என் மலர்
நீங்கள் தேடியது "delhi highcourt"
- போலீசார் பறிமுதல் செய்த பணத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கூறப்படுகிறது.
- இந்த குழுவினர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விரிவான விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.
புதுடெல்லி:
டெல்லி ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகளில் ஒருவரான யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் கடந்த 14-ந் தேதி இரவு திடீரென தீப்பிடித்தது.
இது குறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். அப்போது அந்த வீட்டின் ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
போலீசார் பறிமுதல் செய்த அந்த பணத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேநேரம் ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதித்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த பிரச்சனை நாடாளுமன்றத்திலும் பலமாக எதிரொலித்தது. குறிப்பாக மாநிலங்களவையில் இந்த பிரச்சனையை காங்கிரஸ் கட்சி எழுப்பி கவலை தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கொலீஜியம் உத்தரவிட்டது.
அதன்படி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.கே.உபத்யாய் விசாரணை நடத்தினார். குறிப்பாக பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விசாரணை நடந்தது.
பின்னர் இது தொடர்பாக விரிவான அறிக்கையை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அவர் சமர்ப்பித்தார்.
அதன் அடிப்படையில், பணம் சிக்கிய விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நேற்று உத்தரவிட்டார்.
அதன்படி பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாசல பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடகா ஐகோர்ட்டு நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விரிவான விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.
மேலும் தற்போதைய நிலையில் ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சட்டப்பணிகள் எதையும் ஒதுக்கக்கூடாது என டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியையும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதில் உள்ளிட்ட ஆவணங்களையும் சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் பதிவேற்றி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக்கட்டுகள் எரிந்து நாசமானதாகவும், வீட்டில் மொத்தம் ரூ.37 கோடி அளவில் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
- சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம், இந்த அறிக்கையை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும்.
புதுடெல்லி:
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா. அவரது வீட்டில் கடந்த 14-ந்தேதி தீ விபத்தின்போது ஒரு அறையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டது. சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக்கட்டுகள் எரிந்து நாசமானதாகவும், வீட்டில் மொத்தம் ரூ.37 கோடி அளவில் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நீதிபதி வர்மா அலாகாபாத் ஐகோர்ட்டுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், இந்த விவகாரத்தில் விரிவான நீதி விசாரணை மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு சம்மதித்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.கே. உபத்யாய் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம், இந்த அறிக்கையை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும்.
- டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- ஹோலி கொண்டாட்டத்தின் போது நீதிபதி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் யஸ்வந்த் வர்மா. இவர் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். இதனால் அவர் டெல்லியில் ஒரு வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
சமீபத்தில் நீதிபதி யஸ்வந்த் வர்மா வெளியூருக்கு சென்று இருந்தார். அப்போது அவரது வீட்டில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பரவி மாடிக்கும் பரவியது. இதனால் அவர்கள் குடும்பத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு படை வீரர்கள் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. பிறகு தீயணைப்பு படை வீரர்கள் நீதிபதி வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று முழுமையாக தீ அணைக்கப்பட்டு விட்டதா? என்று ஆய்வு செய்தனர்.
தீயணைப்பு வீரர்கள் ஆய்வின்போது அறைகளில் சில பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதை கண்டதும் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இதுபற்றி விசாரணை நடத்தினார். பிறகு கொலிஜியம் உறுப்பினர்களுடனும் ஆலோசனை செய்தார்.
அதன் அடிப்படையில் டெல்லி ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து யஸ்வந்த் வர்மா விடுவிக்கப்பட்டார். மீண்டும் அவர் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.
இதற்கிடையே, நீதிபதி வீட்டில் எரிந்து பணத்தின் மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தீயை அணைக்கும் பணியின்போது நீதிபதியின் வீட்டில் கத்தை, கத்தையாக பணம், நகைகளும் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், தீயணைப்பு வீரர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதில், நீதிபதி வீட்டில் ரூ.11 கோடி பணம் எரிந்து விட்டதாகவும், மேலும் ரூ.26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- பிரதமர் மோடி குறித்த பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
- ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.
புதுடெல்லி:
ராஜஸ்தானில் கடந்த மாதம் 22-ம் தேதி காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், பிரதமா் மோடி ஒரு அதிர்ஷ்டமில்லாதவர். மக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசைதிருப்பும் வேலையில் ஈடுபடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியை பிக்பாக்கெட் என கடுமையாக விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்தப் பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல. ராகுலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவோ, இதுபோன்ற பேச்சுகளை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்தவோ பாராளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது. ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கெஜ்ரிவாலை கைது செய்தனர்.
- 28-ந்தேதி (நாளை) வரை அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21-ந்தேதி கைது செய்தது. அவரை 28-ந்தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையே கைதை எதிர்த்தும், அமலாக்கத்துறை காவலில் வைத்துள்ளது சட்டவிரோதம் என்றும், உடனடியாக விடுதலை செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆம் ஆத்மி கட்சி மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று காலை நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறையின் காவல் நாளையுடன் முடியும் நிலையில் இன்றே உத்தரவு பிறப்பிக்க முதல்-மந்திரி கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கை விடுத்தது.
அமலாக்கத்துறை தரப்பு கூறும்போது, கெஜ்ரிவாலின் மனுவின் நகல் நேற்றுதான் கிடைத்தது. எனவே விரிவான பதில் அளிக்க 3 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.
இதையடுத்து கைது நடவடிக்கைக்கு எதிராக இடைக்கால நிவாரணம் வழங்க வழக்கை முன் கூட்டியே விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
- அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லி கோர்ட்டில் கெஜ்ரிவால் ஆஜரானார்.
- டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.
புதுடெல்லி:
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி கைதுசெய்தனர். தொடர்ந்து 22-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவாலை 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, கெஜ்ரிவாலின் காவல் இன்றுடன் முடிந்தநிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.
கோர்ட்டில் ஆஜராவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், இது ஒரு அரசியல் சூழ்ச்சி. இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில், கெஜ்ரிவாலிடம் மேலும் விசாரணை நடத்த ஒரு வார காலம் அவகாசம் கேட்டது அமலாக்கத்துறை. அப்போது சட்டத்தைஅ விட முதல் மந்திரி மேலானவர் இல்லை என வாதமிட்டது. இதையடுத்து தீர்ப்பை தள்ளிவைத்தார் நீதிபதி.
Enforcement Directorate tells the court, "A CM is not above the law." https://t.co/Sdq1l4IXs6
— ANI (@ANI) March 28, 2024
- அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
- அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாததால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
டெல்லி மாநில முதல்வராக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அவர் திகார் சிறையில் உள்ளார்.
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதனால் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்த விசயத்தில் நாங்கள் தலையிட முடியாது. இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர்தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்ததோடு அந்த மனுவை தள்ளுபடி செய்து.
ஆனால் மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை எனத் தெரிவித்தது. இதற்கிடையே தொடர்ந்து கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் கோபம் அடைந்த டெல்லி உயர்நீதிமன்றம், "இந்த விசயத்தில் நாங்கள் ஒருமுறை உத்தரவு பிறப்பித்துவிட்டோம். அதன்பிறகு தொடர்ந்து வழக்கு தொடரக்கூடாது. அடுத்தடுத்த தொடர்ச்சிகள் இருப்பதற்கு இது ஒன்றும் ஜேம்ஸ் பாண்டு படம் அல்ல" என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் அமலாக்கத்துறை காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வழக்கு, ஜாமின் மனு ஆகியவற்றை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
- ரோஸ் அவென்யு கோர்ட் நேற்று கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது.
- இதனால் அவர் சிறையில் இருந்து வெளிவருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
புதுடெல்லி:
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று, ரோஸ் அவென்யு கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதனால் இன்று சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜாமின் வழங்கியதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரிக்கும் வரை ஜாமின் நிறுத்தி வைக்கப்படுகிறது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்தது. சுதிர் குமார் ஜெயின் மற்றும் ரவீந்திர டுடேஜா கொண்ட பெஞ்ச் முன் உடனடியாக இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பு தங்கள் வாதங்களை முன் வைத்தது. அப்போது, சிறப்பு நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை முன் வைக்க வாய்ப்பு வழங்கவில்லை. அமலாக்கத் துறையின் ஆவணங்களை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரிசீலிக்கவில்லை. டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் ஜாமின் உத்தரவு அமைந்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் தவறு உள்ளது என தெரிவித்தனர்.
இதையடுத்து, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.
பாராளுமன்ற தேர்தலின்போது சுப்ரீம் கோர்ட் கெஜ்ரிவாலுக்கு சுமார் 20 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
- டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரல்.
சத் பூஜை என்பது உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட 4 நாள் சடங்குகளை உள்ளடக்கியது.
இந்த ஆண்டுக்கான சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
இன்று பக்தர்கள் நதிக்கரை, கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி உணவை எடுத்துக்கொள்கிறார்கள். 2-வது நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் ரசாயன நச்சு நுரை மிதந்து செல்லும் மாசடைந்த யமுனை ஆற்றில் பெண்கள் சத் பூஜைகாக நீராடியுள்ளனர்.
ரசாயன நுரையுடன் யமுனை ஆற்றில் பெண்கள் நீராடிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் பொதுமக்கள் நீராட டெல்லி அரசு தடை விதித்தது.
இந்த தடையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பொதுநல மனுவை நிராகரித்த நீதிமன்றம், யமுனை நதி மிகவும் மாசடைந்து இருப்பதால் அங்கு நீராடும் மக்களுக்கு உடல் நலப்பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது ஆதலால் பாதுகாப்பான இடங்களில் சத் பூஜை கொண்டாடுங்கள் என்று கருத்து தெரிவித்தது.