என் மலர்
நீங்கள் தேடியது "Costa Rica"
- முதல் ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி கோஸ்டாரிகாவுடன் டிரா செய்து இருந்தது.
- 2 தோல்வியுடன் பராகுவே வெளியேறியது.
லாஸ் வேகாஸ்:
கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த 'டி' பிரிவு ஆட்டத்தில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. பிரேசில் அணிக்காக வின்சியஸ் 2 கோலும், சவியோ, லுகாஸ் பகுடோ தலா ஒரு கோலும் அடித்தனர். பிரேசில் பெற்ற முதல் வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி கோஸ்டாரிகாவுடன் டிரா செய்து இருந்தது.
மற்றொரு போட்டியில் கொலம்பியா 3-0 என்ற கணக்கில் கோஸ்டாரிகாவை தோற்கடித்தது. 2 வெற்றியுடன் அந்த அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 2 தோல்வியுடன் பராகுவே வெளியேறியது.
- எல் சால்வடோர், பனாமா, குவாத்தமாலா, ஆகிய மத்திய அமெரிக்க நாடுகள் அறிவித்துள்ளன.
- அமெரிக்க அரசாங்கம் முழுமையாக ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆவணமில்லாமல் தங்கியிருக்கும் பிற நாட்டவர்களை வெளியேற்றும் பணியில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். நாடு கடத்தல் உத்தரவை ஏற்க அடிபணியாத நாடுகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுபவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக லத்தீன் அமெரிக்க நாடான எல் சால்வடோர், பனாமா, குவாத்தமாலா, ஆகிய மத்திய அமெரிக்க நாடுகள் அறிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து மற்றொரு மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா, நாடு கடத்தப்படும் எந்த நாட்டை சேர்ந்தவர்களையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டவிரோதமாக குடியேறியவைகளை நாடு கடத்துவதில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க கோஸ்டாரிகா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இவர்கள் மத்திய ஆசியா மற்றும் இந்தியாவிலிருந்து வருபவர்கள் நாடுகடத்தப்பட்டவர்களின் முதல் குழு புதன்கிழமை கோஸ்டாரிகாவில் ஒரு வணிக விமானத்தில் வந்து சேரும். அங்கு அவர்கள் பனாமா எல்லைக்கு அருகிலுள்ள ஒரு தற்காலிக புலம்பெயர்ந்தோர் பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
பின்னர் புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த நாடுகளுக்கு நாங்கள் அனுப்பி வைப்போம். இந்த செயல்முறைக்கான செலவுகளை சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (IOM) மேற்பார்வையின் கீழ் அமெரிக்க அரசாங்கம் முழுமையாக ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- லிமோன் நகருக்கு வந்து கொண்டிருந்த போது விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனது.
- விமானத்தின் துண்டுகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்
லிமோன்:
மெக்சிகோவிலிருந்து கோஸ்டாரிகா நாட்டின் லிமோன் விமான நிலையத்திற்கு ஐந்து ஜெர்மன் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சிறிய ரக விமானம், கோஸ்டாரிகா கடற்கரை அருகே விபத்துக்குள்ளானது. ரிசார்ட் நகரமான லிமோனுக்குச் வந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து காணாமல் போனதாக, கோஸ்டாரிகா பாதுகாப்பு அமைச்சர் டோரஸ் தெரிவித்தார்.
ஒன்பது இருக்கைகள் கொண்ட இத்தாலி தயாரிப்பான அந்த விமானத்தின் துண்டுகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கோஸ்டாரிகா அதிகாரிகள் தெரிவித்தனர். விமான பயணிகள் குறித்த தேடுதல் நடவடிக்கை உடனடியாக தொடங்கிய நிலையில் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த விபத்தில் ஜெர்மன் தொழிலதிபர் உள்பட 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில் இதுவரை எந்த உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கோஸ்டாரிகாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் மார்ட்டின் அரியாஸ் கூறினார்.




‘இ’ பிரிவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் செர்பிய அணி 2-வது வெற்றியை நோக்கி, சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. தொடக்க ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த செர்பிய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் 2-வது சுற்றை எட்டி விடும். மாறாக அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க சுவிட்சர்லாந்து அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி காண வேண்டியது அவசியமாகும்.
குறைந்த மக்கள் தொகையை கொண்ட ஐஸ்லாந்து நாடு, தனது முதல் ஆட்டத்தில் (டி பிரிவு) பலம் வாய்ந்த அர்ஜென்டினாவுடன் பதற்றமின்றி விளையாடி டிரா செய்தது. அந்த அணி உலக கோப்பை வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் ஆப்பிரிக்க தேசமான நைஜீரியாவுடன் இன்று கோதாவில் இறங்க காத்திருக்கிறது. அதே நேரத்தில் தொடக்க ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் உதைவாங்கிய இளம் வீரர்களை கொண்ட நைஜீரியா அணி, கடந்த உலக கோப்பையை போன்று நாக்-அவுட் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெற வேண்டும் என்றால், இன்றைய ஆட்டத்தில் ஐஸ்லாந்தை புரட்டியெடுத்தாக வேண்டும். #WorldCupRussia #FIFA2018
உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நாளை மறுநாள் (14-ந் தேதி) தொடங்குகிறது. ஒரு மாதம் வரை இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.
பிரசெல்சில் நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் - கோஸ்டாரிகா அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பெல்ஜியம் தரப்பில் லுகாகு 2 கோலும் (42 மற்றும் 50-வது நிமிடங்கள்) மெர்டன்ஸ் (31-வது நிமிடம்), பட்சுயி (64-வது நிமிடம்) தலா 1 கோலும் அடித்தனர். கோஸ்டாரிகா தரப்பில் ரூயிஸ் (24-வது நிமிடம்) கோல் அடித்தார்.
பெல்ஜியம் கடந்த 8 போட்டியில் தோல்வியை தழுவாமல் வலிமையாக இருக்கிறது. அந்த அணி உலக கோப்பையில் ‘ஜி’ பிரிவில் உள்ளது. தோல்வியை தழுவிய கோஸ்டாரிகா ‘இ’ பிரிவில் உள்ளது.
செனகல் - தென்கொரியா மோதிய பயிற்சி ஆட்டத்தில் செனகல் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டங்களில் ஜப்பான் - பராகுவே, போலந்து - லிதுனியா அணிகள் மோதுகின்றன. #FIFO2018 #Belgium #CostaRica