என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cyber attacks"

    • இவர்கள் இருவரும் அரசு வீடு வேண்டும்என்று பண் ருட்டிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பதிவுசெய்திருந்தனர்.
    • பஞ்சாயத்து தலைவியின் கணவர் வேண்டுமென்றே எங்களுக்கு வீடு ஒதுக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார் என்று முறையிட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கீழ்மாம் பட்டுகிராமத்தை சேர்ந்தவர்ஜெயராமன். இவரது மனைவி வசந்தகுமாரி. ஊராட்சிமன்ற தலைவியாகஉள்ளார். இதே கிராமத்தை சேர்ந்தவர்சிகாமணி. இவரது மகன் ராஜசேகர். இவர்கள் இருவரும் அரசு வீடுவேண்டும்என்று பண் ருட்டிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பதிவுசெய்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு அரசு சார்பில் வீடுஒதுக்கப்பட வில்லை. இதனைஅறிந்து இவர்கள் ஊராட்சி ஒன் றிய அலுவலக மேனேஜரிடம்புகார் கூறினர்.

    பஞ்சாயத்து தலைவியின் கணவர் வேண்டுமென்றே எங்களுக்கு வீடு ஒதுக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார் என்று முறையிட்டனர். அப்போது அங்கு வந்தபெண் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தகுமாரியின் கணவர் ஜெயராமனை பார்த்ததும் ஆத்திரமடைந்து அவரை அசிங்கமாக திட்டி தாக்க முயன்றதாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததனர். இதுகுறித்து ஜெய ராமன் கொடுத்த புகாரின் பேரில்பண்ருட்டிபோலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்துசிகாமணி, ராஜசேகர் ஆகிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • தலையில் கொடுவாள் கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன் வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தெற்கு மேல்மாம்பட்டு செட்டி தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மஞ்சுளா(47) இவர்த னக்கு சொந்தமான இடத்தில் குடிநீர் பைப்பு போடும்போது அதே பகுதியை சேர்ந்த மணி வண்ணன், பாலமுருகன், வசந்தி ஆகியோர் எங்களுக்கு பங்கு உண்டு என்று கூறி குடிநீர் பைப் போடும் பணியை தடுத்து நிறுத்தி மஞ்சுளாவின் மகன் விக்னேசை அசிங்கமாக திட்டி தலையில் கொடுவாள் கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து காடாம்புலியூர் போலீசில் மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன் வழக்கு பதிவு செய்து மணிவண்ணன், பால முருகன், வசந்தி ஆகியோ ரை தேடி வருகின்றனர்.

    • சிதம்பரத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்தியதை தடுத்த அதிகாரிகளுக்கு மீனவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • மீன்வளத் துறை ஆய்வாளர் சதுருதீன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் மீனவர்கள் அனைவரும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது என அரசால் தெரிவிக்கப்பட்டதுஇந்த சுருக்குமடி வலை பயன்படுத்தாத வண்ணம் கடலூர் சிதம்பரம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர். சிதம்பரம் அருகே சாமியார் பேட்டை கடற்கரை பகுதியில் விசை ப்படகுகளில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மயிலாடுதுறையை சேர்ந்த 4 மீனவர்கள் மீன் பிடித்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற கடலூர் முதுநகர் மீன்வளத்துறை ஆய்வாளர் சதுருதின் தலைமையிலான குழுவினர் சந்தேகப்படும் படியாக மீன்பிடித்தது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் மீனவர்களிடம் சென்று சோதனை செய்தனர்.

    அந்த சோதனையில் இவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்தியது தெரிய வந்தது. ஆத்திரமடைந்த அக்கறைசேரி பகுதியைச் சேர்ந்த லோகு, பிரகாஷ், வினித் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த மணி ஆகிய4 பேரும் மீனவத் துறை ஆய்வாளர் சதுருதீனை தகாத வார்த்தையில் திட்டி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மீன்வளத் துறை ஆய்வாளர் சதுருதீன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் புது சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். 

    உலக கோப்பை கால்பந்து போட்டிகளின்போது ரஷியாவின் முக்கிய இணையதளங்களை குறிவைத்து 2.5 கோடி சைபர் தாக்குதல்கள் நடந்ததாக புதின் குறிப்பிட்டுள்ளார். #Russiatargeted #25millioncyberattacks #WorldCup #Putin
    மாஸ்கோ:

    அமெரிக்காவுக்கு நிகரான வல்லரசு நாடாக ஒருகாலத்தில் கருதப்பட்ட சோவியத் யூனியன் உடைந்த பின்னர் தனிநாடுகளாக சோவியத் யூனியன் அமைப்பு சிதறிப்போனது. குறிப்பாக, செர்னோபில் அணுஉலை விபத்துக்கு பின்னரும், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளாலும் ரஷியா நிதிசார்ந்த விவகாரங்களில் சிறிது தள்ளாட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

    இடையில், உக்ரைன் நாட்டை உடைத்து கிரிமியா என்னும் தனிநாடு உருவாக்கியது மற்றும் சிரியா விவகாரத்தில் அதிபருக்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் கருத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதுபோன்ற நடவடிக்கைகளால் ஐரோப்பிய நாடுகளின் தாக்குதலுக்கு ரஷியா உள்ளானது.

    இதற்கிடையில், ‘பிபா’ என்னும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை ரஷியா வெற்றிகரமாக நடத்தி காட்டியது. இன்று குரோஷியா - பிரான்ஸ் மோதும் இறுதிப்போட்டி நேற்று மாஸ்கோ நகரில் நடந்து முடிந்தது.



    இந்நிலையில், ரஷியா உள்நாட்டு பாதுகாப்பு உயரதிகாரிகள் கூட்டத்தில் நேற்று பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உலக கோப்பை கால்பந்து போட்டிகளுடன் தொடர்புடைய ரஷியாவின் சுமார் இரண்டரை கோடி இணையதளங்கள் ‘சைபர்’ தாக்குதல்களுக்கு இலக்கானதாகவும், அந்த தாக்குதல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

    இந்த தகவலை அதிபரின் கிரெம்ளின் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது. #Russiatargeted #25millioncyberattacks #WorldCup #Putin
    ×