என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DCvRR"

    • நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரை சதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • சூப்பர் ஓவரில் டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல். 2025 தொடரின் 32-வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்னும், கே.எல்.ராகுல் 38 ரன்னும், அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்னும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டும் தீக்ஷனா, ஹசரங்கா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக ஆடியது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.

    சஞ்சு சாம்சன் 31 ரன்னில் ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரை சதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் சார்பில் ஹெட்மயர், பராக், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா ஏன் சூப்பர் ஓவரில் களமிறக்கப்படவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக பேசிய நிதிஷ் ராணா, " சூப்பர் ஓவரில் யாரை அனுப்ப வேண்டும் என்று அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும். இது தனிப்பட்ட நபரின் முடிவு அல்ல. ஹெட்மயர் மற்றும் பராக்கை அனுப்பியது நல்ல முடிவு தான். ஹெட்மயர் எங்கள் அணியின் ஃபினிஷர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார். 

    • டெல்லிக்கு எதிராக 20 ஆவது ஓவரை வீசிய சந்தீப் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவரை வீசினார்.
    • அந்த ஓவரில் 4 வைடுகள், ஒரு நோ பால் என மொத்தமாக 11 பந்துகள் வீசினார்.

    ஐ.பி.எல். 2025 தொடரின் 32-வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக 20 ஆவது ஓவரை வீசிய சந்தீப் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவரை வீசினார். அந்த ஓவரில் 4 வைடுகள், ஒரு நோ பால் என மொத்தமாக 11 பந்துகள் வீசினார்.

    இதற்கு முன்னதாக ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் ஒரே ஓவரில் 11 பந்துகள் வீசியுள்ளனர்.

    • டெல்லி அணிக்கு 20-வது ஓவரில் நின்று மிட்செல் ஸ்டார்க் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்.
    • இந்த இலக்கு என்பது எட்டக்கூடிய இலக்குதான் என தெரிவித்தார் சஞ்சு சாம்சன்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்னும், கே.எல்.ராகுல் 38 ரன்னும், அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால், நிதிஷ் ரானா அரை சதம் கடந்து அவுட்டாகினர்.

    இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தோல்விக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:

    காயம் ஏற்பட்டதால் என்னால் பேட் செய்ய முடியவில்லை. இதனால் நான் களத்திற்கு மீண்டும் வரவில்லை. தற்போது நல்ல முறையில் உணர்கின்றேன். என் உடல் நலம் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்துவிட்டு அடுத்த போட்டியில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

    உண்மையில் நாங்கள் நன்றாகத்தான் பந்து வீசினோம். போட்டியின் சில கட்டத்தில் டெல்லி அணி அபாரமாக விளையாடினார்கள். எனினும் அதையும் சமாளித்து நாங்கள் பேட்டிங் செய்தோம்.

    என்னுடைய பீல்டர்களுக்கும், பவுலர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அணி வீரர்கள் இன்று களத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த இலக்கு என்பது எட்டக்கூடிய இலக்குதான். அந்த அளவுக்கு எங்கள் அணியில் பலமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். நாங்கள் பவர் பிளேவிலும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தோம்.

    ஆனால் டெல்லி அணியில் இடம் பெற்றிருக்கும் மிட்செல் ஸ்டார்க் என்ற ஒரே வீரரால் தான் நாங்கள் தோற்றோம். உலகின் மிகச் சிறந்த பவுலர் என்று மீண்டும் ஸ்டார்க் நிரூபித்து இருக்கின்றார். இதனால் மிட்செல் ஸ்டார்க்கிற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். டெல்லி அணிக்கு 20-வது ஓவரில் நின்று மிட்செல் ஸ்டார்க் தான் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்.

    நாங்கள் பேட்டை கடுமையாக சுற்றி ரன்கள் அடிக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் போட்டியை எங்களிடமிருந்து ஸ்டார்க் கவர்ந்து சென்று விட்டார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் எங்கள் அணியில் ஒரு நல்ல உத்வேகம் கிடைத்திருக்கும். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 2025 தொடரின் 32-வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்னும், கே.எல்.ராகுல் 38 ரன்னும், அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்னும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டும் தீக்ஷனா, ஹசரங்கா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக ஆடியது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.

    சஞ்சு சாம்சன் 31 ரன்னில் ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரை சதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற 5வது வெற்றி இதுவாகும். புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பிடித்தது டெல்லி. ராஜஸ்தான் அணி பெற்ற 5வது தோல்வி இதுவாகும்.

    • இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
    • முதலில் ஆடிய ராஜஸ்தான் 199 ரன்கள் குவித்தது.

    கவுகாத்தி:

    16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    இன்று நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் அதிரடியில் மிரட்டினர்.

    இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ரன்களை சேர்த்த்து. ஜாஸ் பட்லர் 51 பந்தில் 71 ரன்னும். ஜெய்ஸ்வால் 31 பந்தில் 60 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஹெட்மயர் சிக்சர்களாக விளாசினார். ஹெட்மயர் 4 சிக்சர் உள்பட 39 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை குவித்தது. இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடுகிறது.



    • முதலில் ஆடிய ராஜஸ்தான் 199 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய டெல்லி 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    கவுகாத்தி:

    16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    இன்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை குவித்தது. ஜாஸ் பட்லர் 51 பந்தில் 71 ரன்னும். ஜெய்ஸ்வால் 31 பந்தில் 60 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஹெட்மயர் 4 சிக்சர் உள்பட 39 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே டெல்லி ரன் கணக்கை தொடங்குவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. பிரிதிவ் ஷா, மணீஷ் பாண்டே டக் அவுட்டாகினர். ரூசோவ் 14 ரன்னும், அக்சர் படேல் 2ரன்னும், ரோவ்மென் பாவெல் 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். லலித் யாதவ் 38 ரன்கள் எடுத்தார்.

    தொடக்க ஆட்டக்காரர் வார்னர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், டெல்லி அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ராஜஸ்தான் அணி சார்பில் போல்ட், சஹல் தலா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×