என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delusional"

    • வியாபாரி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருே உள்ள கூமாபட்டியை சேர்ந்தவர் ஜெகபர்சாதிக் (42). இவர் திருப்பூரில் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதத்தில் குடும்பத்துடன் கூமாபட்டிக்கு வந்தார். இந்த நிலையில் ராஜபாளையம் செல்வதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து ஜெகபர்சாதிக்கின் மனைவி அபிராஜ் பேகம் கொடுத்தபுகாரின்பேரில் கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவி மாயமானார்.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகேயுள்ள குன்னூர் ராஜீவ் காலனியை சேர்ந்த 17 வயதுடைய பெண் கிருஷ்ணன் கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் அரசு இறுதித்தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் குடும்பத்தினர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த மாணவி சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி நகரை சேர்ந்தவர் கணேஷ்கு மார்(33). கடந்த சில மாதங்களாக இவருக்கும், இவரது மனை விக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த கணேஷ்குமார் திடீரென மாயமானார். சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×