என் மலர்
நீங்கள் தேடியது "CWC"
- ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.
- தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. ராகுல் காந்தியின் நடை பயணத்தின்போதும், அந்த கட்சியின் தலைவர் மல்லிகா அர்ஜூன கார்கேவும் பல உத்தரவாதங்களை அளித்துள்ளனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்திய கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகச் செயல்பட்டன.
- எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், கிராமப்புறங்களில் காங்கிரஸ் இடங்களை பிடித்தது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் "இந்திய கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகச் செயல்பட்டன. விடாமுயற்சி, உறுதியுடன் எந்த எதிரியையும் எங்களால் தோற்கடிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், கிராமப்புறங்களில் காங்கிரஸ் இடங்களை பிடித்தது. ஆனால் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்க உழைக்க வேண்டும். மக்களை தேர்தலில் காங்கிரசின் மீது நம்பிக்கை வைத்து சர்வாதிகார, அரசியலமைப்பு எதிர்ப்பு சக்திகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்" கார்கே தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. சசி தரூர், டி.கே. சிவக்குமார் உள்ளி்ட்ட தலைவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளனர்.
- காணொலி மூலம் சோனியா காந்தி தலைமை தாங்குகிறார்.
- கட்சித் தலைவர் தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை.
காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்த பரபரப்பான சூழலில் நாளை மாலை காங்கிரஸ் தேசிய காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்குகிறார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டிற்கு சென்றுள்ளார் என்ற விபரம் வெளியாகாத நிலையில், அங்கிருந்தபடி காணொலி மூலம் கூட்டத்திற்கு அவர் தலைமை வகிப்பார் என கூறப்படுகிறது. சோனியாகாந்தியுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் சென்றுள்ள நிலையில் அவர்களும் நாளைய கூட்டத்தில் காணொலி மூலம் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி மீது நம்பிக்கையை வெளிப்படுத்துவார்கள் என தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று அந்த கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் ராகுல் காந்தி உறுதியாக உள்ள நிலையில், நாளை நடைபெறும் தேசிய காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததால் கட்சி தலைமை கடும் அதிர்ச்சி அடைந்தது. தோல்விக்கான காரணம் குறித்து இன்று டெல்லியில் நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தில் ஆராயப்பட்டது. இந்த தோல்வி ராகுல் காந்தியின் தலைமைக்கு கிடைத்த தோல்வி என பலரும் கூறி வருகின்றனர். இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலக முன்வந்ததாகவும் தகவல் பரவியது. ஆனால், அதனை கட்சி மறுத்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்ரடி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அசோக் சவான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் பிரசாரம் என்பது கூட்டுப்பொறுப்பு. ராகுல் காந்தி கடுமையாக தேர்தல் பணி செய்தார். பிரசாரத்தை முன்னால் இருந்து வழிநடத்தினார். மாநில காங்கிரஸ் கமிட்டிகளில் உயர் பொறுப்பு வகிக்கும் தலைவர்கள் பதவி விலக வேண்டும். புதிய தலைமை பொறுப்பேற்க வேண்டும். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று நானும் எனது குழுவும்கூட பதவி விலக தயாராக இருக்கிறோம்.
கட்சிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அனைவரும் நம்பிக்கையுடன் களப்பணியாற்றினோம். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தொடர்பான அறிக்கையை கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அசோக் சவான் நான்டட் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரதாப் சிக்லிகரிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்த முறையும் படுதோல்வியடைந்தது. கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், இந்த முறை 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்க முடியவில்லை.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என்றும், கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை ராகுலுக்கு வழங்குவது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் ராகுல் காந்தியுடன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்த முறையும் படுதோல்வியடைந்தது. கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், இந்த முறை 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்க முடியவில்லை.

