என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cyber crimes"

    • மோசடி, தரவு திருட்டு, கணினி முடக்கம், ஆபாச அத்துமீறல் என இந்த குற்றங்களின் பட்டியல் நீளுகிறது.
    • அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    நவீன உலகில் தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் செல்கிறது.

    அடுத்தடுத்து வெளி வரும் புதிய கண்டுபிடிப்புகளும், தொழில் நுட்பங்களும் மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்கி வரமாக மாறினாலும், மறுபுறம் பல்வேறு தீமைகளை விளைவித்து சாபமாகவும் அமைந்து விடுகிறது.

    உலகம் முழுவதும் நாள்தோறும் பதிவாகும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையே இதற்கு சாட்சி.

    எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இணையம் மற்றும் டிஜிட்டல் கருவிகள் மூலம் மர்ம நபர்கள் பெரும் குற்ற செயலில் ஈடுபட்டு சேதங்களை விளைவிக்கின்றனர்.

    மோசடி, தரவு திருட்டு, கணினி முடக்கம், ஆபாச அத்துமீறல் என இந்த குற்றங்களின் பட்டியல் நீளுகிறது.

    இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் சுமார் 1 லட்சம் சைபர் குற்றங்கள் பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதில் பெரும்பாலும் அடுத்தவரின் பணப்பையை குறி வைத்து நடக்கும் நிதி மோசடிகளே பரவலாக நடந்து வருகின்றன. அந்தவகையில் இந்த குற்றங்கள் மூலம் ஒரே ஆண்டில் சுமார் ரூ.17 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு உள்ளது.

    விசாரணை அமைப்புகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் இந்த சைபர் கிரைம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

    அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக்கணக்குகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். குறிப்பாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மையம் (14சி) அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அதன்படி, ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்படும் பணத்தை கையாளுவதற்கு என பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் லட்சக்கணக்கான கணக்குகளை இந்த மோசடிதாரர்கள் வைத்து இருப்பது தெரியவந்தது.

    இந்த வங்கிக்கணக்குகள் பெரும்பாலும் மற்றொருவரின் ஆவணங்கள் மூலம் தொடங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.

    இந்த கணக்குகளில் இருந்து காசோலை, ஏ.டி.எம். மற்றும் டிஜிட்டல் முறையில் பணத்தை மோசடிதாரர்கள் வெளியே எடுத்து வந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மேற்படி வங்கிக்கணக்குகள் பற்றிய விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மைய அதிகாரிகள் அறிக்கையாக வழங்கினர்.

    அத்துடன் பிரதமர் அலுவலகத்துக்கும் சமீபத்தில் வழங்கினர். அப்போது சுமார் 3 மணி நேரம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இத்தகைய வங்கிக்கணக்குகளை கையாளுவதில் வங்கித்துறையின் குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    குறிப்பாக இந்த கணக்குகளை தொடங்கியதில் சம்பந்தப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க அறிவுறுத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மைய அதிகாரிகள், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகத்தை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் இந்த வங்கிக் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச போலீசாருக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் 4½ லட்சம் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கி உள்ளது.

    இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10 ஆயிரம் கணக்குகள், கனரா வங்கியில் 7 ஆயிரம், கோடக் மகேந்திரா வங்கியில் 6 ஆயிரம், ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியில் 5 ஆயிரம் கணக்குகளும் அடங்கும்.

    இவ்வாறு ஆன்லைன் மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது இந்திய வங்கித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

    திருட்டு சம்பவங்களில் பறிமுதல் செய்யப்படும் பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதில் கர்நாடக போலீசார் சிறப்பாக செயல்படுவதாக கூறப்பட்டு உள்ளது.
    பெங்களூரு:

    டெல்லியில் உள்ள இந்திய போலீஸ் அறக்கட்டளை மாநில போலீஸ் துறைகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து அதற்கு தரவரிசை பட்டியலை அளித்து வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டுக்கான போலீஸ் துறையின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து இந்திய போலீஸ் அறக்கட்டளை தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.

    அதில் சிறப்பான முறையில் சேவை செய்த வகையில் ஆந்திர போலீஸ் துறை முதல் இடத்தை பிடித்து உள்ளது. தெலுங்கானா 2-வது இடத்தையும், கேரளா 4-வது இடத்தையும் பிடித்து உள்ளது. கர்நாடக போலீஸ் துறை 14-வது இடத்தில் உள்ளது.

    ஆனால் பதற்றம் நிறைந்த பகுதியில் சிறப்பான முறையில் சேவையாற்றும் வகையில் கர்நாடக போலீஸ் துறைக்கு 11-வது இடம் கிடைத்து உள்ளது. கலவரம் நடக்கும் போது அதை கர்நாடக போலீசார் சிறப்பான முறையில் கையாளுவதாக இந்திய போலீஸ் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.

    புகார்

    போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களை மரியாதையாகவும், பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதிலும், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதிலும் கர்நாடக போலீசார் சிறந்து விளங்குவதாகவும் அறக்கட்டளை கூறியுள்ளது.

    சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதில் கர்நாடக போலீஸ் துறை 10-வது இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் கொள்ளை, திருட்டு சம்பவங்களில் பறிமுதல் செய்யப்படும் பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதில் கர்நாடக போலீசார் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் கூறப்பட்டு உள்ளது.



    கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2020-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 1,340 சதவீதம் அதிகரித்து உள்ளது.
    பெங்களூரு:

    இன்றைய நவீன காலக்கட்டத்தில் செல்போனின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆன்ட்ராய்டு செல்போன் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனே கதி என்று கிடக்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால், நாட்டில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதுவும், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும்.

    நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவி, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். இதனால் செல்போன் பயன்பாடு மிகவும் அதிகரித்ததால் அது சைபர் குற்றங்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.

    அத்துடன் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றதால், ஏழை குழந்தைகளுக்கும் ஆண்ட்ராய்டு செல்போன் கிடைத்தது. ஆன்லைன் வகுப்புகளை தவிர, குழந்தைகள் செல்போனில் அதிக நேரம் செலவிட தொடங்கினார்கள். ஆன்லைன் வகுப்புகளை தவிர வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டராகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்த தொடங்கினார்கள். இது தான் சைபர் குற்றங்களுக்கு அடிகோளாய் அமைந்தது.

    தேசிய குற்ற ஆவண காப்பகம் நடத்திய ஆய்வில் கடந்த 2020-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களில் கர்நாடகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அந்த காலக்கட்டத்தில் கர்நாடகத்தில் குழந்தைகளுக்கு எதிராக 144 சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் 207 வழக்குகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 197 வழக்குகளுடன் உத்தரபிரதேசம் 2-வது இடத்திலும் உள்ளது. 126 வழக்குகளுடன் கேரளா 4-வது இடத்திலும், 71 வழக்குகளுடன் ஒடிசா 5-வது இடத்திலும் உள்ளது.

    கர்நாடகத்தில் பதிவாகி உள்ள 144 சைபர் குற்ற வழக்குகளில் 122 வழக்குகள் பாலியல் சம்பந்தப்பட்டவை என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாகும். குழந்தைகள் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி கிடப்பதால், இதனை பயன்படுத்தி கொள்ளும் காமகொடூரர்கள் தங்கள் காமவலைகளை குழந்தைகள் மீது வீசுகிறார்கள். இதனால் தான் பாலியல் ரீதியான சைபர் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது.

    கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2020-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 1,340 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த வழக்கு நடப்பாண்டில் இன்னும் அதிகரிக்கும் என்றுஅஞ்சப்படுகிறது.

    குழந்தைகள் உரிமை அறக்கட்டளை இயக்குனர் கூறுகையில், ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளின் கைகளில் ஆண்ட்ராய்டு செல்போன் கிடைத்துள்ளது. குழந்தைகள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நிறுத்த வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்காக இணையத்தை அதிகளவு பயன்படுத்தும் குழந்தைகள், இத்தகைய சைபர் குற்றங்களில் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சைபர் குற்றங்களுக்குள்ளாவது கவலை அளிக்கிறது. சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் படங்களை பகிரும் பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இது தான் சைபர் குற்றவாளிகளை குற்றங்களில் ஈடுபட தூண்டுகிறது என்றார்.

    பெங்களூரு மாநகர துணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் என்னென்ன விஷயங்களை பகிருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் என்ன செய்கிறார்கள் என்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் தெரியாத நபர்களுடன் உரையாடல், தொலைபேசி எண், முகவரி உள்பட தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வது போன்றவை சைபர் குற்றங்களில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்றார்.



    ×