என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Condoles"

    • காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.
    • லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    லக்கிசராய்-சிகந்திரா பிரதான சாலையில் உள்ள பிஹராவுரா கிராமத்தில், இன்று அதிகாலை 3 மணியளவில் லாரியும் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில், திருமண விழாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த குறைந்தது ஒன்பது பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

    உயிரிழந்தவர்களில் வீர் பாஸ்வான், விகாஸ் குமார், விஜய் குமார், திபானா பாஸ்வான், அமித் குமார், மோனு குமார், கிசான் குமார் மற்றும் மனோஜ் கோஸ்வாமி என கண்டறியப்பட்டுள்ளது.

    லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.

    மாநில அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு கூறினார்.

    • தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது.
    • தீ விபத்தில் 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

    தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது. தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    இருப்பினும், வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே, இந்தியர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்த்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில், " குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    எங்கள் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்.

    இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்" என்றார்.

    • தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது.
    • தீ விபத்தில் 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன.

    தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
    • 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.

    மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
    • டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

    டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

    அவரது மாசற்ற நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

    டெல்லி கணேஷ் ஏற்று நடித்த முக்கிய கதாப்பாத்திரங்களால், அவர் என்றும் நினைவுகூரப்படுவார். நாடகத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தவர்.

    அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

    ஓம் சாந்தி..!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திபெத் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.
    • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படை விரைந்து சென்றது.

    புதுடெல்லி:

    திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணிக்கு திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது. இதனால் திபெத், நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின.

    இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. திபெத்தின் ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், திபெத் நிலநடுக்கத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், திபெத் தன்னாட்சிப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட துயரமான உயிர் மற்றும் உடைமை இழப்புகளுக்கு இந்திய அரசும் மக்களும் இரங்கல் தெரிவிக்கின்றனர். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.

    திமுக முன்னாள் எம்பியான வசந்தி ஸ்டான்லியின் மறைவுக்கு கனிமொழி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #VasanthiStanley #RIPVasanthiStanley #DMK
    சென்னை:

    திராவிட முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்ய சபாவில் தமிழகத்தின் பிரதிநிதியாக தோ்வு செய்யப்பட்டவர் வசந்தி ஸ்டான்லி (56). வசந்தி ஸ்டான்லி 2008 முதல் 2014 வரை திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். பத்திரிகையாளரான இவர் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

    உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



    இந்நிலையில், திமுக முன்னாள் எம்பியான வசந்தி ஸ்டான்லியின் மறைவுக்கு கனிமொழி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர், நல்ல பேச்சாளர் வசந்தி ஸ்டான்லி. வசந்தி ஸ்டான்லியின் மறைவு மகளிர் அணியின் சகோதரிகளுக்கும் எனக்கும் பெரிய இழப்பு என பதிவிட்டுள்ளார். #VasanthiStanley #RIPVasanthiStanley #DMK
    கேரள காங்கிரஸ் (மாணி) கட்சி தலைவரான கே.எம்.மாணியில் உடல் நாளை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுல்காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளனர். #KMMani #RIPKMMani
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பாலா என்ற இடத்தை சேர்ந்தவர் கே.எம்.மாணி (வயது 86). கேரள காங்கிரஸ் (மாணி) கட்சி தலைவரான அவர் மூச்சுதிணறல் காரணமாக கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    மாணி மரணமடைந்த தகவல் கிடைத்ததும் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    கே.எம்.மாணியின் உடல் இன்று காலை சொந்த ஊரான கோட்டயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். நாளை (11-ந்தேதி) பிற்பகல் அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது.

    மாணியின் மகன் ஜோஸ் கே.மாணியும், தந்தை வழியில் அரசியலில் குதித்து உள்ளார். அவர் தற்போது எம்.பி.யாக உள்ளார்.

    ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த மாணி பின்னர் கேரள காங்கிரஸ் (மாணி) என்ற புதிய கட்சியை தொடங்கி அதன் தலைவராக செயல்பட்டு வந்தார்.



    வக்கீலாக தனது வாழ்க்கையை தொடங்கிய மாணி 1960-ம் ஆண்டு அரசியலில் குதித்தார். இந்திய தேசிய காங்கிரசில் இணைந்த அவர் கோட்டயம் மாவட்ட காங்கிரஸ் செயலாளராக 1964-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

    1965-ம் ஆண்டு முதல் முறையாக பாலா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்தெடுக்கப்பட்டார் தொடர்ந்து 53 ஆண்டுகள் இதே தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை கே.எம்.மாணிக்கு மட்டுமே உண்டு.

    நிதி மந்திரியாக கே.எம். மாணி இருந்தபோது 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்து அதிலும் சாதனை படைத்தார்.  #KMMani #RIPKMMani
    முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GeorgeFernandes #RIPGeorgeFernandes
    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 88), உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், ராணுவ மந்திரியாக பதவி வகித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், தொழில் துறை, ரெயில்வே போன்ற துறைகளிலும் மந்திரி பதவிகளை வகித்துள்ளார். அரசியல்வாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர் என பன்முக தன்மைகளை கொண்ட இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

    இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட சூழலில் அதனை கடுமையாக எதிர்த்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பின் பீகாரின் முசாபர்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தொழிற்துறை மந்திரியானார்.

    ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ஜார்ஜ் பெர்னாண்டஸ் யாருக்கும் அஞ்சாதவர், ஏழைகளின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். அச்சமற்ற, வெளிப்படையான மற்றும் தொலைநோக்குடன், அவர் நம் நாட்டிற்கு மதிப்புமிக்க பங்களிப்பை ஆற்றி உள்ளார்.  அவர் ஏழைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.

    ஜார்ஜ் பெர்னாண்டஸ் பற்றி நாம் நினைவுகூரும்போது நீதிக்காகப் போராடிய ஒரு தொழிற்சங்கத் தலைவராகவும் அவரை நாம்  நினைவில் கொள்கிறோம். எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்களை அவரது மறைவு ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என கூறியுள்ளார்.



    இதேபோல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா சதுர்வேதி, சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GeorgeFernandes #RIPGeorgeFernandes
    ஒடிசாவின் கந்தமால் பகுதியில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #OdishaTtruckAccident
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தின் கலிங்கி பகுதியில் இருந்து பிராமணிகாவ் நோக்கி மினி லாரி இன்று சென்று கொண்டிருந்தது. அதில் சுமார் 40க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். 

    பாலிகுடா காவல் சரகத்திற்கு உட்பட்ட பொய்குடா மலைப்பகுதியில் உள்ள ஒரு வளைவில் திருப்ப முற்பட்டபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விழுந்தது. 

    இந்த விபத்தில் 8 பேர் இறந்தனர்.  25 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    லாரி விபத்தில் பலியானோருக்கு முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். #OdishaTtruckAccident 
    இந்தோனேசியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #Indonesianplanecrash #LionAirplanecrash #Modi
    ஜகர்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
      
    “லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. இன்று அந்த விமானத்தில் மொத்தம் 189 பேர் சென்றனர். அவர்களில் 178 பேர் பெரியவர்கள், ஒரு சிறுவன், 2 கைக்குழந்தைகள், 2 விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்தனர்.

    ஜகர்தாவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் 13-வது நிமிடத்தில் திடீரென மாயமானது. அந்த விமானத்துக்கும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறைக்குமான தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது.



    தகவலறிந்த மீட்புக் குழுவினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் பலியானதாக அவர்கள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான அந்த விமானத்தை பவ்யே சுனேஜா (31) என்ற இந்திய விமானி ஓட்டிச் சென்றார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், இந்தோனேசியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தோனேசியா விமான விபத்தில் பலியானோரின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரில் இருந்து அவர்கள் மீண்டு வருவதற்கான பலத்தையும், தைரியத்தையும் அளிக்க இறைவனிடம் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். #Indonesianplanecrash #LionAirplanecrash #Modi
    வடசென்னை மாவட்ட அவைத் தலைவர் மறைவுக்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

    வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அவைத் தலைவர் கோயில் பிள்ளை மாரடைப்பால் மரண மடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

    ஆரம்ப கால கழக உடன்பிறப்பு கோயில் பிள்ளை கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு கூறியுள்ளனர். #ADMK
    ×