொதித்த டிரம்ப், அந்த நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரியை உயர்த்தி உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வரி விதிப்பு ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும், கொலம்பிய நாட்டு அரசு அதிகாரிகள், அவர்களை சார்ந்தோருக்கான விசா ரத்து, கொலம்பியர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை உள்ளிட்ட உத்தரவுகளையும் அவசரகதியில் டிரம்ப் பிறப்பித்தார்.

    இதற்க்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை உயர்த்தி கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டார். நீங்கள் எங்களுக்கு செய்வதை, நாங்களும் உங்களுக்கு செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் கொலம்பிய அதிகாரிகளின் விசா ரத்து, பயணிக்க தடை உள்ளிட்டவை குறித்து பேசிய குஸ்டாவோ பெட்ரோ, நான் ஒன்றும் அமெரிக்கா வர விரும்பவில்லை. அது எனக்கு போர் அடிக்கிறது. நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல என்று தெரிவித்தார்.

     

    இந்நிலையில் கொலம்பியா தனது நிலைப்பாட்டில் இருந்து திடீரென யு டர்ன் அடித்து, அமெரிக்காவில் இருந்து அனுப்பட்ட தங்கள் நாட்டு அகதிகளை ஏற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

    கொலம்பியா அரசு, ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு கடத்தும் விமானங்களில் நாட்டிற்கு வரவிருக்கும் சக நாட்டவர்கள் பாதுகாப்பாக திரும்புவதையும், கண்ணியமாக நடத்தப்படுவதையும் உறுதி செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.   

    எந்த சூழ்நிலையிலும் திரும்ப வந்தவர் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதன்மூலம் தென் அமெரிக்க நாடான கொலம்பியா தன்னிடம் அடிபணிந்ததை அடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி உயர்வு, விசா ரத்து, பயண தடை ஆகியவற்றை அமெரிக்கா திரும்பப்பெற்றுள்ளது.

    பிரேசில் நாடும் தங்கள் அகதிகளை திரும்பப்பெற்றுள்ள நிலையில், தங்கள் நாட்டவரை விமானத்தில் தண்ணீர் கொடுக்கால், ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. 

     

    • கொலம்பியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் டிரம்ப் எச்சரிக்கை.
    • 2 ராணுவ விமானங்களை கொலம்பிய அரசு அனுப்பியது.

    அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதில் கொலம்பியாவைச் சேர்ந்த பலரை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது. இதற்கு கொலம்பிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து கொலம்பியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.

    இதற்கிடையே அமெரிக்க விமானங்களில் திருப்பி அனுப்பப்படும் குடிமக்களை ஏற்க கொலம்பியா முன்வந்தது. இதனால் மோதல் முடிவுக்கு வந்து இரு நாடுகள் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கியது.


    அமெரிக்காவில் இருந்து கொலம்பிய மக்களை அழைத்து வர 2 ராணுவ விமானங்களை கொலம்பிய அரசு அனுப்பியது. அந்த விமானங்கள், 200-க்கும் மேற்பட்ட கொலம்பியாவை சேர்ந்த புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு தலைநகர் போகோட்டாவை வந்தடைந்தது.

    • அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
    • கொலம்பியா அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க ராணுவ விமானத்தை அனுமதிக்க மறுத்தது.

    அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து ஆவணமின்றி அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

    ராணுவ விமானங்களை பயன்படுத்தி கவுதமாலா, ஈகுவடார், பெரு, ஹோண்டுராஸ் நாடுகளுக்கு சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்கா அனுப்பி வருகிறது.

    அவ்வகையில் கடந்த மாதம், கொலம்பியாவிற்கு அனுப்பப்பட்ட அந்நாட்டு மக்கள் ராணுவ விமானத்தில் ஏ.சி, தண்ணீர் எதுவும் இல்லாமல், கைவிலங்கிட்டு அனுப்பப்பட்டிருந்தனர். இதற்கு கொலம்பியா அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க ராணுவ விமானத்தை அனுமதிக்க மறுத்தது.

    இதன் காரணமாக கொலம்பியாவை சேர்ந்தவர்களுக்கான விசாக்களை ரத்து செய்ததுடன், அமெரிக்காவுக்கு அந்நாட்டு பயணிகள் வர தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக கொலம்பியாவும், அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்தது. பதிலுக்கு கொலம்பிய அரசு மீது அமெரிக்காவும் கடுமையாக வரி விதித்தது.

    பின்னர் இரு நாட்டு அரசுகளும் சமாதானத்திற்கு வந்ததால் வரிவிதிப்பு நீக்கப்பட்டது. இறுதியாக தன் நாட்டு விமானத்தை அனுப்பி தனது மக்களை கொலம்பியா அரசு மீட்டது.

    இதனையடுத்து அமெரிக்காவில் இருந்து முதற்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மதியம் தரையிறங்கியது.

    சொற்பமான கழிவறைகள் கொண்ட விமானத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு வருவதற்கு சுமார் 20 மணி நேர ஆகும்.

    இந்த விமானத்தில் நாடு கட்டத்தப்பட்ட சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியர்களை விலங்கிட்டு அழைத்துவந்து அவமானப்படுத்தியதற்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவிற்கு கடும் அழுத்தம் கொடுத்து இந்தியாவின் மரியாதையை காங்கிரஸ் கட்சி கைப்பற்றிய சம்பவத்தை நாம் நினைவு கூறலாம்.

    காங்கிரஸ் ஆட்சியின் இறுதிகட்டத்தில் இந்திய தூதர் தேவயாணி கோபர்கடே அமெரிக்காவில் பணிப்பெண்ணுக்கு முறையான ஊதியம் வழங்காத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    அப்போது இந்தியா தனது கண்ணியத்தை காக்கும் பொருட்டு கடும் நடவடிக்கைகளை எடுத்தது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வழங்கி வந்த பல சலுகைகளை இந்திய அரசு விலக்கிக்கொண்டது. பின்னர் இந்திய அரசின் நடவடிக்கைகளால் தேவயானி இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நேரத்தில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்தும் விவகாரத்தில் கொலம்பியா போல இந்தியா எவ்வித அழுத்தமும் அமெரிக்க அரசுக்கு கொடுக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

    இந்நிலையில், ராணுவ விமானத்தில் கை, கால்களுக்கு விலங்கிட்டு அவமரியாதையுடன் இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

    * பயணிகள் விமானத்தில் அனுப்புவதை விட ராணுவ விமானத்தை பயன்படுத்துவது 5 மடங்கு செலவு பிடிக்கும் என்கிறது கார்டியன் பத்திரிகை. ஆகையால் இது வெளியேற்ற நடவடிக்கை என்பதைவிட, இந்தியர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையா என்று கேள்வி எழுகிறது.

    * அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளை பார்த்தால் பலவீனமான பிரதமரா மோடி? என்று இந்திய மக்களிடம் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    * பிரதமர் மோடி விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், இத்தகைய நடவடிக்கையை டிரம்ப் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • தேசிய விடுதலை ராணுவ அமைப்பு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தகவல்

    கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும், இதில் எட்டு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததாகவும், அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். இது போன்ற கொடூர தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீதான இந்த தாக்குதல் வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கி மூலம் நடத்தப்பட்டது போல் தெரிவதாக பிராந்திய காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    பெட்ரோ கடந்த மாத தொடக்கத்தில் கொலம்பியாவின் அதிபராக பதவியேற்ற பின்னர் பொது பாதுகாப்பு பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட மிக முக்கியமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. கொலம்பியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்பான தேசிய விடுதலை ராணுவம் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படையினர் ஆயுதங்களைக் கீழே போட்டு 2016 இல் அரசுடன் சமாதான உடன்படிக்கைக்கு மேற்கொண்டனர். மேலும் பல கிளர்ச்சிக் குழுக்கள் போர் நிறுத்தத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அமைதிக்கு எதிரான நாசவேலை என்று அதிபர் பெட்ரோ கூறியுள்ளார்.

    நரினோ மாகாணத்தில் உள்ள மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
    பொகோடா:

    கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாகாணத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில், நரினோ மாகாணத்தின் மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் தொடர் கனமழை காரணமாக நேற்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மலையடிவாரத்தில் உள்ள வீடுகள் நிலச்சரிவில் சிக்கியதால், வீடுகளில் வசித்துவந்த பலர் மண்ணுக்குள் புதைந்தனர். 

    இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 20 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகளை மீட்புக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 
    நடுவருக்கு எதிரான கருத்தை விமர்சித்த மரடோனாவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது. #Maradona
    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து தொடரில், இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் இடையிலான 2-வது சுற்று ஆட்டம் வழக்கமான மற்றும் கூடுதல் நேரம் முடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. ‘இந்த ஆட்டத்தில் நடுவர் ஜிஜெர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார். அவரது சில முடிவுகள் இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்தன’ என்று கொலம்பியா கேப்டன் ராடமெல் பால்காவ் சாடியிருந்தார்.

    அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா, ‘இங்கிலாந்து நினைவுகூரத்தக்க ஒரு வழிப்பறியை செய்து விட்டது’ என்று விமர்சித்தார். இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், கொலம்பியா வீரர் கார்லஸ் சாஞ்சசை பவுல் செய்ததற்காக கொலம்பியாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்பது மரடோனாவின் எண்ணமாகும். ‘இங்கு ஒரு ‘ஜென்டில்மேன்’ தீர்ப்பளிக்கிறார். அவர் தான் போட்டி நடுவர். அவரை போன்ற ‘நேர்மையான நடுவர்’ கூகுளில் தேடிப்பார்த்தாலும் கிடைக்கமாட்டார். அந்த நடுவர் ஜிஜெர் ஒரு அமெரிக்கர்.... என்னவொரு எதிர்பாராத பொருத்தம்’ என்றும் கிண்டலடித்து இருந்தார்.

    இந்த நிலையில் மரடோனாவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது. நடுவருக்கு எதிரான அவரது கருத்து முற்றிலும் நியாயமற்றது என்று பிபா கூறியுள்ளது. இதையடுத்து தனது கருத்துக்கு மரடோனா வருத்தம் தெரிவித்துள்ளார். 
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் பெனால்டி ஷூட் முறையில் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து. #WorldCup2018 #COLENG #ColombiavEngland
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது. இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன.

    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 57வது நிமிடத்திக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து பயன்படுத்தி கொண்டது.

    அந்த அணியின் ஹாரி கேன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் முடிவில் 93வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

    கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் முறை தரப்பட்டது.
    இதில் முதல் வாய்ப்பில் கொலம்பியாவும், இங்கிலாந்தும் ஒரு கோல் அடித்தன. இரண்டாவது வாய்ப்பிலும் இரு அணிகளும் ஒரு கோல் அடித்தன.

    மூன்றாவது வாய்ப்பில் கொலம்பியா அணி ஒரு கோல் அடிக்க 3-2 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் வாய்ப்பு தடுக்கப்பட்டது.

    நான்காவதில் கொலம்பியா வாய்ப்பு தடுக்கப்பட்டது. இங்கிலாந்து ஒரு கோல் அடித்து 3-3 என சமனிலை ஆனது.

    இறுதியாக, கடைசி வாய்ப்பில் கொலம்பியா கோல் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணி கோல் அடித்து 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup #COLENG #ColombiavEngland #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    கொலம்பியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் ஆட்டம் முதல் 45 நிமிடத்தில் 0-0 என சமநிலையில் முடிந்துள்ளது. #WorldCup2018 #COLENG #ColombiavEngland
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.



    ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது. இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன. #WorldCup #COLENG #ColombiavEngland #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றது. #WorldCup2018 #COLPOL
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எச் பிரிவில் இடம் பிடித்துள்ள போலந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து கொலம்பியா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கொலம்பியா அணியின் சார்பில் ராடமல் பால்கோ 70-வது நிமிடத்திலும், ஜுவான் குவாட்ராடோ 75-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். இதனால் கொலம்பியா அணி 3-0 என முன்னிலை பெற்றது.

    கொலம்பியா அணியினரின் அதிரடி ஆட்டத்தின் முன்னால் போலந்து வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
    கூடுதலாக கிடைத்த நிமிடங்களிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் கொலம்பியா அணி 3 புள்ளிகள் பெற்றது.

    ஆனாலும், எச் பிரிவில் ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் கொலம்பியா, போலந்து அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின.
    கொலம்பியாவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் வலதுசாரி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இவான் டியூக் 54 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். #ColombiaDecide #IvanDuque
    போகோடா:

    மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. வலதுசாரி ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் செனட் உறுப்பினர் இவான் டியூக் மற்றும் முற்போக்காளர் கட்சி சார்பில் முன்னாள் மேயர் மற்றும் கொரில்லா போராளியாக இருந்த கஸ்டாவோ பெட்ரோ போட்டியிட்டனர்.

    வாக்கு எண்ணிக்கையில் இவான் டியூக் 54 வாக்குகளும், கஸ்டாவோ பெட்ரோ 42 சதவிகித வாக்குகள் பெற்றனர். இதன் மூலம், 41 வயதே ஆன இவான் டியூக் வெற்றி பெற்று அந்நாட்டு அதிபராக பதவியேற்க உள்ளார். இதன்மூலம் அந்நாட்டு வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் அதிபரானவர் என்ற பெயரையும் டியூக் பெற உள்ளார். 

    முன்னாள் அதிபர் அல்வோரோ உரைப்-க்கு ஆலோசகராக இருந்த டியூக், அந்நாட்டு அரசு கிளர்ச்சியாளர்களுடன் செய்துகொண்ட சமரச ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×