என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSKvMI"

    • ஐதராபாத் அணி 44 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.
    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய ஐ.பி.எல். தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இவற்றில் பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. நேற்றைய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளும் 200-க்கும் அதிக ரன்களை அடித்தன. எனினும், ஐதராபாத் அணி 44 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.

    இதைத் தொடர்ந்து சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டி, நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி.

    இதன் காரணமாக நேற்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. எனினும், சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வெற்றி மூலம் கடந்த 13 ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் சென்னை - மும்பை அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி தான் வெற்றி பெற்று வருகிறது.

    முன்னதாக 2012-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை - மும்பை அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தது. அதன்பிறகு நடைபெற்ற அனைத்து ஐ.பி.எல். தொடர்களில் இரு அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி மட்டுமே வெற்றி பெற்று வருகிறது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
    • சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.

    சென்னை:

    ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கத்தில் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். தொடர்நது ரிக்கல்டன் 13 ரன்களில் வெளியேறினார். வில் ஜேக்ஸ் 11 ரன்களில் வெளியேறினார். பின்னர் சூர்யகுமார் யாதவ் , திலக் வர்மா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.

    சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும், திலக் வர்மா 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த வீரர்கள் சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 155 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் திரிபாதி 2 ரன்களில் அவுட் ஆனார். ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்களில் வெறியேறினார். சிவம் துபே 9 ரன்களும், தீபக் ஹூடா 3 ரன்களும், சாம் கர்ரன் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 17 ரன்களில் வெறியேறினார். ராசின் ரவீந்திரா 65 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.

    இறுதியில் சென்னை அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு இழந்து 158 ரன்கள் எடுத்தது.

    இதனால் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

    • சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கைள எடுத்தது.

    ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியுள்ளன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கியது. இதில், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கைள எடுத்தது.

    இதற்கிடையே, ஆட்டத்தின் தொடக்கத்தில் முதலாவதாக களமிறங்கிய ரோகித் சர்மா முதல் ஓவரின் 4வது பந்தில் டக் அவுட்டானார்.

    இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான வரலாற்று சாதனையை மும்பை வீரர் ரோகித் சர்மா சமன் செய்தார்.

    அதன்படி, மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் உடன் ரோகித் சர்மா மோசமான இடத்தை சமன் செய்துள்ளார்.

    • டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் ரன்கள் எடுத்தது.

    சென்னை:

    ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 4வது பந்தில் ரோகித் சர்மா டக் அவுட்டானார். ரியான் ரிக்கல்டன் 13 ரன்னும், வில் ஜாக்ஸ் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி 36 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

    4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ்-திலக் வர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி 51 ரன் சேர்த்தது. சூர்யகுமார் 29 ரன்னில் அவுட்டானார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். இருவரையும் நூர் அகமது அவுட்டாக்கினார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    கடைசி கட்டத்தில் தீபக் சஹர் 28 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.

    சென்னை அணி சார்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.
    • சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்பனை.

    ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியுள்ளன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.

    இதற்கிடையே, சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் பிளாக்கில் ரூ.10,000க்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    அதுவும், போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    ரூ.4,000 டிக்கெட் பிளாக்கில் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பிளாக்கில் டிக்கெட்டை விற்பனை செய்த நபரின் வீடியோ வெளியானதால் ரிசகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும், பிளாக்கில் டிக்கெட் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஐபிஎல் 2025 சீசனின் 3வது போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
    • முதலில் களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா டக் அவுட்டானார்.

    சென்னை:

    ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்குகிறது. முதல் ஓவரின் 4வது பந்தில் ரோகித் சர்மா டக் அவுட்டானார். ரியான் ரிக்கல்டன் 13 ரன்னும், வில் ஜாக்ஸ் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    மும்பை அணி 36 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

    4வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ்-திலக் வர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி வருகிறது.

    மும்பை அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

    • ஐ.பி.எல். 2025 சீசனின் 3-வது போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
    • இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்குகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

    ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், எம்.எஸ்.தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, நாதன் எல்லீஸ், கலீல் அகமது

    இம்பேக்ட் பிளேயர்ஸ்:

    ராகுல் திரிபாதி, கம்லேஷ் நாகர்கோடி, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன்,ஷேக் ரஷீத்

    மும்பை இந்தியன்ஸ் அணி:-

    ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், சத்யநாராயண ராஜு

    இம்பேக்ட் பிளேயர்ஸ்:

    விக்னேஷ் புத்தூர், அஷ்வனி குமார், ராஜ் பாவா, கார்பின் பாஸ்ச், கர்ம் சர்மா

    • இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • 43 வயதான தோனி, 2025 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் ஆவார்.

    பத்து அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 3-வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடும் சி.எஸ்.கே. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வகையில் தோனி எந்த வரிசையில் ஆடுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் பேசிய எம்.எஸ். தோனி, "சென்னை அணிக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் என்னால் விளையாட முடியும். அது என்னுடைய அணி உரிமை. நான் காயமடைந்து சக்கர நாற்காலியில் இருந்தாலும், என்னை சி.எஸ்.கே. அணிக்காக விளையாட இழுத்துச் செல்வார்கள்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    43 வயதான தோனி, 2025 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய முதல் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின். இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதோடு, தற்போது புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது.

    இந்த நிலையில், இன்று ஐ.பி.எல். தொடரில் இரு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதனிடையே போட்டியை ஒட்டி இரு அணிகள் வீரர்களும் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, களத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா எம்.எஸ். தோனியை கட்டியணைத்து அன்பை பொழிந்தார். மேலும், அவரின் கைகளை தொட்டுப் பார்த்து உரையாடிக் கொண்டிருந்தார்.

    மைதானத்தில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் எம்.எஸ். தோனி கட்டியணைத்துக் கொண்டு, உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இன்றிரவு நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த சீசனில் மெதுவான பந்து வீச்சால் அவருக்கு ஒரு ஆட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையால் அவர் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் விளையாட முடியவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை சூர்யகுமார் யாதவ் வழி நடத்துகிறார்.



    • ஐ.பி.எல். 2025 தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
    • சென்னை அணியில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக தக்கவைக்கப்பட்டுள்ளார்.

    பத்து அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    இந்த நிலையில், இன்று ( ஞாயிற்றுக்கிழமை) 2 போட்டிகள் நடைபெற உள்ளன. ஐதராபாத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 2-வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடும் சி.எஸ்.கே. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வகையில் தோனி எந்த வரிசையில் ஆடுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் வழக்கமான கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளையாட முடியாததால் சூர்யகுமார் யாதவ் அணியை வழி நடத்துகிறார். இரு அணிகளுமே ஐ.பி.எல்.கோப்பையை 5 முறை வென்றுள்ளன. இதனால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்-இல் சிறந்த அணிகளில் ஒன்றாகும்.
    • சென்னை அணியை தோற்கடிக்கும் அணி தலைப்புச் செய்திகளில் இடம்பெறும்.

    ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடைபெறுகின்றன. இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தயாராகி வருகின்றன. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், CSK vs MI போட்டியானது ஐபிஎல்-இல் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியை போன்றது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹர்பஜன் சிங், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்-இல் சிறந்த அணிகளில் ஒன்றாகும். சென்னை அணியை தோற்கடிக்கும் அணி தலைப்புச் செய்திகளில் இடம்பெறும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் அது பொருந்தும்.

    ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் பல இளம் வீரர்கள் வருகிறார்கள். ரன்கள் அடிக்கிறார்கள், விக்கெட்டுகளை எடுக்கிறார்கள். ஆனால் என்னுடைய பார்வை எல்லாம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ரியான் பராக் மேல் தான் உள்ளது. அவரிடம் அற்புதமான திறமை உள்ளது" என்று தெரிவித்தார். 

    • சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் போட்டி ஞாயிறு இரவு நடைபெறுகிறது.
    • இன்று இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர்.

    ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடைபெறுகின்றன. இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தயாராகி வருகின்றன. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    தீவிர வலைப் பயிற்சிக்கு இந்தியா ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டன் ரோகித் சர்மா, தீவிர வலைப்பயிற்சிக்குப் பின், அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார். மேலும் அவர்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

    ×