என் மலர்
நீங்கள் தேடியது "Contract laborer"
- பணி முடித்து பஸ் ஏறி வீட்டிற்கு செல்வதற்காக நின்றிருந்தனர்.
- தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கவிதா பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா (வயது 38), இவரது தங்கை தமிழ்செல்வி (36). இருவரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தொழிலாளராக பணி செய்து வருகின்றனர். நேற்று மாலை பணி முடித்து பஸ் ஏறி வீட்டிற்கு செல்வதற்காக நின்றிருந்தனர். அப்போது அவ்வழியே நல்லாவூரைச் சேர்ந்த குணசேகரன் (42) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் லிப்ட் கேட்டு இருவரும் மோட்டார் சைக்களில் ஏறினர்.
ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் புதுவை - திண்டிவனம் சாலையில் உள்ள புளிச்சபள்ளத்தில் உள்ள வாணிபக் கழக குடோன் அருகில் வந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கவிதா பரிதாபமாக இறந்தார். மேலும், தமிழ்செல்வி, குணசேகரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வானூர் போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த குணசேகரன், தமிழ்செல்வியை சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விபத்து தொடர்பாக வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்து போலீசார் விசாரணை.
- பாதுகாப்பை உறுதி செய்யப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு.
சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்று எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் பெருமாள் வயது (52) கரிமேடு பகுதியை சேர்ந்தவர்.
இச்சம்பவம் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.