என் மலர்
நீங்கள் தேடியது "CSKvRCB"
- நாங்கள் பாசிடிவ் பிராண்ட் கிரிக்கெட்டை ஆடி வருகிறோம்.
- சேப்பாக்கத்தில் விளையாடுவதால் எங்களுக்கு எந்த சாதகமும் இல்லை.
ஐ.பி.எல். 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்.சி.பி. அணி வீழ்த்தியுள்ளது.
இந்நிலையில், போட்டிக்கு பின்பு சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது மற்ற அணிகள் பெரிய ஸ்கோரை அடிக்கும்போது சிஎஸ்கே அணி பேட்டிங்கில் குறைவான ரன்களை அடிக்கும் முறை காலாவதியாகி விட்டதாக நீங்கள் நினைக்கவில்லையா? என்று செய்தியாளர் எழுப்பினார்.
இதற்கு கோபத்துடன் பதில் அளித்த பிளெமிங், "நீங்கள் ஃபயர்பவரைப் பற்றி பேசுகிறீர்கள். எங்களிடம் ஃபயர்பவர் முழுமையாக உள்ளது. இந்தக் கேள்வி எனக்குப் புரியவில்லை. தொடரின் முடிவில், யார் வெற்றி பெறுவார்கள் என்று பாருங்கள். நாங்கள் பாசிடிவ் பிராண்ட் கிரிக்கெட்டை ஆடி வருகிறோம். எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்.
நீங்கள் கேட்டது ஒருவிதத்தில் முட்டாள்தனமான கேள்வி. நாங்கள் பல ஆண்டுகளாக உங்களிடம் கூறிவருகிறோம். சேப்பாக்கத்தில் விளையாடுவதால் எங்களுக்கு எந்த சாதகமும் இல்லை. சேப்பாக்கத்தை விட வேறு மைதானங்களில் நாங்கள் பலமுறை வென்றுள்ளோம்
கடந்த 2 வருடங்களாக சேப்பாக்கம் மைதானத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.இது [பழைய] சேப்பாக்கம் மைதானம் இல்லை. பழைய சேப்பாக்கம் மைதானத்தில் 4 சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்கலாம். ஒவ்வொரு மைதானத்தின் தன்மை என்ன என்பதைப் புரிந்துகொள்ள நாங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது" என்று தெரிவித்தார்.
- சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இதனால் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.
சென்னை:
ஐ.பி.எல். 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 51 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், வெற்றிக்கு பிறகு ஆர்.சி.பி. கேப்டன் ரஜத் படிதார் கூறியதாவது:
முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
இந்த பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. எனவே, ஆரம்ப கட்டத்தில் எனது சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த முடியும் என்பதை மனதில் வைத்திருந்தேன்.
குறிப்பாக, லிவிங்ஸ்டோன் 4 ஓவர்கள் பந்து வீசிய விதம் நம்ப முடியாதது.
இந்தப் போட்டியைப் பற்றிப் பேசினால் இது ஒரு நல்ல ஸ்கோராக இருந்தது. ரசிகர்கள் அவர்கள் தங்கள் அணிகளை ஆதரிக்கும் விதம் காரணமாக சேப்பாக்கத்தில் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது.
நாங்கள் 200 ரன்களை இலக்காகக் கொண்டிருந்ததால் அது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். ஏனெனில் அதை துரத்துவது எளிதல்ல.
நான் இருக்கும்வரை ஒவ்வொரு பந்தையும் அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது தெளிவான குறிக்கோளாக இருந்தது என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 196 ரன்களைக் குவித்தது.
- அடுத்து இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 146 ரன்களை மட்டுமே எடுத்தது.
சென்னை:
ஐ.பி.எல். 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது. சி.எஸ்.கே. அணியில் பதிரனா, ஆர்.சி.பி. அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பிடித்தனர்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 32 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பில் சால்ட் 32 ரன்னும், விராட் கோலி 31 ரன்னும், தேவ்தத் படிக்கல் 27 ரன்னும், டிம் டேவிட் 22 ரன்னும் எடுத்தனர்.
சி.எஸ்.கே. சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும், கலீல் அகமது, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ஜடேஜா 25 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் எம்.எஸ்.தோனி 16 ரன்கள் எடுத்தார். அவர் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
ஆர்.சி.பி. சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லிவிங்ஸ்டோன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஆர்சிபி 196 ரன்கள் குவித்தது.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் அரை சதம் கடந்து 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பில் சால்ட் 32 ரன்னும், விராட் கோலி 31 ரன்னும் எடுத்தனர்.
சி.எஸ்.கே. சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும், கலீல் அகமது, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கி ஆடி அவ்ருகிறது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் சி.எஸ்.கே. மற்றும் ஆர்.சி.பி. அணிகள் இடையிலான போட்டியை நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி கண்டு களித்தார்.
- ரஜத் படிதார் அரைசதம் அடித்தார்.
- டிம் டேவிட் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார்.
ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் பதிரனா, ஆர்சிபி அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பிடித்தனர்.
தொடக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். விரட் கோலி நிதானமாக விளையாட பில் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தொடக்கத்தில் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
5-வது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் பில் சால்ட் ஆட்டமிழந்தார். எம்.எஸ். தோனி மின்னல் வேகத்தில் சால்ட்-ஐ ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். அப்போது ஆர்சிபி 5 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருந்தது. சால்ட் 16 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்கருடன் 32 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து தேவ்தத் படிக்கல் களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடி 14 பந்தில் தலா 2 பவுண்டரி, சிக்சருடன் 27 ரன் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு கோலி உடன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். ரஜத் படிதார் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். ரன்அவுட் மிஸ், கேட்ச் மிஸ் என படிதாருக்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுத்தனர்.
மறுமுனையில் விராட் கோலி 30 பந்தில் 31 ரன்கள் எடுத்து நூர் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 12.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.
ஏராளமான வாய்ப்புகள் பெற்ற ரஜத் படிதார் 32 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து பதிரனா பந்தில் ஆட்டமிழந்தார்.
ஜித்தேஷ் சர்மா 12 ரன்களும், லிவிங்ஸ்டன் 10 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் டிம் டேவிட் 3 சிக்சர்கள் விளாச இறுதியாக ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
சிஎஸ்கே அணியில் சார்பில் கலீல் அகமது 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 2 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். பதிரனா 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், நூர் அகமது 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே பேட்டிங் செய்து வருகிறது.
- சிஎஸ்கே அணியில் பதிரனா இடம் பெற்றுள்ளார்.
- ஆர்சிபி அணியில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆர்சிபி அணி விவரம்:-
விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவி, ஹேசில்வுட், யாஷ் தயால்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-
ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, சாம் கர்ரன், ஜடேஜா, எம்எஸ் டோனி, அஸ்வின், நூர் அகமது, பதிரனா, கலீல் அகமது.
- ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- 21-ல் சென்னையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு குறைந்தது 7-8 வெற்றி தேவையாகும்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
சென்னை அணி தனது முதலாவது லீக்கில் இதே மைதானத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது. இதில் மும்பையை 155 ரன்னில் கட்டுப்படுத்திய சென்னை அணியினர் அந்த இலக்கை 5 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தனர். சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவின் 4 விக்கெட் அறுவடையும், ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் அரைசதமும் வெற்றியை எளிதாக்கின. அதே உற்சாகத்துடன் களம் இறங்குவார்கள். விக்கெட் கீப்பர் டோனி முதலாவது ஆட்டத்தில் 2 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவர் பேட்டை சுழற்றுவதை பார்க்க ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழல் ஜாலம் தூக்கலாகவே இருக்கும். அதனால் நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோரது பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஊதித்தள்ளியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட்டும், விராட் கோலியும் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா (3 விக்கெட்), ஹேசில்வுட் (2 விக்கெட்) கலக்கினர். ஆனால் சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு உகந்தது என்பதால் நூர் அகமது, ஜடேஜா, அஸ்வின் ஆகியோரின் தாக்குதலை திறம்பட எதிர்கொள்வதை பொறுத்தே அவர்களின் ஸ்கோர் வேகம் அமையும். மும்பைக்கு எதிராக இவர்கள் 3 பேரும் கூட்டாக 12 ஓவர்களில் 70 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினர். அதனால் இந்த விஷயத்தில் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் அதிக விழிப்போடு இருப்பார்கள். குருணல் பாண்ட்யா, சுயாஷ் ஷர்மா ஆகியோருடன் மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளராக மொகித் ரதீயை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது. காயத்தால் முதல் ஆட்டத்தில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் உடல்தகுதியை பெற்றால் அது பெங்களூருவின் பந்து வீச்சை வலுப்படுத்தும்.
பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் நேநற்று நிருபர்களிடம் கூறுகையில், 'விராட் கோலி, சமீபத்தில் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக ஆடினார். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அதிக ரன் குவித்த இந்தியர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார். சுழற்பந்து வீச்சில் ஆடாமல் எப்படி அதிக ரன் எடுத்திருக்க முடியும். அவர் நல்ல நிலையில் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். இப்போது கூட தனது பேட்டிங் நுணுக்கத்தில் மேலும் ஒரு ஷாட்டை சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருவதை பார்த்தேன்.
அவர் தொடர்ந்து தனது ஆட்டத்திறனை மேம்படுத்த விரும்புகிறார். எப்போதும் போலவே சாதிக்கும் வேட்கையுடன் உள்ளார். உண்மையிலேயே அவர் சிறப்பு வாய்ந்த ஒரு வீரர்' என்று குறிப்பிட்டார்.
ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21-ல் சென்னையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. கடந்த சீசனில் சென்னை அணி பெங்களூருவில் நடந்த லீக்கில் 27 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் தோற்றதால் தான் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. அதற்கு பழிதீர்க்க இதைவிட சரியான சந்தர்ப்பம் கிடைக்காது.
மொத்தத்தில் இந்திய முன்னாள் கேப்டன்கள் டோனி, விராட் கோலி நேருக்கு நேர் கோதாவில் குதிப்பதால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. அதனால் மஞ்சள் படையின் ஆர்ப்பரிப்பும், விசில் சத்தமும் சென்னை வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
சென்னை: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஷிவம் துபே, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டோனி, ஆர்.அஸ்வின், நாதன் எலிஸ் அல்லது பதிரானா, நூர் அகமது, கலீல் அகமது.
பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), தேவ்தத் படிக்கல் அல்லது மொகித் ரதீ, லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, ராசிக் சலாம் அல்லது புவனேஷ்வர்குமார் அல்லது ஸ்வப்னில் சிங், ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ரசிகர்கள் ஐ.பி.எல். டிக்கெட்டை வைத்து ஸ்டேடியத்திற்கு செல்லவும், போட்டி முடிந்து அங்கிருந்து புறப்படுவதற்கும் மெட்ரோ ரெயில் மற்றும் மாநகர பஸ்களை இலவசமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்னை சூப்பர் கிங்ஸ்- ஆர்சிபி அணிகள் சென்னையில் வருகிற 22-ந்தேதி மோதுகின்றன.
- சென்னை போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு.
"ஐபிஎல் 2024 சீசன்" டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியதும் இரு அணி ரசிகர்களும் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் டிக்கெட் விற்பனைக்கான இணைய தளம் முடங்கியது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு பக்கம் முடங்கியதாக ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்த நிலையில், மறுபக்கம் விக்கெட்டுகள் உடனடியாக தீர்ந்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையில் Paytminsider இணைய தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டை புக் செய்வதற்கான இடமே காண்பிக்கப்படவில்லை.
24-ந்தேதி குஜராத்- மும்பை இந்தயின்ஸ், 27-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ், மார்ச் 23-ந்தேதி பஞ்சாப்- டெல்லி போட்டிக்கான ஸ்லாட்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது.
அதேபோல் சிஎஸ்கே இணைய தளமும் முடங்கியதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,700 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலை 7,500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஐ.பி.எல். டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டில் ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் விலை போகிறது.
- ரோகித் என்பவர் இந்த போலி இணையதளம் மூலம் 5 டிக்கெட்டுகளை பெற்று ரூ.8,250-யை இழந்துள்ளார்.
சென்னை:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது.
இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டன. டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 ஆகவும், அதிகபட்சமாக ரூ.7,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஆன்லைனில் டிக்கெட் வாங்க முடியாமல் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இணையதளம் முடங்கியதால் அவர்கள் டிக்கெட் இல்லாமல் தவித்தனர்.
இந்த நிலையில் போலியான இணைய தளத்தில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. போலி ஐ.பி.எல். டிக்கெட்டுகளால் ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.
மோசடியாளர்கள் ஐ.பி.எல். டிக்கெட்டுக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்தைபோலவே போலியான இணைய தளத்தை உருவாக்கி உள்ளனர். புதிய கணக்கை பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட்டுகளை முன்கூட்டியே வழங்குவது போல் போலியான அந்த தளம் வடிவமைத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த விலையை விட (ரூ.1,700) குறைவான விலையாக ரூ.1,650 விலையில் போலியான டிக்கெட்டுகள் பட்டியலிடப்பட்டு இருந்தன.
சென்னை-பெங்களூரு போட்டிக்காக 'ஏ' மேல் தளம் கேலரியில் போலி இணையதளம் டிக்கெட் வழங்கியது. அப்படி ஒரு கேலரியே அங்கு இல்லை. இந்த கேலரி இடிக்கப்பட்டு புதிதாக நவீனமயமாக்கப்பட்டு கே.எம்.கே. ஸ்டாண்டாக அமைக்கப்பட்டுள்ளது.
பதிவை முடித்த பிறகு குறிப்பிட்ட யு.பி.ஐ. ஐ.டி.யில் பணம் செலுத்தி பரிவர்த்தனை விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்கும் வழக்கத்தில் இருந்து வேறுபட்ட கட்டண செயல்முறையின் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது.
கியூஆர்.குறியீட்டு மின் டிக்கெட்டை உடனடியாக வழங்கும் முறையான இணைய தளம்போல் இல்லாமல் 12 மணி நேரத்துக்கு முன்பு மட்டுமே பதிவு செய்யப்பட்ட முகவரியில் டிக்கெட்டுகள் இமெயில் செய்யப்படும் என்று இந்த மோசடி இணையதளம் அறிவித்து இருந்தது.
ரோகித் என்பவர் இந்த போலி இணையதளம் மூலம் 5 டிக்கெட்டுகளை பெற்று ரூ.8,250-யை இழந்துள்ளார். தொலைபேசியில் வந்த தொடர்பை தொடர்ந்து அவர் ஏமாற்றப்பட்டுள்ளார். இறுதி பரிவர்த்தனை பக்கங்களை பார்த்த பிறகுதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
ஐ.பி.எல். டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டில் ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் விலை போகிறது.
இதனால் குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்கிறது என்று சிலர் போலி இணையதளம் மூலம் பணத்தை இழந்து ஏமாந்துள்ளனர்.
- IPL 2024 Records Virat Kohli Can Break During Royal Challengers Bengaluru vs Chennai Super Kings Clash
- அரைசதம் அடித்தால் 100 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆர்சிபி அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி களம் இறங்குகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்கான விளையாடவில்லை.
இந்த நிலையில் அவரது ரசிகர்கள், விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க இருக்கிறார்கள். இந்த நிலையில் விராட் கோலி இன்றைய போட்டியில் பல சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.
விராட் கோலி ஒட்டுமொத்தமாக டி20 போட்டியில் 11,994 ரன்கள் அடித்துள்ளார். இன்றைய போட்டியில் 6 ரன்கள் அடித்தால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
35 வயதான விராட் கோலி இன்றைய போட்டியில் அரைசதம் அடித்தால் 100 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார். கிறிஸ் கெய்ல் 110 முறை, டேவிட் வார்னர் 109 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
இன்றைய போட்டியில் 15 ரன்கள் அடித்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான 1,000 ரன்கள் அடித்த 2-வது வீரர் ஆவார். சிஎஸ்கே அணிக்கெதிராக விராட் கோலி 31 போட்டிகளில் விளையாடி 985 ரன்கள் அடித்துள்ளார்.
விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 237 போட்டிகளில் 222 இன்னிங்சில் 7,263 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 37.24 ஆகும். ஸ்டிரைக் ரேட் 130.02 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 113. ஏழு சதங்கள் விளாசியுள்ளார். 50 அரைசதங்கள் அடித்துள்ளார்.
- சிஎஸ்கே அணிக்கு முதன்முறையாக கேப்டனாக களம் இறங்குகிறார் ருதுராஜ் கெய்க்வாட்.
- சென்னை அணியில் சமீர் ரிஸ்வி அறிமுகம் ஆகியுள்ளார்.
ஐபிஎல் 2024 சீசன் தொடங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டிக்கான டாஸ் 7.40 மணிக்கு சுண்டப்பட்டது. ஆர்சிபி அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சமீர் ரிஸ்வி அறிமுகம் ஆகியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விவரம்:-
1. டு பிளிஸ்சிஸ், 2. விராட் கோலி, 3. ரஜத் படிதார், 4. மேக்ஸ்வெல், 5. கேமரூன் க்ரீன், 6. தினேஷ் கார்த்திக், 7. அனுஜ் ராவத், 8. கரண் சர்மா, 9 அல்சாரி ஜோசப், 10. மயங்க் தாகர், 11. முகமது சிராஜ்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-
1. ருதுராஜ் கெய்க்வாட், 2. ரச்சின் ரவீந்திரா, 3. ரகானே, 4. டேரில் மிட்செல், 5. ஜடேஜா, 6. சமீர் ரிஸ்வி, 7. எம்.எஸ். டோனி, 8. தீபக் சாஹர், 9. மஹீஷ் தீக்சனா, 10. முஸ்தாபிஜுர் ரஹ்மான், 11. துஷார் தேஷ்பாண்டே.
- முஸ்டாபிஜுர் ரஹ்மான் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- மேக்ஸ்வெல் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.
ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டு பிளிஸ்சிஸ், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
விராட் கோலி நிதானமாக விளையாட டு பிளிஸ்சிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டு பிளிஸ்சிஸ் முதல் ஓவரில் ஒரு பவுண்டரியும், 2-வது பந்தில் 2 பவுண்டரியும் அடித்தார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில் டு பிளிஸ்சிஸ் 4 பவுண்டரிகள் அடித்தார். இதனால் ஆர்சிபி 3 ஓவரில் 33 ரன்கள் எடுத்தது.
இதனால் 4-வது ஓவரிலேயே சிஎஸ்கே சுழற்பந்து வீச்சை அறிமுகம் செய்தது. தீக்சனா 4-வது ஓவரில் 4 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
5-வது ஓவரை முஸ்டாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டு பிளிஸ்சிஸ் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதே ஓவரில் ரஜ் படிதாரை டக்அவுட்டில் வெளியேற்றினார்.
அடுத்த ஓவரில் தீபக் சாஹர் மேக்ஸ்வெல்லை முதல் பந்திலேயே வெளியேற்றினார். இதனால் ஆர்சிபி 6 ஓவரில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 3 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கிடையே விராட் கோலி 8 பந்தில் 6 ரன் எடுத்து டி20 கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார்.
ஆர்சிபி 9 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.