என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtalam waterfalls"

    • மற்ற அருவிகள் அனைத்தும் முழுமையாக வறண்டு பாறையாக காட்சியளிக்கின்றன.
    • அருவி பகுதிகளில் கடைகளை அமைத்துள்ள வியாபாரிகளும் குற்றால சீசன் எப்பொழுது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    தென்காசி:

    தமிழகத்தில் கோடை காலத்தையொட்டி தென்காசி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும், கடுமையான வெயிலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் முக்கிய சுற்றுலா தளமாக கருதப்பட்டு வரும் குற்றாலத்தில் அருவிகளில் போதிய நீரின்றி வறண்டு காணப்படுகின்றது. கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு பெய்த தொடர் கோடை மலையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மீண்டும் மழை குறைந்ததையடுத்து பழைய குற்றாலம் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து குளிக்கும் வண்ணம் தண்ணீர் கொட்டியது. நேற்று முன்தினம் மாலையில் பெய்த மிதமான மழையினால் வெயிலின் தாக்கமானது குறைந்து காணப்பட்டாலும் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது.

    இதனால் அருவிகளுக்கு ஓரளவிற்கு வந்த தண்ணீரும் முற்றிலுமாக நின்றது. தற்போது பழைய குற்றாலம் அருவியில் மட்டும் குளிக்கும் அளவிற்கு குறைந்த அளவு தண்ணீர் வருகிறது. மற்ற அருவிகள் அனைத்தும் முழுமையாக வறண்டு பாறையாக காட்சியளிக்கின்றன. அருவி பகுதிகளில் கடைகளை அமைத்துள்ள வியாபாரிகளும் குற்றால சீசன் எப்பொழுது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் சரி செய்யும் பணிகள் தீவிரம்.
    • தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் மழைப்பொழிவு குறைந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு கரை புரண்டு ஓடியது.

    குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் பலத்த சேதங்க ளும் ஏற்பட்டது. மெயின் அருவி வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் மழைப்பொழிவு குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளது.

    மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக விழ தொடங்கி உள்ளது. மெயின் அருவி பகுதியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மணல் கற்கள், மரக்கிளைகள் நடைபாதை முழுவதும் ஆங்காங்கே சிதறி கிடந்ததால் அதனை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அருவி பகுதிகளை சுற்றி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் அதனையும் சரி செய்யும் பணிகள் முழுமையாக நடைபெற்ற உடன் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அருவிகளில் தண்ணீர் சீற்றம் குறைந்து மிதமாக விழத் தொடங்கி இருந்தாலும் தொடர்ந்து இன்று 5-வது நாளாக குளிப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

    ×