என் மலர்
நீங்கள் தேடியது "Delhi AIIMS"
- லாலு பிரசாத்திற்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
- மேல் சிகிச்சைக்காக டெல்லி செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு (76 வயது) திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. லாலு பிரசாத்திற்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரின் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்ததால் கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று காலை அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
எனவே பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக டெல்லி செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு லாலு பிரசாத் யாதவ் புறப்பட்டுச் சென்றார். இரவு ஏழு மணிக்கு டெல்லிக்கு விமானம் மூலம் லாலு புறப்பட்டார்.
- ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அரை நாள் விடுமுறை அறிவித்தது.
- மருத்துவமனையின் இந்த அறிவிப்பிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
புதுடெல்லி:
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்கள் பொது விடுமுறை அறிவித்துள்ளன.
இதற்கிடையே, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நாளை மதியம் 2.30 மணிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இந்த அறிவிப்பிற்கு கடும் கண்டனம் எழுந்தது.
இதையடுத்து, நாளை அறிவிக்கப்பட்டிருந்த அரைநாள் விடுப்பை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை திரும்பப் பெற்றது. மருத்துவமனை நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவித்துள்ளது.
இதேபோல், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அரைநாள் மூடப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் நடைபெறும் என மருத்துவமனை தரப்பில் கோர்ட்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும், நாளை திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஏதும் இல்லை என மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
ஜிப்மரில் அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் இந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
- அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தன்கரை பார்க்க ஜேபி நட்டா விரைத்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான தன்கருக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலியும், உடல் அசைவுகர்யமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை தற்போதைக்கு சீராக உள்ளதாகவும் அவரை கண்காணித்து வருகிறோம் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கார்டியாலஜி துறை தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெற்றுவரும் தன்கரை பார்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா விரைத்துள்ளார்.
