என் மலர்
நீங்கள் தேடியது "Courtallam Falls"
- கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது.
- இரவில் மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்தது.
தென்காசி:
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுவது தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் ஆகும்.
தென்மேற்கு பருவமழை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஆனால் இந்த ஆண்டிற்கான சீசன் தொடங்குதில் தாமதம் ஏற்பட்டது.
கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. தென்காசியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் வறட்சியுடன் காணப்பட்ட ஐந்தருவி மற்றும் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத் தொடங்கியது.
நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடனும், இதமான காற்றும் வீசி வந்த நிலையில் மாலை 4 மணிக்கு திடீரென மேகக் கூட்டங்கள் திரண்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் குற்றாலம், தென்காசி பகுதியில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதேபோல் செங்கோட்டை, குண்டாறு, அடவிநயினார் அணைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் குற்றாலம் ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டியும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க உடனடியாக தடை விதிக்கப்பட்டது.
இரவில் மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்தது. இதனால் இன்று காலை முதல் ஐந்தருவி, மெயின் அருவியில் சீராக தண்ணீர் விழ தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
குற்றால சீசன் எப்பொழுது தொடங்கும் என எதிர்பார்த்து இருந்த சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் ஆர்வமுடன் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குவிந்து வருகின்றனர். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். எனினும் பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றுருவி பகுதிகள் வறட்சியுடனே காணப்பட்டு வருகிறது.
இன்று காலை முதல் குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசி வருவதால் தொடர்ந்து சாரல் மழை பெய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றும் தொடர் சாரல் மழை பெய்தால் சிற்றுருவி, புலி அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது.
- மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடியும், ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது.
தென்காசி:
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஏற்கனவே தொடங்கிய நிலையிலும், தென்மாவட்டங்களில் இதுவரை பருவக்காற்று மட்டுமே வீசி வருகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் இருந்தே தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கிவிடும். ஆனால் ஜூலை மாதம் தொடங்கிய பின்னரும் மழைக்கான அறிகுறியே இல்லை. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குறைந்த அளவில் தண்ணீர் கொட்டியது. எனினும் குறைவாக கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பழைய குற்றாலம் அருவியில் பாறைகள் மட்டுமே காட்சியளித்தது.
இந்நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. நள்ளிரவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையின் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
ஒருகட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதித்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் இரவு நேரத்தில் ஏராளமானோர் குளிப்பதற்காக வந்திருந்தனர். ஆனால் வெள்ளப்பெருக்கு காரணமாக அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடியும், ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது.
இந்நிலையில் இன்று காலை 2 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் அருவிகளில் குளித்தனர். இந்த ஆண்டு சீசன் இதுவரை களைகட்டவில்லை என்ற ஏக்கம் வியாபாரிகள் மனதிலும், சுற்றுலா பயணிகள் மனதிலும் உள்ள நிலையில் இனியாவது அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்ட வேண்டும் என்று அவர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடியில் 10 மில்லிமீட்டரும், தென்காசி, செங்கோட்டையில் தலா 3 மில்லிமீட்டரும், கருப்பாநதி அணை பகுதியில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. குண்டாறில் 4.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்கின்றனர். மாவட்டத்தில் அணை பகுதிகளில் லேசான மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 8 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறு அணை பகுதியில் 3.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள நீர் தேக்கங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தென்காசி:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அவ்வப்போது தடை விதித்திருந்தாலும் தண்ணீர் குறையும்பொழுது குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்தின் மெயின் அருவி ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இன்று காலையும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்துள்ளதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள நீர் தேக்கங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
குண்டாறு நீர் தேக்கம் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தென்காசி மாவட்டத்தின் பிரதான சாலைகள் மற்றும் குற்றால அருவிக்கரை பகுதிகள் அனைத்திலும் வாகன நெருக்கடி ஏற்பட்டது.
- அவ்வப் போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்து வருவதால் சீசன்களை கட்டி உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததன் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி பழைய குற்றாலம் ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் முதல் வெள்ளத்தின் சீற்றம் குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இன்று விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் பிரதான சாலைகள் மற்றும் குற்றால அருவிக்கரை பகுதிகள் அனைத்திலும் வாகன நெருக்கடி ஏற்பட்டது. அதனை பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் ஒழுங்குபடுத்தினர்.
மேலும் குற்றாலத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, அவ்வப் போது சாரல் மழை யும் விட்டுவிட்டு பெய்து வருவதால் சீசன்களை கட்டி உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கும் விற்பனை சூடு பிடித்து உள்ளது. தனியார் தங்கும் விடுதிகளும் நிரம்ப தொடங்கி உள்ளது.
- குற்றால அருவி கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் அமைந்துள்ள கடைகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
- லேசான வெயில் மற்றும் இதமான குளிர்ந்த காற்று வீசி வருவதால் குற்றாலத்தில் ரம்யமான சூழல் நிலவி வருகிறது.
தென்காசி:
குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றால அருவி கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் அமைந்துள்ள கடைகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
குற்றாலத்தில் உள்ள முக்கிய விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் விடுதி உரிமையாளர்கள் மற்றும் வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலையில் லேசான வெயில் மற்றும் இதமான குளிர்ந்த காற்று வீசி வருவதால் குற்றாலத்தில் ரம்யமான சூழல் நிலவி வருகிறது.
கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் குற்றால சாரல் திருவிழா எப்போது தொடங்கும் என சுற்றுலா பயணிகள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றால சாரல் திருவிழா ஆகஸ்ட் மாதத்தில் நடத்த இருப்பதாகவும், அதற்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாட்கள் நடைபெறும் குற்றால சாரல் திருவிழாவில் தமிழக கலை பண்பாட்டு கலைஞர்களின் கலை நிகழ்ச்சி ஆனது சாரல் திருவிழாவை மேலும் மெருகூட்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- இந்த ஆண்டு தாமதமாக பெய்த தென்மேற்கு பருவமழையால் குற்றால சீசனும் தாமதமாகவே தொடங்கி உள்ளது.
- நேற்று இரவு முதல் இன்று காலை வரை காற்றுடன் கூடிய சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். இந்த ஆண்டு தாமதமாக பெய்த தென்மேற்கு பருவமழையால் குற்றால சீசனும் தாமதமாகவே தொடங்கி உள்ளது.
குற்றாலத்தின் முக்கிய அருவிகளான மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து மழை குறைவால் தண்ணீர் படிப்படியாக குறைந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் ஓரளவு தண்ணீர் அருவிகளில் விழுந்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு முழுமையான சீசன் இல்லையே என்று சுற்றுலா பயணிகள் ஏக்கம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்ததால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியது.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை காற்றுடன் கூடிய சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அங்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் குற்றால சீசன் காலங்களில் பழங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு ரம்புட்டான், மங்குஸ்தான், ஸ்டார்ஸ் ப்ரூட்ஸ் பேரிக்காய், மலைசீதா, கிர்ணி, அன்னாசி பழம், பலாப்பழம் உள்ளிட்ட மலைவாச தலங்களில் கிடைக்கும் அரிய வகை பழங்கள் அதிக அளவில் வியாபாரிகளால் விற்பனை செய்யப்படுகிறது. அதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி ருசித்து மகிழ்கின்றனர்.
தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு திடீரென சாரல் மழை பெய்தது. நள்ளிரவில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகள், முக்கூடல் உள்ளிட்ட இடங்களிலும் சுமார் அரைமணி நேரம் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 5 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை குண்டாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 9.2 மில்லிமீட்டரும், கருப்பாநதி, அடவிநயினார் அணையில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
- நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
- ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்பட்டு வரும் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும்.
இந்த ஆண்டு தாமதமாக சீசன் தொடங்கினாலும், அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
நேற்று காலை முதல் குற்றாலம் பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்ததன் காரணமாக மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.
மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் ஒட்டிய பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இன்று காலையில் ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இதமான குளிர்ந்த காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருவதால் குற்றாலத்தில் ரம்மியமான காலநிலை நிலவி வருகிறது.
- வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகு நிறைந்ததாக காணப்படுகிறது.
- சீசன் முழுமையாக இல்லாததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து அரசுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.
தென்காசி:
தென்னிந்தியாவின் ஸ்பா என அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டி காணப்படும்.
குற்றாலத்தில் அமைந்துள்ள பிரதான அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தென்மேற்கு பருவமழை பொழியும் காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடங்கி அடர்ந்த வனப்பகுதியின் இடையே வரும் அருவி நீரானது வனப்பகுதியில் இருக்கும் மூலிகை செடிகள் மரங்களை கடந்து வருவதால் மூலிகை நிறைந்த குறிப்பாக பிணிகளை நீக்கும் மருத்துவ குணம் கொண்ட ஒரு பொருளாக குற்றால அருவிகள் பார்க்கப்பட்டு வருகிறது.
இதில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து ஆனந்த குளியல் போடுவர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகு நிறைந்ததாக காணப்படுகிறது.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழையானது இந்த ஆண்டு போதிய அளவில் பெய்யவில்லை. சீசன் தாமதமாக தொடங்கிய நிலையில் கடந்த 2 மாதங்களில் அவ்வப்போது மட்டும் மழை பெய்து கண்ணாமூச்சி காட்டுகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் போதிய நீரோட்டம் இன்றி பாறையாக காட்சியளிக்கிறது. இதனால் கடந்த ஆண்டு குற்றால அருவியில் குளித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது பல மடங்கு குறைந்தது.
குற்றாலத்தில் முழுமையாக சீசன் இல்லாததால் சீசனை எதிர்பார்த்து அமைக்கப்பட்டு இருந்த வியாபார நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், வாடகை வாகனங்கள் என சுற்றுலா துறையை நம்பியே லட்சக்கணக்கான பணம் முதலீடு செய்தவர்கள் பலரும் போதிய வருமானமின்றி புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மலைவாசல் தளங்களில் கிடைக்கும் பழ வகைகள் அனைத்தையும் சீசன் காலங்களில் குற்றாலம் வரும் பயணிகளின் கண் முன்னே காண்பித்து அவர்களை ருசிக்க வைக்க நினைத்த வியாபாரிகளின் நிலையும் பரிதாபமாக உள்ளது.
சீசன் முழுமையாக இல்லாததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து அரசுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.
- குற்றால அருவிகளில் தற்பொழுது பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
- சுரண்டை பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றால அருவிகளில் தற்பொழுது பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் தொடர்ந்து சீரான அளவில் தண்ணீர் கொட்டி வருவதால் அங்கு குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மட்டுமின்றி தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்ததன் காரணமாக தென்காசி, குற்றாலம், பாவூர்சத்திரம், சுரண்டை பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும் குற்றால அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்டுவதால் அதில் குளிப்பதற்காக கடந்த நாட்களை விட இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்பட்டது.
- கடந்த சில நாட்களாகவே அருவிகளில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
- சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலத்தில் முக்கிய அருவிகளாக விளங்கி வரும் பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் காலை முதல் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே அருவிகளில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் இன்றும், நாளையும் வார விடுமுறை நாட்கள் என்பதாலும், நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினம் என்பதாலும் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்காக இன்று காலை முதலே வெளியூர் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. மெயின் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
- தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், வேடநத்தம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சியின் பிடியில் இருந்த பகுதிகளில் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 67.60 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் 1 அடி உயர்ந்து 68.40 அடியானது. இதேபோல் நேற்று 82.41 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 83.07 அடியானது. அணைகளுக்கு வினாடிக்கு 826 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 45.05 அடியாக உள்ளது. இந்த அணை பகுதியில் நேற்று 6.40 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 8 மில்லிமீட்டரும், ஊத்து மற்றும் காக்காச்சியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது. புறநகர் பகுதியில் நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மூலக்கரைப்பட்டியில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாநகர பகுதியில் லேசான சாரல் பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் அடவிநயினார் அணை பகுதியிலும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. அதிகபட்சமாக குண்டாறில் 2.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
குற்றாலம் ஐந்தருவியில் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மற்ற அருவிகளிலும் அதிக அளவில் தண்ணீர் விழுந்தது. இந்நிலையில் இன்று காலை ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், வேடநத்தம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரத்தில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. அங்கு 23 மில்லிமீட்டர் மழை பெய்தது. வேடநத்தம், வைப்பார், எட்டயபுரத்தில் 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.
- பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு உள்ளனர்.
தென்காசி:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பாபநாசம் அணைப்பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை பெய்தது. கண்ணடியன் கால்வாய் பகுதியில் 3.20 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 3.80 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் 70 அடியும், சேர்வலாறு அணையில் 82 அடியும் நீர் இருப்பு உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 722 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 45.35 அடியாக உள்ளது. இதே போல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அம்பை, வி.கே.புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சேரன்மகாதேவியிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. மாஞ்சோலை எஸ்டேட் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.
நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் 19 மில்லி மீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 15 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலையில் இருந்தே வெயில் அடிக்கவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் லேசான சாரல் பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இன்றும் காலையில் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. ஏற்கனவே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு திரண்டு உள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த 4 நாட்களுக்கு முன்பு 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பிய நிலையில் தொடர்ந்து அந்த பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது . இன்று காலை நிலவரப்படி அந்த அணை பகுதியில் 11.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 152 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 98 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் என்னும் ஓரிரு நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டத்தை பொறுத்தவரை தென்காசியில் 11 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கருப்பாநதி உள்ளிட்ட பகுதிகளில் 2.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்றும் காலை முதலே ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி பகுதிகளில் லேசான சாரல் பெய்த நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.