என் மலர்
நீங்கள் தேடியது "Dalit woman"
- தண்ணீர் தொட்டி மாட்டு மூத்திரத்தால் சுத்தம் செய்யப்பட்டதாக தகவல்.
- தலித் பெண்ணை அடையாளம் காண உள்ளூர் நிர்வாகம் முயற்சி.
சாமராஜநகர்:
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த தலித் பெண் ஒருவர், உயர் சாதியினர் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள குழாயை பயன்படுத்தி தண்ணீர் குடித்தார். இதை கண்ட அங்கிருந்த சிலர் அந்த தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி விட்டு மாட்டு மூத்திரத்தால் சுத்திகரித்ததாக கூறப்படுகிறது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உள்ளூர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தண்ணீர் தொட்டி மாட்டு மூத்திரத்தால் சுத்தம் செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அந்த பகுதி வட்டாட்சியர் பஸ்வராஜ் கூறியுள்ளார்.
தண்ணீர் தொட்டியில் அந்த பெண் தண்ணீர் குடிப்பதை யாரும் பார்க்கவில்லை, இதுவரை அவர் யார் என்பது தெரியவில்லை, நாங்கள் அவளை அடையாளம் காண முயற்சிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பெண் கண்டு பிடிக்கப்பட்டவுடன் தீண்டாமை குறித்த வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே அந்த கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளில் அனைவரும் தண்ணீர் குடிக்கலாம் என்று கிராம ஊழியர்கள் எழுதி வைத்தனர். மேலும் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிராம மக்களை அங்குள்ள அனைத்து தொட்டிகளுக்கும் அழைத்துச் சென்ற உள்ளூர் அதிகாரிகள் சிலர் தண்ணீர் குடிக்க வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ரூ.1500 கடன் தொகையை வட்டியுடன் முழுவதும் செலுத்தி விட்டார்
- காவல் அதிகாரிகளின் விசாரணையால் ஆத்திரமடைந்தார் பிரமோத்
பீகாரின் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ளது குஸ்ருபூர் நகரம். இங்குள்ள மோஷிம்பூர் கிராமத்தில் வசிக்கும் ஒரு தலித் பெண்ணிற்கு பண நெருக்கடி ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு பண தட்டுப்பாட்டால் அதே ஊரில் வசிக்கும் பிரமோத் சிங் என்பவரிடம் ரூ.1500 கடனாக பெற்றார். இதற்கான வட்டி தொகையுடன் கடனை முழுவதுமாக அவர் திருப்பி செலுத்தி விட்டார். ஆனால், பிரமோத் மற்றும் அவரது மகன் அன்சு சிங் இருவரும் அந்த தலித் பெண் மேலும் வட்டி செலுத்த வேண்டும் என கூறி வற்புறுத்தி வந்தனர். ஆனால், அப்பெண்மணி இதற்கு மறுத்து வந்தார்.
ஒரு கட்டத்தில் பிரமோத் சிங் அப்பெண்ணை பணத்தை தரா விட்டால் நிர்வாணமாக்கி ஊரில் நடக்க விடுவதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து அப்பெண்மணி குஸ்ருபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் அதிகாரிகள் பிரமோத்தை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். இதனையடுத்து, நேற்று முன் தினம் பிரமோத் காவல் நிலையம் சென்றார்.
இதில் ஆத்திரமடைந்த பிரமோத் அன்றிரவு தனது நண்பர்கள் சிலருடன் அப்பெண்மணியின் வீட்டிற்கு சென்று அவரை கடத்தி, தனது வீட்டிற்கு பலவந்தமாக தூக்கி வந்தார். பிறகு அவரை தாக்கி, ஆடைகளை அவிழ்த்து அவமானப்படுத்தினார். இதிலும் ஆத்திரம் தீராத பிரமோத், தனது மகனை அழைத்து அப்பெண்ணின் வாயில் சிறுநீர் கழிக்க வைத்தார்.
அங்கிருந்து எப்படியோ தப்பித்த அப்பெண் தனது உறவினர்களிடன் நடந்ததை கூறினார். இதனையடுத்து அவர்கள் காவல்நிலையத்தில் இது குறித்து புகாரளித்தனர்.
அந்த பெண்மணியை உடனடியாக மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்தனர்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை தேடும் வேட்டை நடைபெறுவதாகவும் காவல்நிலைய அதிகாரி சியாராம் யாதவ் கூறினார்.
- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கா விட்டால் என்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன்.
- பகவான் ராமர், அன்னை சீதா, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 22 வயது தலித் பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்காவிட்டால், தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று கண்ணீர் விட்டு அழுதபடி பைசாபாத் எம்.பி. அவதேஷ் பிரசாத் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் ஜனவரி 31 அன்று மாலையில் காணாமல் போன தலித் பெண் அடுத்த நாள் ஒரு வாய்க்கால் அருகே உடலில் துணியின்றி சடலமாக மீட்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் இருந்து உயிரிழந்தவரின் இரத்தக் கறை படிந்த ஆடைகளும் மீட்கப்பட்டன.
கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பைசாபாத் எம்பி அவதேஷ் பிரசாத், "என்னை டெல்லிக்கு செல்ல விடுங்கள். இதை நான் மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கா விட்டால் என்னுடைய எம்.பி. பதவியை நான் ராஜினாமா செய்வேன். பகவான் ராமர், அன்னை சீதா, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?" என்று அழுதபடியே கூறினார்.
சமாஜ்வாதி கட்சி எம்.பி. துக்கம் தாளாமல் அழுது கொண்டிருக்க மற்ற தலைவர்கள் அவரை சமாதானப்படுத்த முயலும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டம் குராரா என்ற ஊரில் தலித் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் உயர் ஜாதி பெண்ணை காதலித்து வந்தார்.
இதனால் உயர் ஜாதி சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த வாலிபரை எச்சரித்தனர். ஆனால், அதை கண்டுகொள்ளாத அவர் உயர் ஜாதி பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்தார்.
இதற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று உயர் ஜாதியினர் முடிவு செய்தனர். சம்பவத்தன்று உயர் ஜாதியை சேர்ந்த 4 பேர் அந்த வாலிபரின் உறவு பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். தனியாக இருந்த அவரை 4 பேரும் கூட்டாக கற்பழித்தனர்.
இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம என மிரட்டிவிட்டு சென்றனர். ஆனால், நடந்த சம்பவத்தை கணவரிடமும், உறவினரிடமும் அந்த பெண் கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் உயர் ஜாதியினரிடம் சென்று சண்டை போட்டார். இதனால் அவர்களுக்கு மேலும் ஆத்திரம் ஏற்பட்டது.
ஏற்கனவே கற்பழிப்பில் ஈடுபட்ட 4 பேரும் மறுபடியும் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். நடந்த விஷயத்தை எப்படி வெளியே சொல்லலாம்? என்று கூறி அவரை அடித்து உதைத்தனர்.
பின்னர் அந்த பெண்ணை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்தனர். அவரை நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அந்த காட்சியை ஊரே நின்று வேடிக்கை பார்த்தது. யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை.
இது சம்பந்தமாக பெண்ணின் கணவர் குராரா போலீசுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உள்ளூர் பிரமுகர்கள் சிலர் போலீசாரை அங்கு வரவிடாமல் தடுத்துவிட்டனர். இதனால் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஜய்குமாரிடம் சென்று புகார் கொடுத்தார்.
அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த பெண்ணை கோரி லால், சோட்டாலால், ஜெய்கிஷோர், ஹாகன் ஆகிய வாலிபர்கள் கற்பழித்தது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் நடந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் குராரா போலீசார் மீது துறை ரீதியான விசாரணைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக சமாஜ்வாடி கட்சி செய்தி தொடர்பாளர் சுனில்சிங் கூறும் போது, உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.
பா.ஜ.க. ஆட்சி வந்த பிறகு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று கூறினார்.