search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSKvRCB"

    • முஸ்டாபிஜுர் ரஹ்மான் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • மேக்ஸ்வெல் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.

    ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டு பிளிஸ்சிஸ், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    விராட் கோலி நிதானமாக விளையாட டு பிளிஸ்சிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டு பிளிஸ்சிஸ் முதல் ஓவரில் ஒரு பவுண்டரியும், 2-வது பந்தில் 2 பவுண்டரியும் அடித்தார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில் டு பிளிஸ்சிஸ் 4 பவுண்டரிகள் அடித்தார். இதனால் ஆர்சிபி 3 ஓவரில் 33 ரன்கள் எடுத்தது.

    இதனால் 4-வது ஓவரிலேயே சிஎஸ்கே சுழற்பந்து வீச்சை அறிமுகம் செய்தது. தீக்சனா 4-வது ஓவரில் 4 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    5-வது ஓவரை முஸ்டாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டு பிளிஸ்சிஸ் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதே ஓவரில் ரஜ் படிதாரை டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    அடுத்த ஓவரில் தீபக் சாஹர் மேக்ஸ்வெல்லை முதல் பந்திலேயே வெளியேற்றினார். இதனால் ஆர்சிபி 6 ஓவரில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 3 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கிடையே விராட் கோலி 8 பந்தில் 6 ரன் எடுத்து டி20 கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார்.

    ஆர்சிபி 9 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.

    • சிஎஸ்கே அணிக்கு முதன்முறையாக கேப்டனாக களம் இறங்குகிறார் ருதுராஜ் கெய்க்வாட்.
    • சென்னை அணியில் சமீர் ரிஸ்வி அறிமுகம் ஆகியுள்ளார்.

    ஐபிஎல் 2024 சீசன் தொடங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டிக்கான டாஸ் 7.40 மணிக்கு சுண்டப்பட்டது. ஆர்சிபி அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சமீர் ரிஸ்வி அறிமுகம் ஆகியுள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விவரம்:-

    1. டு பிளிஸ்சிஸ், 2. விராட் கோலி, 3. ரஜத் படிதார், 4. மேக்ஸ்வெல், 5. கேமரூன் க்ரீன், 6. தினேஷ் கார்த்திக், 7. அனுஜ் ராவத், 8. கரண் சர்மா, 9 அல்சாரி ஜோசப், 10. மயங்க் தாகர், 11. முகமது சிராஜ்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-

    1. ருதுராஜ் கெய்க்வாட், 2. ரச்சின் ரவீந்திரா, 3. ரகானே, 4. டேரில் மிட்செல், 5. ஜடேஜா, 6. சமீர் ரிஸ்வி, 7. எம்.எஸ். டோனி, 8. தீபக் சாஹர், 9. மஹீஷ் தீக்சனா, 10. முஸ்தாபிஜுர் ரஹ்மான், 11. துஷார் தேஷ்பாண்டே.

    • IPL 2024 Records Virat Kohli Can Break During Royal Challengers Bengaluru vs Chennai Super Kings Clash
    • அரைசதம் அடித்தால் 100 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆர்சிபி அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி களம் இறங்குகிறார்.

    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்கான விளையாடவில்லை.

    இந்த நிலையில் அவரது ரசிகர்கள், விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க இருக்கிறார்கள். இந்த நிலையில் விராட் கோலி இன்றைய போட்டியில் பல சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.

    விராட் கோலி ஒட்டுமொத்தமாக டி20 போட்டியில் 11,994 ரன்கள் அடித்துள்ளார். இன்றைய போட்டியில் 6 ரன்கள் அடித்தால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

    35 வயதான விராட் கோலி இன்றைய போட்டியில் அரைசதம் அடித்தால் 100 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார். கிறிஸ் கெய்ல் 110 முறை, டேவிட் வார்னர் 109 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

    இன்றைய போட்டியில் 15 ரன்கள் அடித்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான 1,000 ரன்கள் அடித்த 2-வது வீரர் ஆவார். சிஎஸ்கே அணிக்கெதிராக விராட் கோலி 31 போட்டிகளில் விளையாடி 985 ரன்கள் அடித்துள்ளார்.

    விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 237 போட்டிகளில் 222 இன்னிங்சில் 7,263 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 37.24 ஆகும். ஸ்டிரைக் ரேட் 130.02 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 113. ஏழு சதங்கள் விளாசியுள்ளார். 50 அரைசதங்கள் அடித்துள்ளார்.

    • ஐ.பி.எல். டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டில் ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் விலை போகிறது.
    • ரோகித் என்பவர் இந்த போலி இணையதளம் மூலம் 5 டிக்கெட்டுகளை பெற்று ரூ.8,250-யை இழந்துள்ளார்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது.

    இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டன. டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 ஆகவும், அதிகபட்சமாக ரூ.7,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    ஆன்லைனில் டிக்கெட் வாங்க முடியாமல் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இணையதளம் முடங்கியதால் அவர்கள் டிக்கெட் இல்லாமல் தவித்தனர்.

    இந்த நிலையில் போலியான இணைய தளத்தில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. போலி ஐ.பி.எல். டிக்கெட்டுகளால் ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மோசடியாளர்கள் ஐ.பி.எல். டிக்கெட்டுக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்தைபோலவே போலியான இணைய தளத்தை உருவாக்கி உள்ளனர். புதிய கணக்கை பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட்டுகளை முன்கூட்டியே வழங்குவது போல் போலியான அந்த தளம் வடிவமைத்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த விலையை விட (ரூ.1,700) குறைவான விலையாக ரூ.1,650 விலையில் போலியான டிக்கெட்டுகள் பட்டியலிடப்பட்டு இருந்தன.

    சென்னை-பெங்களூரு போட்டிக்காக 'ஏ' மேல் தளம் கேலரியில் போலி இணையதளம் டிக்கெட் வழங்கியது. அப்படி ஒரு கேலரியே அங்கு இல்லை. இந்த கேலரி இடிக்கப்பட்டு புதிதாக நவீனமயமாக்கப்பட்டு கே.எம்.கே. ஸ்டாண்டாக அமைக்கப்பட்டுள்ளது.

    பதிவை முடித்த பிறகு குறிப்பிட்ட யு.பி.ஐ. ஐ.டி.யில் பணம் செலுத்தி பரிவர்த்தனை விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்கும் வழக்கத்தில் இருந்து வேறுபட்ட கட்டண செயல்முறையின் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது.

    கியூஆர்.குறியீட்டு மின் டிக்கெட்டை உடனடியாக வழங்கும் முறையான இணைய தளம்போல் இல்லாமல் 12 மணி நேரத்துக்கு முன்பு மட்டுமே பதிவு செய்யப்பட்ட முகவரியில் டிக்கெட்டுகள் இமெயில் செய்யப்படும் என்று இந்த மோசடி இணையதளம் அறிவித்து இருந்தது.

    ரோகித் என்பவர் இந்த போலி இணையதளம் மூலம் 5 டிக்கெட்டுகளை பெற்று ரூ.8,250-யை இழந்துள்ளார். தொலைபேசியில் வந்த தொடர்பை தொடர்ந்து அவர் ஏமாற்றப்பட்டுள்ளார். இறுதி பரிவர்த்தனை பக்கங்களை பார்த்த பிறகுதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

    ஐ.பி.எல். டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டில் ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் விலை போகிறது.

    இதனால் குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்கிறது என்று சிலர் போலி இணையதளம் மூலம் பணத்தை இழந்து ஏமாந்துள்ளனர்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ்- ஆர்சிபி அணிகள் சென்னையில் வருகிற 22-ந்தேதி மோதுகின்றன.
    • சென்னை போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு.

    "ஐபிஎல் 2024 சீசன்" டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியதும் இரு அணி ரசிகர்களும் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் டிக்கெட் விற்பனைக்கான இணைய தளம் முடங்கியது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஒரு பக்கம் முடங்கியதாக ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்த நிலையில், மறுபக்கம் விக்கெட்டுகள் உடனடியாக தீர்ந்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

    இதற்கிடையில் Paytminsider இணைய தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டை புக் செய்வதற்கான இடமே காண்பிக்கப்படவில்லை.

    24-ந்தேதி குஜராத்- மும்பை இந்தயின்ஸ், 27-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ், மார்ச் 23-ந்தேதி பஞ்சாப்- டெல்லி போட்டிக்கான ஸ்லாட்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது.

    அதேபோல் சிஎஸ்கே இணைய தளமும் முடங்கியதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

    குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,700 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலை 7,500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் 2019-க்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 23-ந்தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #IPL2019
    ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 2019 சீசன் மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடப்படும். போட்டிகள் அனைத்தும் இந்தியாவில்தான் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.



    இந்நிலையில் முதல் இரண்டு வாரத்திற்கான போட்டி அட்டவணை இன்று மதியம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் முதல் போட்டி மார்ச் 23-ந்தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    ×