என் மலர்
நீங்கள் தேடியது "Cricket World Cup"
- அக்டோபர் 14-ந் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அகமதாபாத்:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அக்டோபர் 14-ந் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர், அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வைராலாகியது. இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களை குறிவைத்து முறையற்ற வகையில் ரசிகர்கள் நடந்து கொண்டதாக ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியதாவது:-
பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையில் நிலவும் தாமதம், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கொள்கை இல்லாதது குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் ஐசிசி-யிடம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். மேலும், கடந்த 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி வீரர்களை டார்கெட் செய்து மைதானத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்தும் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
- பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி நீக்கப்பட்டு, வாசிம் ஜூனியர் சேர்க்கப்பட்டுள்ளார்
- தென்ஆப்பிரிக்கா அணியில் டெம்பா பவுமா மீண்டும் இடம் பிடித்துள்ளார்
உலகக் கோப்பையில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
டாஸ் வென்ற பாபர் அசாம், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறோம். ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியம். அந்த வகையில் இந்த போட்டியை அணுகுவோம். அனைத்து துறைகளிலும் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியுள்ளது" என்றார்.
பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி நீக்கப்பட்டு, வாசிம் ஜூனியர் சேர்க்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியில் டெம்பா பவுமா இணைந்துள்ளார்.
- பாபர் ஆசம் தலைமையலான பாகிஸ்தான்-சகீப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
- பாகிஸ்தான் அணி தோல்விப் பாதையில் இருந்து மீண்டு வங்காளதேசத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றோடு ஒவ்வொரு அணியும் தலா 6 ஆட்டங்களில் விளையாடி விடும். புனேயில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
31-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் பாபர் ஆசம் தலைமையலான பாகிஸ்தான்-சகீப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தான் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் (நெதர்லாந்து, இலங்கை) வெற்றி பெற்றது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 4 போட்டியில் (இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா) தோற்றது.
பாகிஸ்தான் அணி தோல்விப் பாதையில் இருந்து மீண்டு வங்காளதேசத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காளதேசம் 1 வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் மட்டுமே வங்காளதேசத்தை வீழ்த்தியது. பின்னர் 5 போட்டியில் தொடர்ச்சியாக தோற்றது.
பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் வங்காளதேசம் இருக்கிறது.
- நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று இங்கிலாந்திடம் தோற்றால் 8 புள்ளிகள் பெறும்.
- மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் வென்றாலும் அந்த அணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு மிக குறைவு.
10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் உலக கோப்பை போட்டி தொடரில் அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுவிட்டது. மற்ற 3 அணிகள் எவை என்பதில் போட்டி நிலவுகிறது.
தென்ஆப்பிரிக்கா 7 ஆட்டத்தில் 6 வெற்றி பெற்றுள்ளது. அந்த அணிக்கு இரண்டு ஆட்டங்கள் உள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அந்த அணி இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் மோத உள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் ரன் ரேட் (+2.290) நல்ல நிலையில் உள்ளது. ஒரு வேளை இரண்டு ஆட்டங்களிலும் தோற்றாலும் மற்ற போட்டிகளின் முடிவை பொறுத்து எந்த இடம் என்பது அமையும்.
ஆஸ்திரேலியா 6 ஆட் டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி யுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது. எஞ்சியுள்ள மூன்று போட்டியிலும் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெறும். 2 வெற்றி அல்லது ஒரு வெற்றி பெற்றால் மற்ற ஆட்டங்களின் முடிவை பார்க்க வேண்டும.
நியூசிலாந்து அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி மீதமுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம். ஒன்றில் தோற்றால் மற்ற அணிகள் முடிவை பார்த்து வாய்ப்பு அமையும்.
ஆப்கானிஸ்தான் 4 வெற்றி, 3 தோல்வி பெற்று உள்ளது. மீதமுள்ள 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று ரன் ரேட்டை நல்ல நிலைக்கு கொண்டு வருவது முக்கியம்.
பாகிஸ்தான் 6 புள்ளி களுடன் உள்ளது. எஞ்சி உள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெறும். ரன் ரேட்டிலும் நல்ல நிலைக்கு வர வேண்டும். நியூசி லாந்துக்கு எதிராக வெற்றி பெற்று இங்கிலாந்திடம் தோற்றால் 8 புள்ளிகள் பெறும். அப்போது மற்ற ஆட்டங்களின் முடிவு சாதகமாக இருக்க வேண்டும்.
தலா 4 புள்ளிகளுடன் உள்ள இலங்கை, நெதர்லாந்து அணிகளுக்கு ஏற குறைய வாய்ப்பு முடிந்துவிட்டது. எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் அரை இறுதி வாய்ப்பு கடினம். நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று உள்ளது. மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் வென்றாலும் அந்த அணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு மிக குறைவு.
வங்காளதேசம் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டது. அந்த அணி 7 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
- ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி, வெற்றி உத்வேகத்தை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கும்.
- சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடக்கும் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா தான் மோதிய 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளது. இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, கப்மன்கில், வீராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சமி, பும்ரா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். கடந்த போட்டியில் முகமது சிராஜும் சிறப்பாக செயல்பட்டார். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், ஜடேஜா உள்ளனர்.
ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி, வெற்றி உத்வேகத்தை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கும்.
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி 7 ஆட்டத்தில் 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அரை இறுதியை நெருங்கிவிட்ட தென் ஆப்பிரிக்கா நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அதை உறுதி செய்துவிடும். அந்த அணி பேட்டிங்கில் குயின்டான் டி காக், மார்க் ராம், வான்டெர்துசன், கிளாசன், டேவிட் மில்லர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதில் குயின் டான் டி காக் 545 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். பந்து வீச்சில் மார்கோ ஜேன்சன், ரபடா, மகராஜ், கோட்சி ஆகியோர் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நெதர்லாந்திடம் மட்டும் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மற்ற ஆட்டங்களில் அந்த அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.
சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ரசிகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான வேண்டுதல்கள், வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
- உலககோப்பை மாதிரியை 11 பேர் கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இணைந்து 11மணி நேரம் உழைத்து தயாரித்து உள்ளனர்.
திருச்சி:
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா வெற்றி பெற கிரிக்கெட் ரசிகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான வேண்டுதல்கள், வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
திருச்சியில் ரசிகர்கள் சற்று வித்தியாசமாக 15 அடி பிரம்மாண்டமான கிரிக்கெட் உலகக்கோப்பை மாதிரி செய்து காட்சிக்கு வைத்துள்ளனர். அத்துடன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து 'ஆல் தி பெஸ்ட் இந்தியா' என்ற வாசகத்துடன் கூடிய பேனரும் வைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி மேலப்புலிவார்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதை நிறுவி உள்ளனர். இந்த உலககோப்பை மாதிரியை 11 பேர் கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இணைந்து 11மணி நேரம் உழைத்து தயாரித்து உள்ளனர்.
லட்சுமி நரசிம்மன் தலைமையிலான இந்தக் குழுவினர் பிரம்மாண்டமான உலகக் கோப்பை வைத்து வாழ்த்து தெரிவிப்பது இத்துடன் 3 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோப்பை திருச்சி, மேலப்புலிவார்டு ரோடு இப்ராஹிம் பூங்கா எதிர்வரிசையில் ஒரு வணிக வளாகத்தின் முன்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பலரும் இதை ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
ஏற்கனவே திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் இந்தியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கோப்பையையொட்டி 60 ஆண்டு காலம் சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த பழங்கால நாணயங்களை கொண்டு உலகக்கோப்பையை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் கிரிக்கெட் உலக கோப்பையை வாழ்த்தும் வகையில் 1975-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை உள்ள இந்திய நாணயங்களை கொண்டு திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக செயலாளர் பத்ரி நாராயணனால் உருவாக்கப்பட்ட உலக கோப்பை மத்திய நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயங்களில் இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது இந்த நாணயங்களால் வடிவமைக்கப்பட்ட உலக கோப்பை அருகே கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
- உலக கோப்பையை இந்தியா வெல்லுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய்:
9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. போட்டிகள் துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கிறது.
வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். மொத்தம் 23 ஆட்டங்கள் நடக்கிறது.
இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசம்-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நாளை நியூசிலாந்துடன் மோதுகிறது. இப்போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது.
இந்திய அணி பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட் ரிக்ஸ், ஷபாலி வர்மா, ரிச்சாகோஷ், ஹேமலதா ஆகியோரும், பந்துவீச்சில் தீப்தி சர்மா, ஸ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்ட்ரகர், ரேணுகா சிங், ராதா யாதவ், ஆஷா சோபனா ஆகியோரும் உள்ளனர். இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
சோபி டிவைன் தலை மையிலான நியூசிலாந்து அணியில் அமெலியா கெர்,பேட்ஸ்,ஜார்ஜியா பிளிம்மர்,லியா தஹுஹு, ஜெசிகா கெர், ஈடன் கார்சன், மேடி கிரீன், பிரான் ஜோனாஸ், புரூக் ஹாலிடே, ரோஸ்மேரி மெய்ர் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.
இதுவரை இந்திய மகளிர் அணி எந்த உலக கோப்பையையும் வெல்லவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றது. இம்முறை உலக கோப்பையை இந்தியா வெல்லுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது.
50 ஓவர் உலகக்கோப்பையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 481 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன்னாக இருக்கிறது. மேலும், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 500 ரன்னை எட்டும் முதல் அணியாக இங்கிலாந்து இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் நாங்கள்தான் 500 ரன்களை எட்டிய முதல் அணி என்ற சாதனையை படைப்போம் என ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷாய் ஹோப் கூறுகையில் ‘‘500 ரன்களை எட்ட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. முயற்சி செய்தால் இந்த அரிய சாதனையை எங்களால் படைக்க இயலும். 500 ரன்களை எட்டிய முதல் அணி என்ற பெயர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மிகப்பெரிய பேட்டிங் ஆர்டரை வைத்திருக்கும் எங்களால் இந்த சாதனையை எட்ட முடியும்’’ என்றார்.

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பிராத்வைட் கூறுகையில் ‘‘இந்த சாதனையை உங்களால் எட்ட முடியுமா?, அதற்கான சாத்தியக்கூறுகள் உங்களிடம் உள்ளதா? என்று நீங்கள் கேட்டால், நிச்சயமாக இருக்கு என்பேன். எனினும், அதிகாரப்பூர்வமான ஆட்டங்களில் 10-ம் நிலை வீரர்கள் வரை சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்க வாய்ப்பில்லை. இதனால், எதார்த்தமான ஸ்கோர் குறித்து நாம் பேசுவது அவசியம்’’ என்றார்.
முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 179 ரன்னில் சுருண்டது, பின்னர் விளையாடிய நியூசிலாந்து 37.1 ஓவரில் 180 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், முகமது சமி, பும்ரா ஆகியோர் தலா நான்கு ஓவர்கள் மட்டுமே வீசினார்கள். இந்த அணியின் சுழற்பந்து வீச்சு குறித்து சில சந்தேகம் உள்ளது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்ட கேப்டன் விராட் கோலி முடிவு செய்ததார்.
இந்தியா 37.1 ஓவர்கள் வீசியது, இதில் சாஹல் (6), குல்தீப் யாதவ் (8.1) மற்றும் ஜடேஜா (7) ஆகியோர் 21.1 ஓவர்கள் வீசினர். அதேபோல் நேற்றைய வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் மூன்று பேரும் இணைந்து 29.3 ஓவர்கள் வீசினர். சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் சோதனைக்கு உள்ளாகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பான முறையில் பரிசோதித்துள்ளது.
ஆடும் லெவனில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்களா? அல்லது ஒரு சுழற்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர கேதர் ஜாதவ் ஆகியோருடன் இந்தியா களம் இறங்குமா? என்பது தென்ஆப்பிரிக்கா போட்டியின்போதுதான் தெரியவரும்.

அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 1 ரன் எடுத்த நிலையிலும், ரோகித் சர்மா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 47 ரன்னிலும், விஜய் சங்கர் 2 ரன்னிலும் வெளியேறினர்.
இதனால் 102 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

லோகேஷ் ராகுல் 99 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். எம்எஸ் டோனி 78 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 113 ரன்கள் குவித்து வெளியேறினார். இருவரின் சதத்தால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.
பின்னர் 360 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங் செய்து வருகிறது.
140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய மலிங்கா, திடீரென 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் மிகவும் மெதுவாக வீசுவார். இதனால் பேட்ஸ்மேன்கள் திணறிவிடுவார்கள். ஐபிஎல் கிரிக்கெட்டில் ‘ஸ்லோ பால்’கள்தான் முன்னணி பேட்ஸ்மேன்களை வெளியேற்றும். யார்க்கருக்குப் பிறகு இதுதான் மலிங்காவின் பிரம்மாஸ்திரமாகும்.
தற்போது உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியா தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் நேற்று இலங்கையை எதிர்கொண்டது. இதில் இலங்கை 239 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா 44.5 ஓவரில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்த பின்னர் லசித் மலிங்காவிடம் சென்று ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஸ்டாய்னிஸ் ‘ஸ்லோ பால்’ வீசுவது எப்படி என்று கேட்டார். தன்னுடைய மிகப்பெரிய பலமாக கருதப்படுவதின் ரகசியத்தை பற்றி கேட்கிறாரே? என்று நினைக்காமல் உடனடியாக அதுபற்றி கற்றுக் கொடுத்தார்.
மிகப்பெரிய தொடரில் மோதும் நிலையில் இப்படி கற்றுக் கொடுத்துள்ளீர்களே? என்று மலிங்காவிடம் கேட்கப்பட்டது. அதற்கு மலிங்கா கூறுகையில் ‘‘ஸ்டாய்னிஸ் என்னிடம் வந்து ‘ஸ்லோ பால்’ வீசுவது எப்படி என்று கேட்டார். ஷார்ட் பார்மட் போட்டியில் விதவிதமான பந்துகளை (variation) வீசுவது முக்கியமானது. எந்தவொரு வீரர் விரும்பினாலும், எல்லாவித டிப்ஸ்களையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு ‘ஸ்லோ பால்’கள் வீசுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்தேன். அவருடன் இதை பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி’’ என்றார்.