என் மலர்
நீங்கள் தேடியது "cyber"
- ஏற்காடு மாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மகள் விஷ்ணுபிரியா. இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
- வடமன் தான் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கி மூலம் எங்களது பசுமாட்டை சுட்டு கொன்று விட்டார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம், ஏற்காடு மாரமங்கலம் கிரா மத்தை சேர்ந்த வரதராஜன் மகள் விஷ்ணுபிரியா. இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், மார மங்கலம் பகுதியில் வசிக்கும் வெங்கடாசலம் மகன் வடமன் (45), என்பவரது தோட்டத்தில், கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வடமன் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு எடுத்திருந்தது கண்டுபி டிக்கப்பட்டு, அவருக்கு ரூ.55,000 அபராதம் விதித்தனர்.
இந்த நிலையில், எனது தந்தைக்கும் வடமனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இதனால் மின்சார துறை அதிகாரிகளிடம் எனது தந்தை தான் இந்த விவரத்தை கூறியிருப்பார் எனக் கருதி, கடந்த 31-ந் தேதி, வடமன் தான் வைத்தி ருந்த கள்ளத் துப்பாக்கி மூலம் எங்களது பசுமாட்டை சுட்டு கொன்று விட்டார். அதனால் அவர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் அடிப்ப டையில் ஏற்காடு போலீசார், வடமன் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் பசு மாட்டை சுட்டு கொன்று விட்டு தலைமறைவாக உள்ள வடமனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனேடிய அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டனர்
- தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கை வெளியிடப்பட்டது
கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.
இதற்கிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாகக் கனடா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மாரிசன் குற்றம்சாட்டினார். இதை கண்டித்து மாரிசனுக்கு எதிராக இந்தியா சம்மன் அனுப்பியது.
மேலும் இந்திய அதிகாரிகளைக் கனடா அரசு உளவு பார்த்தாக மத்திய அரசு நேற்றைய தினம் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனேடிய அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கனடா, தங்களின் பாதுகாப்பாகவே அவர்கள் கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவை சைபர் எதிரியாகவும் கனடா அறிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கனடா தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கையில், தங்கள் நாட்டின் இணைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதிரி நாடுகளின் பட்டியலில், சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு ஐந்தாவது நாடாக இந்தியாவின் பெயரை சேர்த்துள்ளது. இந்த அறிக்கையானது கனேடிய இணைய பாதுகாப்பிற்கான தேசிய தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ளது.