என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cummins"

    • முதல் இன்னிங்சில் 270 ரன்கள் என்ற திட்டத்துடன் விளையாட முடியாது.
    • மும்பை அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் பவுண்டரி, சிக்சர்கள் கிடைத்தன- கம்மின்ஸ்

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக 277 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 246 ரன்கள் அடித்தது. இதனால் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டி முடிந்த பிறகு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    இது பைத்தியக்காரத்தனமாக இருந்தது. இல்லையா என்ன? என கேட்டுக்கொண்டார். நாங்கள் பந்து வீசி முடிக்கும் வரை, போட்டி மிகவும் நெருக்கமானதாகவே சென்னறது. மும்பை அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் பவுண்டரி, சிக்சர்கள் கிடைத்தது. பந்து மைதானத்தை சுற்றிக் கொண்டே இருந்தது. ஆனால் நாங்கள் இறுதியாக சிறப்பான வகையில் ஆட்டத்தை முடித்தோம்.

    அபிஷேக் சர்மா ஆட்டம் உண்மையிலேயே ஈர்க்கும் வகையில் இருந்தது. நீங்கள் ஐபிஎல் தொடரில் நெருக்கடியில் விளையாட வேண்டியிருக்கும். ஆனால், அவர் அதிகப்படியான சுதந்திரத்துடன் விளையாடுகிறார். முதல் இன்னிங்சில் 270 ரன்கள் என்ற திட்டத்துடன் விளையாட முடியாது. ஆனால், நாங்கள் நேர்மறையான, ஆக்ரோசமான ஆட்டத்துடன் போட்டியை எடுத்துச் செல்ல விரும்பினோம். சொந்த மைதானத்தில் சூழ்நிலை அற்புதமாக இருந்தது. நம்பமுடியாத வகையில் ரசிகர்களின் ஆரவாரம் இருந்தது.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

    தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    டாஸ் சுண்டப்படும்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ரன்கள் அடிக்கும் என்று உண்மையிலான நினைக்கவில்லை. ஆடுகளம் சிறப்பாக இருந்தது. 277 என்பது விசயம் அல்ல, நீங்கள் மோசமாக அல்லது நன்றாக பந்து வீசினாலும், எதிரணி பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவித்தால், அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள், அவ்வளவுதான். அவர்களின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 500 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட நிலையில், ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, பந்து வீசுவது மிகவும் கஷ்டம்.

    நாங்கள் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சில விசயங்கள் செய்திருக்கனும். நாங்கள் இளம் பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளோம். பாடம் கற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு ஹர்திப் பாண்ட்யா தெரிவித்தார்.

    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது.
    • சொந்த மண்ணில் சமாளிப்பது பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது. இன்றைய ஆட்டங்களில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 69-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்ட ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 15 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத் அணி புள்ளிபட்டியலில் 2-வது இடத்தை பிடிக்க குறிவைக்கும். இந்த சீசனில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்துள்ள அந்த அணியின் முந்தைய லீக் ஆட்டம் (குஜராத்துக்கு எதிரான) மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    அதிரடியில் அசத்தும் ஐதராபாத்

    முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (533 ரன்), அபிஷேக் ஷர்மா (401), ஹென்ரிச் கிளாசென் (339), நிதிஷ் குமார் ரெட்டி என அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள். பந்து வீச்சில் நடராஜன், கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பஞ்சாப் அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மாவும், பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார், நாதன் எலிஸ்சும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக பொறுப்பு கேப்டன் சாம் கர்ரன், பேர்ஸ்டோ ஆகியோர் நாடு திரும்பியதும், காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா விலகியதும் அந்த அணிக்கு பின்னடைவாகும்.

    தோள்பட்டை காயம் காரணமாக முதல் 5 ஆட்டத்துக்கு பிறகு ஒதுங்கிய ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை ஜிதேஷ் ஷர்மா வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்ட ஐதராபாத் அணி தனது ஆதிக்கத்தை தொடர முயற்சிக்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் தேட பஞ்சாப் தீவிரம் காட்டும். வலுவான ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் சமாளிப்பது பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் ஐதராபாத்தும், 7-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்ட ஐதராபாத் அணி 15 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பஞ்சாப் அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும்.

    17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 69-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்ட ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 15 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத் அணி புள்ளிபட்டியலில் 2-வது இடத்தை பிடிப்பதற்கு இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

    அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பஞ்சாப் அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும். இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை ஜிதேஷ் ஷர்மா வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் ஐதராபாத்தும், 7-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    • பிரிஸ்பேனில் நாங்கள் 450 ரன்கள் அடித்துள்ளோம்.
    • இந்தியாவை 260 ரன்னில் கட்டுப்படுத்தியுள்ளோம்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற பிங்க்-பால் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் பிரிஸ்பேனில் மோதின. ஆனால் பிரிஸ்பேனில் ஐந்து நாட்களும் விட்டுவிட்டு மழை பெய்ததால் பெரும்பாலான நேரம் வீணானது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

    ஒரு கட்டத்தில் இந்தியா பாலோ-ஆன் ஆகும் நிலை ஏற்பட்டது. பும்ரா- ஆகாஷ் தீப் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்து பாலோ-ஆன் ஆவதை தவிர்த்தது. இதனால் இந்தியாவை தொடர்ந்து பேட்டிங் செய்ய வைத்து நெருக்கடி கொடுக்க முடியாத நிலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டது.

    தோல்வியை சந்திக்க இருந்த இந்தியா போட்டியை டிரா செய்தது. போட்டி டிரா ஆன உத்வேகத்துடன் மெல்போர்னில் நடைபெற இருக்கும் 4-வது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்வோம் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

    இந்த நிலையில் பிரிஸ்பேன் போட்டி டிரா ஆனது எங்களுக்குதான் உத்வேகம் என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    உத்வேகம் (momentum) பற்றி நான் ஒருபோதும் பயந்தது கிடையாது என சொல்ல முடியாது. ஆனால் உண்மையிலேயே அது பற்றி கவலைப்பட மாட்டேன். இந்த வாரத்தில் இருந்து (பிரிஸ்பேன் டெஸ்ட்) நாங்கள் ஏராளமானவற்றை எடுத்துச் செல்ல முடியும் என நினைக்கிறேன்.

    பிரிஸ்பேன் டெஸ்டில் எங்களுக்கு இரண்டு சிறந்த பார்ட்னர்ஷிப் கிடைத்தது. புதிய ஆடுகளத்தில் 450 (445) ரன்கள் சேர்த்தோம். பின்னர் இந்தியாவை 250 (260) ரன்களில் கட்டுப்படுத்தினோம். கண்டிசன் பேட்டிங்கிற்கு சற்று கூடுதலாக ஒத்துழைப்பு கொடுத்தபோதிலும் இதைச் செய்தோம். இப்படி மெல்போர்னுக்கு எடுத்துச் செல்ல எங்களுக்கு ஏராளமான விசயங்கள் உள்ளது.

    அஸ்வின் எல்லா காலங்களிலும் சிறந்த வீரர்களில் ஒருவர்

    அஸ்வின் ஓய்வு அறிவித்த நேரம் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் உலகம் முழுவதும் ஒரு அற்புதமான வீரராக இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. அவர் அளவிற்கு நீண்ட காலத்திற்கு தலைசிறந்த ஸ்பின்னர் (finger spinners) அதிக அளவில் இருந்ததில்லை. அஸ்வின் அனைத்து காலங்களிலும் தலைசிறந்த வீரர்களில் ஒருவர்.

    அவர் சிறந்த போட்டியாளர். ஆஸ்திரேலியாவிலும், இந்தியாவிலும் அவருக்கு எதிராக நாங்கள் மிகப்பெரிய அளவில் மோதியுள்ளோம். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு எங்கள் வீரர்கள் அறையில் இருந்து மிகப்பெரிய மரியாதை.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    • ஆடுகளம் சற்று புற்கள் சூழ்ந்து காணப்படுகிறது.
    • ஆஃப் ஸ்பின்னர்கள் பந்தை கூடுதலாக திருப்ப முடியும் என நம்புகிறேன்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை காலை மெல்போர்ன் மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என முன்னிலை பெற்றுள்ள நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்த போட்டியின் வெற்றி மிக முக்கியமானது.

    இந்த நிலையில் மெல்போர்ன் ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது:-

    ஆடுகளத்தை பார்ப்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது. கடந்த சில வருடங்களாக எப்படி இருந்ததோ, அதோடு ஒத்துப்போகும் வகையில் தோன்றுகிறது. ஆடுகளத்தை சிறிது புற்கள் ஆக்கிரமித்துள்ளது. மிகவும் நல்ல மற்றும் உறுதியான ஆடுகளம் என உணர்கிறேன். இதனால் ஆடுகள பராமறிப்பாளர்கள் சிறப்பாக அமைத்துள்ளனர். கடந்த ஐந்து ஆறு வருடங்களாக எப்படி இருந்ததோ, அதேபோல்தான் இந்த வருடமும் இருக்கலாம்.

    மெல்போர்னில் 39 டிகிரி வெப்ப நிலையில் வீரர்கள் விளையாட வேண்டியிருக்கும். விக்கெட் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சம பேலன்ஸ் உள்ளதாக இருக்கும். நாதன் லயன் இங்கு சிறப்பாக பந்து வீசியுள்ளார். அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆஃப் ஸ்பின்னர்களுக்கு வலது பக்கத்தில் இடது பக்கமாக பந்து சற்று கூடுதலாக திரும்பினால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை" என்றார்.

    இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் களம் இறங்க வாய்ப்புள்ளது.

    இரண்டு போட்டிகள் கொண்ட பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் கம்மின்ஸ், ஹசில்வுட் இடம்பெறவில்லை. #PAKvAUS
    ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த பிறது தற்போது வரை டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருக்கிறது.

    அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. ஸ்மித், வார்னர் இல்லாததால் மாற்று வீரர்களை கொண்ட வலுவான அணியை அனுப்ப ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் முதுகு வலியில் இருந்து இன்னும் 100 சதவீதம் நிவாரணம் பெறவில்லை என்பதால் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் மிட்செல் ஸ்டார்க் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
    ×