என் மலர்
நீங்கள் தேடியது "Cricketers"
- தற்போதுள்ள 3+1 விதிகளின்படி அணியில் ஏற்கனவே உள்ள 3 வீரர்களையும் ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) மூலம் ஒருவரையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
- இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன.
ஐபிஎல் 2024 தொடர் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்காக இப்போதே ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, ஐபிஎல் 2025 தொடருக்கான ஆலோசனையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் அணிகளில் ரிடன்ஷன் விதிகளின்படி வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
தற்போதுள்ள 3+1 விதிகளின்படி அணியில் ஏற்கனவே உள்ள 3 வீரர்களையும் ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) மூலம் ஒருவரையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன. ரிடன்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது ஏலத்தை அர்த்தமற்றதாகிவிடும் என்று சில ஐபிஎல் மூத்த அதிகாரிகள் அபிப்பிராயப்படுகின்றனர்.

ஏலங்கள் ஐபிஎல் தொடர்களின் முக்கியமான அங்கம் என்றும் ஐபிஎல் போட்டிகளுக்கு இணையாக ஏலங்களும் தொடரை சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஐபிஎல் தொடருக்கு அழகு சேர்க்கும் ஏலங்கள், ரிடன்க்ஷன் எண்ணிக்கை 4 இல் இருந்து 6 முதல் 8 வரை அதிகரிக்கப்பட்டால் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்றும் இது ஐபிஎல் தொடருக்கு ஆரோக்கியமானதாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

விராட் கோலி உள்ளிட்ட சில முக்கிய வீரர்களே ஒரே அணியின் அடையாளமாக மாறியுள்ளனர். அவர்கள் இதுநாள் வரை ஒரே அணிக்கு விளையாடி வருகின்றனர். மற்றைய வீரர்களும் ஒரே அணியின் அடையாளமாக மாறினால் ஏலம் எடுக்கும் முறை தேவைப்படாது. ஆனால் பெரும்பான்மை வீரர்கள் ஒரே அணியுடன் தங்களை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்திக்கொள்ள இன்னும் வெகு காலம் ஆகும். அதுவரை ஏல முறை தொடரவே செய்யும். இதுவே ரிட்டன்க்ஷன் முறைக்கு தீர்வாக இருக்குமே தவிர ரிட்டன்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது பயனற்றது என்று கூறப்படுகிறது.
இதற்கு மாற்றுக்கருத்தாக, "ஐபிஎல் அணிகள் ஏலம் எடுத்த வீரர்கள் மீது அதிக அளவில் முதலீடு செய்கிறது, அவர்களுக்கு நேரத்தையும் பணத்தையும் செலவளித்து பயிற்சி தந்து தயார் படுத்துகிறது. இதனால் அந்த வீரர் அந்த அணியிலேயே தொடர்ந்து விளையாடுவதே நியாயமானதாக இருக்கும். இதற்கு ரிட்டன்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது மிகவும் பயனளிக்கும்" என்றும் சில மூத்த ஐபிஎல் அதிகாரிகளால் கூறப்படுகிறது.

அடுத்த ஐபிஎல் தொடர்பாக பிசிசிஐ சார்பில் அணி உரிமையாளர்களுடன் சமீபத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அது நிகழவில்லை. புதியதாக செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் இது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்களின் கருத்துக்களை பெற்ற பின் முடிவு செய்யப்படும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்து வீச்சாளராக இருந்தவர்.
- டி20 சேலஞ் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் மேட்ச் பிக்சிங் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
2015-16 ஆண்டு நடைபெற்ற டி20 சேலஞ் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்து வீச்சாளராக இருந்தவர்.
2016 மற்றும் 2017 க்கு இடையில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தென்னாப்பிரிக்க அணியால் தடை விதிக்கப்பட்ட 7 வீரர்களில் இந்த மூவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெஸ்டில் இந்த காலத்தில் ஒரே நாளில் 300 ரன்களுக்கு மேல் எடுக்கிறார்கள்.
- எனது காலத்தில் இவ்வாறு வேகமாக எடுக்க முடியாது.
புதுடெல்லி:
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 32 விக்கெட் வீழ்த்தி பிரமாதப்படுத்தினார். இதையும் சேர்த்து ஆஸ்திரேலியாவில் அவர் வீழ்த்திய விக்கெட் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலரான கபில்தேவின் (51 விக்கெட்) சாதனையை முறியடித்தார்.
இந்த நிலையில் இந்திய முன்னாள் கேப்டனான 66 வயதான கபில்தேவ், கிரிக்கெட்டில் யாரையும் ஒப்பிட்டு பேசுவது சரியானது அல்ல என்று கூறியுள்ளார்.
இது குறித்து கபில்தேவ் கூறியதாவது:-
தயவு செய்து கிரிக்கெட்டில் யாரையும் ஒப்பிடாதீர். ஒரு தலைமுறை வீரர்களை, மற்றொரு தலைமுறையினருடன் ஒப்பிடக்கூடாது. அது தேவையில்லாத ஒன்று. டெஸ்டில் இந்த காலத்தில் ஒரே நாளில் 300 ரன்களுக்கு மேல் எடுக்கிறார்கள். ஆனால் எனது காலத்தில் இவ்வாறு வேகமாக எடுக்க முடியாது. அதனால் தான் இருவேறு தலைமுறையினருடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் என்று சொல்கிறேன்.
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோரை நீக்கியது சரியான முடிவா? என்று கேட்கிறீர்கள். அது குறித்த நான் எப்படி கருத்து சொல்ல முடியும். இது தேர்வாளர்களின் வேலை. அதனால் நான் ஏதாவது சொன்னால் அது தேர்வாளர்களை குறைசொல்வதாகி விடும். அவர்களை விமர்சிக்க விரும்பவில்லை.
ரோகித் சர்மாவும், விராட் கோலியும் மிகப்பெரிய வீரர்கள். விளையாடுவதற்கு சரியான நேரம் எது, ஓய்வு பெற வேண்டிய தருணம் எது என்பது அவர்களுக்கு தெரியும்.
என்று அவர் கூறினார்.
- கடந்த 2021-ம் ஆண்டில் தலிபான்கள் பெண்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்தனர்.
- இதனால் தற்போது அவர்கள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
சிட்னி:
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கு பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்பட்டன. இதில் விளையாட்டும் அடங்கும். விளையாட்டை உயிர் மூச்சாகக் கருதிய வீராங்கனைகள் நாட்டை விட்டு வெளியேறினர்.
தற்போது அவர்கள் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஆப்கன் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலர் அங்குள்ள பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி வீராங்கனைகள் நேற்று பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் உரிமைகள் மறுக்கப்பட்ட லட்சக்கணக்கான பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக எங்கள் அணி இந்தப் போட்டியில் களம் காண்கிறது.
சொந்த நாட்டில் அனைத்தையும் இழந்த நாங்கள் இங்கு ஒன்று கூடியுள்ளது எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்த முயற்சியில் எங்களோடு துணை நிற்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்களுக்கு நன்றி. இது வெறும் அணி அல்ல. இது மாற்றத்தை முன்னோக்கியுள்ள ஒரு இயக்கம்.
இந்தப் போட்டி ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு முக்கியமானது. கல்வி, வேலை, விளையாட்டு என மறுக்கப்பட்ட பல்வேறு அடிப்படை உரிமைகள் அனைத்தும் கிடைப்பதற்கான தொடக்கப் புள்ளியாக இது இருக்கும். எங்களில் பலர் தலிபான் ஆட்சியாளர்களால் அச்சுறுத்தப்பட்டவர்கள்.
கடந்த 2021-ம் ஆண்டில் தலிபான்கள் வீடுகளில் புகுந்து எங்கள் ஜெர்சிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை எரித்தனர். இதையடுத்து, ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனையான மெல் ஜோன்ஸ் உதவியால் நாங்கள் அங்கிருந்து தப்பித்து பாகிஸ்தான் சென்று, அதன்பின் ஆஸ்திரேலியாவை அடைந்தோம் என நினைவு கூர்ந்தனர்.
ஆப்கானிஸ்தான் மகளிர் லெவன் அணி, கிரிக்கெட் வித் அவுட் பார்டர்ஸ் லெவன் அணியுடன் இன்று விளையாடி வருகிறது. இந்தப் போட்டிக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆதரவு அளித்துள்ளது.

இந்த தாக்குதலை பிரதமர் மோடி கடுமையாக கண்டித்துள்ளார். பயங்கரவாதிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும், அதற்கான பெரிய விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் மோடி எச்சரித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுப்பதற்காக பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர், டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘இப்போது பிரிவினைவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் அந்த பேச்சுவார்த்தை போர்க்களத்தில் இருக்க வேண்டும். பொறுத்தது போதும்’ என்று காம்பிர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் கூறுகையில், “நமது வீரர்கள் மீதான கொடூர தாக்குதலைக் கேட்டு கவலையும் வேதனையும் அடைந்தேன். நமது வீரர்கள் பலர் மரணம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.
இதேபோல் ஷிகர் தவான், மயாங்க் அகர்வால், முகமது கைப், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களும் கண்டனம் தெரிவித்து டுவிட் செய்துள்ளனர். #PulwamaAttack #GautamGambhir
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். இவர் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சீசனில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், இதர நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடையில்லா சான்று தர மறுப்பதாகவும், இதர நாடுகளில் சென்று விளையாட அனுமதி வேண்டியும் ஸ்ரீசாந்த் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வரும் ஜூலை மாதத்துக்குள் டெல்லி போலீசாரால் தொடரப்பட்ட கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCasksHC #Sreesanth