என் மலர்
நீங்கள் தேடியது "Cong"
- அமலாக்கத்துறையை அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி அமளியில் ஈடுபட்டனர்.
- எதிர்க்கட்சியினர் சபையின் மைய பகுதிக்கு வந்த அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன.
பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் உள்ளிடட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.
நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள யங் இந்தியா நிறுவனத்தின் ஆபீசுக்கு அமலாக்கத்துறை யினர் தற்காலிகமாக சீல் வைத்தனர்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் இதை முன்வைத்து அவையில் பிரச்சினையை கிளப்பினார்கள். சபையின் மைய பகுதிக்கு வந்த அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
அமலாக்கத்துறையை அரசு தவறாக பயன்படுத்து வதாக கூறி அமளியில் ஈடுபட்டனர். இதே போல் ஜி.எஸ்.டி. உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தும் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக அவை 11.30 மணிவரை ஒத்திவைக்கப் பட்டது.
பின்னர் அவை கூடியதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மேல்சபையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதே பிரச்சினையை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.
விசாரணை அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாக கங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.
இதற்கு பா.ஜனதா உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை அவை தலைவர் நிராகரித்தார்.
இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து அமளியில் ஈடு பட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் முழுக்கம் காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய பாரதிய ஜனதா அரசு பிரெஞ்சு அரசுடன் செய்துள்ள ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடும் ஊழலும் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ரபேல் விமான ஒப்பந்தம் ஊழலை கண்டித்தும், அதன் மீது விசாரணை நடத்தக்கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதுபோல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக புதுவையின் கிராமப்புற தொகுதிகளில் இருந்து பஸ், வேன்களில் காங்கிரஸ் தொண்டர்கள் சுதேசி மில் முன்பு ஒன்று திரண்டனர்.
புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இந்த பிரமாண்ட ஊர்வலத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், புதுவை பொறுப்பாளருமான முகுல்வாஸ்னிக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, சாரம், ராஜீவ்காந்தி சிலை வழியாக வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் நமச்சிவாயம், முதல் அமைச்சர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் முகுல் வாஷ்னிக் ஆகியோர் பேசினார்கள்.
ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, தனவேல்,
முன்னாள் அமைச்சர் வல்சராஜ், பெத்தபெருமாள், மாநில துணை தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ், பொதுசெயலாளர்கள் ஆறுமுகம், கருணாநிதி, தனுசு, செயலாளர்கள் சாம் ராஜ், காமராஜ்,
சேவாதள தலைவர் சி.பி., குலசேகரன், இளைஞர் அணி தலைவர் ரமேஷ், பொதுசெயலாளர் விக்னேஷ், மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாண சுந்தரம், பொதுசெயலாளர் விக்கிரமாதித்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் ரவிசந்திரன் தலைமையில் ஐ.என்.டி.யூ.சி.யில் இணைக்கப்பட்ட சங்கத்தினர் 500 பேர் பங்கேற்றனர். #congress
குமரி மேற்கு மாவட்டத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் நாகர்கோவிலுக்கு காரில் வந்துகொண்டிருந்தார். அவருக்கு தொண்டர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் ஒரு பகுதியாக திங்கள்நகர் ரவுண்டானாவில் இருந்து கட்சி தொண்டர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினார்கள்.
இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. மேலும் போலீசார் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்லக்கூடாது எனவும் கூறியிருந்தனர். ஆனால் தடையை மீறி கட்சி நிர்வாகிகள் திங்கள்நகர் ரவுண்டானாவில் இருந்து மோட்டார் சைக்கிளில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசரின் வாகனத்திற்கு பின்னால் பேரணியாக வந்தனர்.
இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஞான சிகாமணி ஆகியோர் குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெரால்டு கென்னடி, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ் உள்பட 50 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.